ETV Bharat / sports

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023: சென்னையில் முதல் முறையாக களமிறங்கும் நியூஸிலாந்து - வங்கதேசம் அணிகள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 12, 2023, 10:30 PM IST

Cricket World Cup 2023: நடப்பாண்டு உலகக் கோப்பையின் 11வது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் அணி நியூசிலாந்து அணியை நாளை சென்னையில் எதிர்கொள்கிறது.

Bangladesh vs New Zealand 2023
Bangladesh vs New Zealand 2023

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உலக கோப்பை தொடரின் 11ஆவது லீக் ஆட்டமான நியூஸிலாந்து-வங்கதேசம் அணிகள் நாளை மோதுகின்றன. இதில் மூன்றாவது வெற்றியை நோக்கி நியூஸிலாந்து பயணிக்க ஆயுத்தமாகிறது. அதே நேரத்தில் உலக கோப்பையில் இதுவரை 5 முறை இந்த இரு அணிகள் சந்தித்ததில் ஒரு முறை கூட வங்கதேசம் அணி வென்றது இல்லை. இதனால், வங்கதேசம் அணியும் அந்த அணிக்கு எதிராக தனது முதல் வெற்றியை பதிவு செய்ய முனைப்புடன் உள்ளது.

ஐசிசி நடத்தும் 13வது உலகக் கோப்பை கிரிக்கெட்-2023 தொடர் அக்டோபர் 5-ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரானது, நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரை, இந்திய இம்முறை நடத்துகிறது. இந்த போட்டி இந்தியாவில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், டெல்லி, புனே, மும்பை, லக்னோ, தர்மசாலா, கொல்கத்தா ஆகிய 10 நகரில் நடைபெறுகிறது. இதில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்ரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை, நியூசிலாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் நியூசிலாந்து அணி வங்கதேசம் அணியை நாளை சென்னை சேப்பாக்கத்தில் சந்திக்கிறது. கடந்த 2019 உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் பவுண்டரிகள் வித்தியாசத்தில் கோப்பை வெல்லும் வாய்ப்பை நியூஸிலாந்து அணி இழந்தது.

இந்த அணியானது, 1975ஆம் ஆண்டில் இருந்து, 2019 வரை, 96 ஆட்டங்கள் ஆடியுள்ளது. இதில் 54 ஆட்டங்கள் வெற்றியும், 39 ஆட்டங்களும், தோல்வியும், 1 டை, 2 ஆட்டங்கள் எவ்வித முடிவும் இல்லை. இவர்கள் வெற்றியின் சராசரி 62% சதவீதமாக உள்ளது. நடப்பு உலக கோப்பையில், நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் ஆடிய இரண்டு ஆட்டங்களையும் சிறப்பான ஆட்டத்தின் மூலம் அபரா வெற்றியை அடைந்துள்ளது. மேலும் 2015, மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து 2ஆம் முறை இறுதி போட்டி வரை சென்று இராண்டாம் இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசம் அணியானது, 1999 ஆம் ஆண்டு தான் முதல் உலகக் கோப்பை போட்டியானது ஆடியது. அந்த ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை, ஒரே ஒரு முறை மட்டுமே கால் இறுதிச்சுற்று வரை தகுதி பெற்றது. அதைத் தொடர்ந்து, உலகக் கோப்பையில் மொத்தம் 42 ஆட்டங்களில், 14 வெற்றியும், 25 தோல்வியும் சந்தித்துள்ளது. அதேபோல் 3 ஆட்டங்கள் எவ்வித முடிவுமின்று இருந்துள்ளது.

சென்னையில் முதல் முறையாக இரு அணிகளும்: வங்கதேசம் - நியூஸிலாந்து அணி இதுவரை நடைபெற்ற உலக்கோப்பையில் 5-போட்டிகளை நேருக்கு நேர் இரு அணிகளும் மோதியுள்ளது. இதில், வங்கதேசம் அணியாது நியூஸிலாந்து அணிக்கு எதிராக ஒரு ஆட்டம் கூட வென்றது இல்லை. மேலும், சென்னை மைதானத்தில் முதன் முறையாக இரு அணிகளும், சந்திக்கின்றன. சென்னையில் இந்த இரு அணிகளும், பல முறை தனி தனியாக வெவ்வேறு அனிகளுடன் மோதினாலும், சென்னையில் நேருக்கு நேர் மோதுவது இதுதான் முதல் முறை ஆகும்.

சென்னை மைதானத்தின் ஆடுகளம்: சென்னை சேப்பாக்கம் மைதானம் என்றாலே, பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே இருக்கும் என்று அனைத்து தரப்பினரின் கருத்தாகும். மேலும், இந்த ஆடுகளம் பிளாக் சாயில் எனப்படும் கருப்பு மண்ணால், உறுவாக்கபட்ட ஆடுகளம்.

இந்த ஆடுகளம் என்பது முதல் 10 ஓவர்கள் வரை பேட்ஸ்மேன்கள் விளையாடுவது கடினமாக இருக்கும். ஆனால், நேரம் செல்லச் செல்ல ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாகவும், அதேசமயம் ஓரளவு பேட்ஸ்மேனுக்கு சாதகமாகவும் இருக்கும் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த ஆடுகளம் சூழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகாமாக் அமைந்ததால். கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியில் முதலில், ஆஸ்திரேலியா தடுமாறியது. அதன் பிறகு, இந்திய அணி, 3 விக்கெட்களை இழந்தாலும், நிதானமான ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.

நாளை ஆட்டம் யாருக்கு சாதகம்: நாளை நடைபெறும் ஆட்டமானது, அனைவரும், நியூஸிலாந்து அணி தான் வெற்றி பெற வாய்புள்ளது என்கின்றனர். இந்த சென்னை சேப்பாக்கம் மைதானத்தை பொறுத்த வரை, அதிகபட்சமாக, முதலில் பேட் செய்யும் அணி தான் அதிக முறை வென்றுள்ளது. .

அதேபோல், எளிதாக 270 ரன்களை இந்த சேப்பாக்க மைதனாத்தில், எடுக்க முடியும். ஆனால் தற்போது இருக்கும் ஆடுகளத்தை வைத்து பார்த்தால், நின்று நிதனாமாக ஆடும் அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு உள்ளது என முந்தைய ஆட்டத்தின் மூலம் தெரிய வருகிறது.

குறிப்பாக, நியூஸிலாந்து அணியில் மிட்செல் சான்ட்னர், ரச்சின் ரவீந்திரா ஆகிய 2 சுழற்பந்து வீச்சாளர்களும் லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டிரெண்ட் போல்ட் என 3 வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். இதேப்போல், வங்கதேசம் அணியில், சாகிப் அல் ஹாசன், மேய்தி ஹாசன் என இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களும், ரஹ்மான், டஸ்கின் அஹமத், இஸ்லாம் என 3 வேகப்பந்து வீச்சாளர்களும் உள்ளனர். முந்தைய ஆட்டத்தை வைத்து பார்க்கையில், ஆட்டமானது சுழற்பந்து வீச்சாளர்களின் இருந்தாலும், பேட்ஸ்மேன்கள் ஆடும் நிதானமான ஆட்டத்திலும் உள்ளது.

கணிக்கப்பட்ட இரு அணிகளுக்கான பிளேயிங் 11

வங்கதேசம்: டெவோன் கான்வே, வில் யங், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, டாம் லாதம் (விகீ), டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், மார்க் ஹென்றி, லாக்கி பெர்குசன் அல்லது இஷ் சோதி, டிரெண்ட் போல்ட்.

நியூசிலாந்து: தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), தவ்ஹித் ஹிரிடோய், முஷ்பிகுர் ரஹீம் (விகீ), மெஹிதி ஹசன், மஹேதி ஹசன், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், ஷோரிஃபுல் இஸ்லாம் அல்லது நாசும் அகமது.

இதையும் படிங்க: Shubman Gill : அகமதாபாத்தில் சுப்மான் கில்! பாகிஸ்தான் ஆட்டத்தில் பங்கேற்பாரா?

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உலக கோப்பை தொடரின் 11ஆவது லீக் ஆட்டமான நியூஸிலாந்து-வங்கதேசம் அணிகள் நாளை மோதுகின்றன. இதில் மூன்றாவது வெற்றியை நோக்கி நியூஸிலாந்து பயணிக்க ஆயுத்தமாகிறது. அதே நேரத்தில் உலக கோப்பையில் இதுவரை 5 முறை இந்த இரு அணிகள் சந்தித்ததில் ஒரு முறை கூட வங்கதேசம் அணி வென்றது இல்லை. இதனால், வங்கதேசம் அணியும் அந்த அணிக்கு எதிராக தனது முதல் வெற்றியை பதிவு செய்ய முனைப்புடன் உள்ளது.

ஐசிசி நடத்தும் 13வது உலகக் கோப்பை கிரிக்கெட்-2023 தொடர் அக்டோபர் 5-ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரானது, நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரை, இந்திய இம்முறை நடத்துகிறது. இந்த போட்டி இந்தியாவில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், டெல்லி, புனே, மும்பை, லக்னோ, தர்மசாலா, கொல்கத்தா ஆகிய 10 நகரில் நடைபெறுகிறது. இதில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்ரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை, நியூசிலாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் நியூசிலாந்து அணி வங்கதேசம் அணியை நாளை சென்னை சேப்பாக்கத்தில் சந்திக்கிறது. கடந்த 2019 உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் பவுண்டரிகள் வித்தியாசத்தில் கோப்பை வெல்லும் வாய்ப்பை நியூஸிலாந்து அணி இழந்தது.

இந்த அணியானது, 1975ஆம் ஆண்டில் இருந்து, 2019 வரை, 96 ஆட்டங்கள் ஆடியுள்ளது. இதில் 54 ஆட்டங்கள் வெற்றியும், 39 ஆட்டங்களும், தோல்வியும், 1 டை, 2 ஆட்டங்கள் எவ்வித முடிவும் இல்லை. இவர்கள் வெற்றியின் சராசரி 62% சதவீதமாக உள்ளது. நடப்பு உலக கோப்பையில், நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் ஆடிய இரண்டு ஆட்டங்களையும் சிறப்பான ஆட்டத்தின் மூலம் அபரா வெற்றியை அடைந்துள்ளது. மேலும் 2015, மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து 2ஆம் முறை இறுதி போட்டி வரை சென்று இராண்டாம் இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசம் அணியானது, 1999 ஆம் ஆண்டு தான் முதல் உலகக் கோப்பை போட்டியானது ஆடியது. அந்த ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை, ஒரே ஒரு முறை மட்டுமே கால் இறுதிச்சுற்று வரை தகுதி பெற்றது. அதைத் தொடர்ந்து, உலகக் கோப்பையில் மொத்தம் 42 ஆட்டங்களில், 14 வெற்றியும், 25 தோல்வியும் சந்தித்துள்ளது. அதேபோல் 3 ஆட்டங்கள் எவ்வித முடிவுமின்று இருந்துள்ளது.

சென்னையில் முதல் முறையாக இரு அணிகளும்: வங்கதேசம் - நியூஸிலாந்து அணி இதுவரை நடைபெற்ற உலக்கோப்பையில் 5-போட்டிகளை நேருக்கு நேர் இரு அணிகளும் மோதியுள்ளது. இதில், வங்கதேசம் அணியாது நியூஸிலாந்து அணிக்கு எதிராக ஒரு ஆட்டம் கூட வென்றது இல்லை. மேலும், சென்னை மைதானத்தில் முதன் முறையாக இரு அணிகளும், சந்திக்கின்றன. சென்னையில் இந்த இரு அணிகளும், பல முறை தனி தனியாக வெவ்வேறு அனிகளுடன் மோதினாலும், சென்னையில் நேருக்கு நேர் மோதுவது இதுதான் முதல் முறை ஆகும்.

சென்னை மைதானத்தின் ஆடுகளம்: சென்னை சேப்பாக்கம் மைதானம் என்றாலே, பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே இருக்கும் என்று அனைத்து தரப்பினரின் கருத்தாகும். மேலும், இந்த ஆடுகளம் பிளாக் சாயில் எனப்படும் கருப்பு மண்ணால், உறுவாக்கபட்ட ஆடுகளம்.

இந்த ஆடுகளம் என்பது முதல் 10 ஓவர்கள் வரை பேட்ஸ்மேன்கள் விளையாடுவது கடினமாக இருக்கும். ஆனால், நேரம் செல்லச் செல்ல ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாகவும், அதேசமயம் ஓரளவு பேட்ஸ்மேனுக்கு சாதகமாகவும் இருக்கும் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த ஆடுகளம் சூழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகாமாக் அமைந்ததால். கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியில் முதலில், ஆஸ்திரேலியா தடுமாறியது. அதன் பிறகு, இந்திய அணி, 3 விக்கெட்களை இழந்தாலும், நிதானமான ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.

நாளை ஆட்டம் யாருக்கு சாதகம்: நாளை நடைபெறும் ஆட்டமானது, அனைவரும், நியூஸிலாந்து அணி தான் வெற்றி பெற வாய்புள்ளது என்கின்றனர். இந்த சென்னை சேப்பாக்கம் மைதானத்தை பொறுத்த வரை, அதிகபட்சமாக, முதலில் பேட் செய்யும் அணி தான் அதிக முறை வென்றுள்ளது. .

அதேபோல், எளிதாக 270 ரன்களை இந்த சேப்பாக்க மைதனாத்தில், எடுக்க முடியும். ஆனால் தற்போது இருக்கும் ஆடுகளத்தை வைத்து பார்த்தால், நின்று நிதனாமாக ஆடும் அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு உள்ளது என முந்தைய ஆட்டத்தின் மூலம் தெரிய வருகிறது.

குறிப்பாக, நியூஸிலாந்து அணியில் மிட்செல் சான்ட்னர், ரச்சின் ரவீந்திரா ஆகிய 2 சுழற்பந்து வீச்சாளர்களும் லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டிரெண்ட் போல்ட் என 3 வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். இதேப்போல், வங்கதேசம் அணியில், சாகிப் அல் ஹாசன், மேய்தி ஹாசன் என இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களும், ரஹ்மான், டஸ்கின் அஹமத், இஸ்லாம் என 3 வேகப்பந்து வீச்சாளர்களும் உள்ளனர். முந்தைய ஆட்டத்தை வைத்து பார்க்கையில், ஆட்டமானது சுழற்பந்து வீச்சாளர்களின் இருந்தாலும், பேட்ஸ்மேன்கள் ஆடும் நிதானமான ஆட்டத்திலும் உள்ளது.

கணிக்கப்பட்ட இரு அணிகளுக்கான பிளேயிங் 11

வங்கதேசம்: டெவோன் கான்வே, வில் யங், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, டாம் லாதம் (விகீ), டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், மார்க் ஹென்றி, லாக்கி பெர்குசன் அல்லது இஷ் சோதி, டிரெண்ட் போல்ட்.

நியூசிலாந்து: தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), தவ்ஹித் ஹிரிடோய், முஷ்பிகுர் ரஹீம் (விகீ), மெஹிதி ஹசன், மஹேதி ஹசன், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், ஷோரிஃபுல் இஸ்லாம் அல்லது நாசும் அகமது.

இதையும் படிங்க: Shubman Gill : அகமதாபாத்தில் சுப்மான் கில்! பாகிஸ்தான் ஆட்டத்தில் பங்கேற்பாரா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.