பிரிஸ்டால் (இங்கிலாந்து): மித்தாலி ராஜ் தலைமையிலான இந்தியா அணி, ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி மோதும் மகளிர் ஒருநாள் தொடரின் முதல் போட்டி, பிரிஸ்டால் கவுண்டி மைதானத்தில் இன்று (ஜூன்.27) நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது.
ஷஃபாலியின் முதல் ஓடிஐ
சில நாள்களுக்கு முன் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை இந்திய அணி கடுமையாகப் போராடி டிரா செய்தது. தற்போது ஒருநாள் போட்டியின் உலக சாம்பியனான இங்கிலாந்து அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
-
The girls are ready 👍 👍
— BCCI (@BCCI) June 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Tune in for #TeamIndia's first WODI against England 👏 👏 @BCCIWomen #ENGvIND pic.twitter.com/Bkqp76eGBl
">The girls are ready 👍 👍
— BCCI (@BCCI) June 27, 2021
Tune in for #TeamIndia's first WODI against England 👏 👏 @BCCIWomen #ENGvIND pic.twitter.com/Bkqp76eGBlThe girls are ready 👍 👍
— BCCI (@BCCI) June 27, 2021
Tune in for #TeamIndia's first WODI against England 👏 👏 @BCCIWomen #ENGvIND pic.twitter.com/Bkqp76eGBl
டெஸ்ட் போட்டியில் கலக்கிய இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மாவிற்கு இப்போட்டிதான் முதல் ஒருநாள் போட்டி. டெஸ்ட் போட்டிகளின் இரு இன்னிங்ஸிலும் கலக்கிய ஷஃபாலி மீது, இன்று அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. இங்கிலாந்து அணியில் சோபியா டங்க்லி தனது முதல் ஒருநாள் போட்டியில் இன்று விளையாடி வருகிறார்.