ETV Bharat / sports

ஹூடா அதிரடியால் தப்பிய பஞ்சாப்; சென்னை அணிக்கு 154 ரன்கள் இலக்கு!

author img

By

Published : Nov 1, 2020, 5:17 PM IST

சென்னை - பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 154 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

CSK vs KXIP match 1st innings
CSK vs KXIP match 1st innings

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசுவதாக முடிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் - மயங்க் அகர்வால் இணை சிறப்பான தொடக்கத்தை அமைத்து தந்தனர். இதில் மயங்க் அகர்வால் 26 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து கே.எல்.ராகுலும் 29 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

அவர்களைத் தொடர்ந்து வந்த கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரான், மந்தீப் சிங் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, பஞ்சாப் அணி தடுமாற்றத்தைச் சந்தித்தது.

பின்னர் களமிறங்கிய தீபக் ஹூடா, அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், அரைசதம் கடந்தும் அசத்தினார்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தீபக் ஹூடா 62 ரன்களை குவித்தார். சிஎஸ்கே அணி தரப்பில் இங்கிடி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையும் படிங்க: எல்.பி.எல்: 'கண்டி டஸ்கர்ஸ்' அணியில் இடம்பிடித்த இர்ஃபான் பதான்!

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசுவதாக முடிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் - மயங்க் அகர்வால் இணை சிறப்பான தொடக்கத்தை அமைத்து தந்தனர். இதில் மயங்க் அகர்வால் 26 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து கே.எல்.ராகுலும் 29 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

அவர்களைத் தொடர்ந்து வந்த கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரான், மந்தீப் சிங் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, பஞ்சாப் அணி தடுமாற்றத்தைச் சந்தித்தது.

பின்னர் களமிறங்கிய தீபக் ஹூடா, அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், அரைசதம் கடந்தும் அசத்தினார்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தீபக் ஹூடா 62 ரன்களை குவித்தார். சிஎஸ்கே அணி தரப்பில் இங்கிடி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையும் படிங்க: எல்.பி.எல்: 'கண்டி டஸ்கர்ஸ்' அணியில் இடம்பிடித்த இர்ஃபான் பதான்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.