ETV Bharat / sports

கரோனாவுக்கு பின் கிரிக்கெட்டில் அமலுக்கு வரும் ஐசிசி விதிமுறைகள்!

author img

By

Published : Jun 10, 2020, 2:03 AM IST

கரோனாவுக்கு பின் கிரிக்கெட் போட்டிகளில் அமலுக்கு வரவுள்ள விதிமுறைகளை ஐசிசி அறிவித்துள்ளது.

icc-approves-saliva-ban-introduces-covid-19-replacements-in-tests
icc-approves-saliva-ban-introduces-covid-19-replacements-in-tests

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக விளையாட்டுப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது கரோனா வைரசால் கிரிக்கெட்டில் சில விதிமுறைகள் அமல்படுத்தப்படவுள்ளது. அந்த விதிமுறைகளை ஐசிசி தலைமை நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.

  • டெஸ்ட் போட்டியின் போது கரோனா அறிகுறிகளைக் காண்பிக்கும் வீரர்களை மாற்றுவதற்கு அணிகள் அனுமதிக்கப்படும். இந்த விதிமுறை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு செல்லாது.
  • பந்துகளில் உமிழ்நீர் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் போட்டிகளின் ஆரம்பத்தில் சில முறை உமிழ்நீர் பயன்படுத்தலாம். தொடர்ச்சியாக உமிழ்நீர் பயன்படுத்தினால் அணிகளுக்கு எச்சரிக்கை கொடுக்கப்படும். இரண்டு முறைக்கு மேல் எச்சரிக்கை கொடுக்கப்பட்டால், 5 ரன்கள் அபராதம் விதிக்கப்படும். உமிழ்நீர் பயன்படுத்திய ஒவ்வொரு முறையும், நடுவர்கள் பந்தினை சுத்தம் செய்ய வேண்டும்.
  • டிஆர்எஸ் விதிமுறைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸிக்கு ஒவ்வொரு அணிக்கும் இரண்டு முறை டிஆர்எஸ் வாய்ப்பும், டெஸ்ட் போட்டிகளுக்கு மூன்று முறையும் வழங்கப்படும்.
  • அடுத்த 12 மாதங்களுக்கு ஜெர்சி சின்னங்களில் விதிகளை தளர்த்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக விளையாட்டுப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது கரோனா வைரசால் கிரிக்கெட்டில் சில விதிமுறைகள் அமல்படுத்தப்படவுள்ளது. அந்த விதிமுறைகளை ஐசிசி தலைமை நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.

  • டெஸ்ட் போட்டியின் போது கரோனா அறிகுறிகளைக் காண்பிக்கும் வீரர்களை மாற்றுவதற்கு அணிகள் அனுமதிக்கப்படும். இந்த விதிமுறை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு செல்லாது.
  • பந்துகளில் உமிழ்நீர் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் போட்டிகளின் ஆரம்பத்தில் சில முறை உமிழ்நீர் பயன்படுத்தலாம். தொடர்ச்சியாக உமிழ்நீர் பயன்படுத்தினால் அணிகளுக்கு எச்சரிக்கை கொடுக்கப்படும். இரண்டு முறைக்கு மேல் எச்சரிக்கை கொடுக்கப்பட்டால், 5 ரன்கள் அபராதம் விதிக்கப்படும். உமிழ்நீர் பயன்படுத்திய ஒவ்வொரு முறையும், நடுவர்கள் பந்தினை சுத்தம் செய்ய வேண்டும்.
  • டிஆர்எஸ் விதிமுறைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸிக்கு ஒவ்வொரு அணிக்கும் இரண்டு முறை டிஆர்எஸ் வாய்ப்பும், டெஸ்ட் போட்டிகளுக்கு மூன்று முறையும் வழங்கப்படும்.
  • அடுத்த 12 மாதங்களுக்கு ஜெர்சி சின்னங்களில் விதிகளை தளர்த்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.