ETV Bharat / sports

'சீரி ஏ: மே 4இல் இருந்து வீரர்களின் பயிற்சி தொடங்கும்'

author img

By

Published : Apr 27, 2020, 7:07 PM IST

கரோனா வைரஸ் காரணமாக, இத்தாலியில் நடப்பு சீரி ஏ சீசன் கால்பந்துப்போட்டி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், மே நான்காம் தேதியிலிருந்து அனைத்து அணிகளின் வீரர்களும் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டுப் பிரதமர் கியூசெப் கோன்டே தெரிவித்துள்ளார்.

Serie A clubs set to resume individual training of players from May 4
Serie A clubs set to resume individual training of players from May 4

கரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காரணமாக கால்பந்து, கிரிக்கெட், டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இத்தொற்றின் தாக்கம் ஐரோப்பிய நாடான இத்தாலியில் அதிகமாக இருந்ததால், மார்ச் முதல் வாரத்திலிருந்து நடக்கயிருந்த சீரி ஏ சீசன் கால்பந்துப்போட்டி தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக, இத்தாலி முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. கரோனா வைரஸால் அந்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களாக அதிகரித்து வந்த பாதிப்புகளும், உயிரிழப்புகளும் சமீப நாள்களாக குறையத்தொடங்கியுள்ளன. இதுவரை இத்தாலியில் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 675 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 64 ஆயிரத்து 928 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 26 ஆயிரத்து 644 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் சமீப நாள்களாக கரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் இருப்பதால், மே 4ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என அந்நாட்டு பிரதமர் கியூசெப் கோன்டே தெரவித்துள்ளார். மேலும் அவர், மே 4ஆம் தேதியிலிருந்து சீரி ஏ கிளப் கால்பந்து அணிகளின் வீரர்கள் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறினார்.

இத்தாலி பிரதமர் கியூசெப் கோன்டே

இது குறித்து அவர் கூறுகையில், 'மே நான்காம் தேதி முதல் இத்தாலியில் உள்ள தொழில்முறை விளையாட்டு வீரர்கள் அனைவரும் பார்வையாளர்களின்றி மூடப்பட்ட மைதானத்தில் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து, பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். முதல் இரண்டு வாரங்கள் வீரர்களுக்கான பயிற்சிகள் நடைபெற்ற பின், அணிகளுக்கான பயிற்சி முகாம்கள் மே 18ஆம் தேதியிலிருந்து தொடங்கப்படும்' என்றார்.

கரோனா வைரஸ் காரணமாக நடப்பு சீரி ஏ சீசன் தள்ளிவைக்கப்படுவதற்கு முன், புள்ளிப்பட்டியலில் நடப்பு சாம்பியன் யுவென்டஸ் அணி 26 போட்டிகளில் 63 புள்ளிகளுடன் முதலிடத்திலும் லாசியோ அணி 62 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தக் கோடையில் லா லிகா தொடங்கப்படாது: ஸ்பெயின் சுகாதாரத் துறை அமைச்சர்

கரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காரணமாக கால்பந்து, கிரிக்கெட், டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இத்தொற்றின் தாக்கம் ஐரோப்பிய நாடான இத்தாலியில் அதிகமாக இருந்ததால், மார்ச் முதல் வாரத்திலிருந்து நடக்கயிருந்த சீரி ஏ சீசன் கால்பந்துப்போட்டி தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக, இத்தாலி முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. கரோனா வைரஸால் அந்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களாக அதிகரித்து வந்த பாதிப்புகளும், உயிரிழப்புகளும் சமீப நாள்களாக குறையத்தொடங்கியுள்ளன. இதுவரை இத்தாலியில் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 675 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 64 ஆயிரத்து 928 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 26 ஆயிரத்து 644 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் சமீப நாள்களாக கரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் இருப்பதால், மே 4ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என அந்நாட்டு பிரதமர் கியூசெப் கோன்டே தெரவித்துள்ளார். மேலும் அவர், மே 4ஆம் தேதியிலிருந்து சீரி ஏ கிளப் கால்பந்து அணிகளின் வீரர்கள் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறினார்.

இத்தாலி பிரதமர் கியூசெப் கோன்டே

இது குறித்து அவர் கூறுகையில், 'மே நான்காம் தேதி முதல் இத்தாலியில் உள்ள தொழில்முறை விளையாட்டு வீரர்கள் அனைவரும் பார்வையாளர்களின்றி மூடப்பட்ட மைதானத்தில் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து, பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். முதல் இரண்டு வாரங்கள் வீரர்களுக்கான பயிற்சிகள் நடைபெற்ற பின், அணிகளுக்கான பயிற்சி முகாம்கள் மே 18ஆம் தேதியிலிருந்து தொடங்கப்படும்' என்றார்.

கரோனா வைரஸ் காரணமாக நடப்பு சீரி ஏ சீசன் தள்ளிவைக்கப்படுவதற்கு முன், புள்ளிப்பட்டியலில் நடப்பு சாம்பியன் யுவென்டஸ் அணி 26 போட்டிகளில் 63 புள்ளிகளுடன் முதலிடத்திலும் லாசியோ அணி 62 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தக் கோடையில் லா லிகா தொடங்கப்படாது: ஸ்பெயின் சுகாதாரத் துறை அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.