ETV Bharat / sports

அகமதாபாத் மைதானத்தை கேலி செய்யும் மைக்கேல் வாகன்!

author img

By

Published : Mar 2, 2021, 7:34 PM IST

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், மைதானத்தின் தன்மையை கேலி செய்யும் வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

IND vs ENG: Michael Vaughan takes vile dig on Ahmedabad pitch ahead of 4th test
IND vs ENG: Michael Vaughan takes vile dig on Ahmedabad pitch ahead of 4th test

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இந்த மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இப்போட்டியானது இரண்டு நாள்களிலேயே முடிவடைந்ததால், மைதானத்தின் தன்மை குறித்த கேள்விகள் சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியது.

அதிலும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் மைதானத்தின் தகுதியை ஆராய வேண்டும் என ஐசிசியிடம் வேண்டுகொள் விடுத்தனர். ஆனால் ஐசிசி நான்காவது டெஸ்ட் போட்டியும் இதுபோல் அமைந்தால் மைதானத்தின் தன்மை குறித்து ஆராய்வதாக தெரிவித்தது.

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்ச்சையான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு மைதானத்தை கேலி செய்துள்ளார்.

Covering for the straight one !!! 😜 https://t.co/HqJkNHJGVv

— Michael Vaughan (@MichaelVaughan) March 2, 2021 ">

அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், "இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டிக்கு செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடு" என்று பதிவிட்டு, களை எடுத்த பிட்சிசில் பேட்டிங் செய்வது போன்ற புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

மைக்கேல் வாகன் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: எந்த வரிசையிலும் களமிறங்க தயார் - கிறிஸ் கெய்ல்

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இந்த மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இப்போட்டியானது இரண்டு நாள்களிலேயே முடிவடைந்ததால், மைதானத்தின் தன்மை குறித்த கேள்விகள் சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியது.

அதிலும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் மைதானத்தின் தகுதியை ஆராய வேண்டும் என ஐசிசியிடம் வேண்டுகொள் விடுத்தனர். ஆனால் ஐசிசி நான்காவது டெஸ்ட் போட்டியும் இதுபோல் அமைந்தால் மைதானத்தின் தன்மை குறித்து ஆராய்வதாக தெரிவித்தது.

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்ச்சையான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு மைதானத்தை கேலி செய்துள்ளார்.

அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், "இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டிக்கு செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடு" என்று பதிவிட்டு, களை எடுத்த பிட்சிசில் பேட்டிங் செய்வது போன்ற புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

மைக்கேல் வாகன் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: எந்த வரிசையிலும் களமிறங்க தயார் - கிறிஸ் கெய்ல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.