ETV Bharat / sports

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் திசாரா பெரேரா

author img

By

Published : May 4, 2021, 9:40 AM IST

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான திசாரா பெரேரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Perera
Perera

இலங்கையின் கிரிக்கெட் அணி வீரர் திசாரா பெரேரா (32). அந்த அணியில் அதிரடி ஆட்ட நாயகனாகவும், ஆல்ரவுண்டராகவும் விளங்கி வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திசாரா பெரேரா அறிவித்துள்ளார். இவர் இதுவரை 6 டெஸ்டுகள், 166 ஒரு நாள் போட்டி, 84 டி20போட்டிகளில் ஆடியுள்ளார். 2014ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை இலங்கை அணி வென்றபோதும் அந்த அணியில், திசாரா பெரேரா இடம் பெற்றிருந்தார். இவர் ஆட்டநாயகனாக மட்டுமல்லாது டி20 அணியின் கேட்டபனாகவும் இருந்துள்ளார்.

இலங்கையின் கிரிக்கெட் அணி வீரர் திசாரா பெரேரா (32). அந்த அணியில் அதிரடி ஆட்ட நாயகனாகவும், ஆல்ரவுண்டராகவும் விளங்கி வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திசாரா பெரேரா அறிவித்துள்ளார். இவர் இதுவரை 6 டெஸ்டுகள், 166 ஒரு நாள் போட்டி, 84 டி20போட்டிகளில் ஆடியுள்ளார். 2014ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை இலங்கை அணி வென்றபோதும் அந்த அணியில், திசாரா பெரேரா இடம் பெற்றிருந்தார். இவர் ஆட்டநாயகனாக மட்டுமல்லாது டி20 அணியின் கேட்டபனாகவும் இருந்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.