ETV Bharat / sports

'கூடிய விரைவில் இந்தியாவில் விளையாட்டு போட்டிகள் தொடங்கும்' - கிரண் ரிஜிஜூ

author img

By

Published : Jun 8, 2020, 6:59 PM IST

இந்தியாவில் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் சில விளையாட்டு நிகழ்வுகள் தொடங்கும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

i-want-sporting-activities-to-begin-as-soon-as-possible-kiren-rijiju
i-want-sporting-activities-to-begin-as-soon-as-possible-kiren-rijiju

கரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் இதுவரை இரண்டரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் இப்பிறப்பின் அச்சுறுத்தல் காரணமாக இன்று நடைபெறவிருந்த ஐபிஎல் தொடர் உள்ளிட்ட பல்வேறு வகையான முக்கிய விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்தியாவின் நட்சத்திர டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ராவுடன் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ இன்ஸ்டாகிராம் நேரலையில் இணைந்து உரையாடினார். அப்போது பேசிய அமைச்சர் மீண்டும் விளையாட்டு போட்டிகள் தொடங்கும் என்று தெரிவித்தார்.

நட்சத்திர டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிக்க பத்ரா
நட்சத்திர டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா

இது குறித்து பேசிய கிரண் ரிஜிஜூ, ”தற்போது கரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ள விளையாட்டுப் போட்டிகள் மீண்டும் தொடங்கும் என நான் நம்புகிறேன். மேலும் இந்த இரண்டு மாதத்திற்குள்ளாகவே ஒரு சில விளையாட்டு போட்டிகள் நடத்தவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு ஏற்ப நாங்கள் அனைத்து விதமான ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.

தற்போது விளையாட்டு வீரர்கள் தங்களது பயிற்சிகளுக்கு திரும்ப அனுமதியை வழங்கி உள்ளோம். இருப்பினும் அனைத்து வகையான விளையாட்டு வீரர்களும் தங்களது விளையாட்டுப் போட்டிகளுக்குத் திரும்ப, தேவையான அனைத்து வகையான முன்னேற்பாடுகளையும் நாங்கள் செய்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

கரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் இதுவரை இரண்டரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் இப்பிறப்பின் அச்சுறுத்தல் காரணமாக இன்று நடைபெறவிருந்த ஐபிஎல் தொடர் உள்ளிட்ட பல்வேறு வகையான முக்கிய விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்தியாவின் நட்சத்திர டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ராவுடன் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ இன்ஸ்டாகிராம் நேரலையில் இணைந்து உரையாடினார். அப்போது பேசிய அமைச்சர் மீண்டும் விளையாட்டு போட்டிகள் தொடங்கும் என்று தெரிவித்தார்.

நட்சத்திர டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிக்க பத்ரா
நட்சத்திர டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா

இது குறித்து பேசிய கிரண் ரிஜிஜூ, ”தற்போது கரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ள விளையாட்டுப் போட்டிகள் மீண்டும் தொடங்கும் என நான் நம்புகிறேன். மேலும் இந்த இரண்டு மாதத்திற்குள்ளாகவே ஒரு சில விளையாட்டு போட்டிகள் நடத்தவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு ஏற்ப நாங்கள் அனைத்து விதமான ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.

தற்போது விளையாட்டு வீரர்கள் தங்களது பயிற்சிகளுக்கு திரும்ப அனுமதியை வழங்கி உள்ளோம். இருப்பினும் அனைத்து வகையான விளையாட்டு வீரர்களும் தங்களது விளையாட்டுப் போட்டிகளுக்குத் திரும்ப, தேவையான அனைத்து வகையான முன்னேற்பாடுகளையும் நாங்கள் செய்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.