இது குறித்து அவர் பேசுகையில்,
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில், மும்பை அணி விளையாட இருக்கும் அனைத்து லீக் ஆட்டங்களிலும் நான் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவேன். ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் நான் தொடக்க வீரராக விளையாடிதான் பல சாதனைகளை படைத்தேன். அதுமட்டுமின்றி, இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரை மனதில் வைத்து இந்த முயற்சியை நான் மேற்கொள்ள இருக்கிறேன் என தெரிவித்தார்.
கடந்த சீசனில், மும்பை அணிக்காக மூன்றாவது மற்றும் நான்காவது வரிசையில் களமிறங்கிய ரோகித் சர்மா ஏமாற்றமான ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்தினார். 14 போட்டிகளில் இரண்டு அரைசதம் உட்பட 286 ரன்களை மட்டுமே அடித்தார்.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் மும்பை அணி தனது முதல் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. மார்ச் 24ஆம் தேதி மும்பை வான்கேட மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.