ETV Bharat / sports

பாக்ஸிங் டே டஸ்ட்: பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்த ஆஸி.,

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கு 30 ஆயிரம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

author img

By

Published : Dec 10, 2020, 8:15 PM IST

AUS vs IND: Boxing Day Test crowd capacity increased to 30,000 per day
AUS vs IND: Boxing Day Test crowd capacity increased to 30,000 per day

இந்திய - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற டிச.17 ஆம் தேதி தொடங்குகிறது. அடிலெய்டில் தொடங்கும் முதலாவது போட்டி, பகலிரவு ஆட்டமாக நடக்கிறது.

இந்நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் (இரண்டாவது டெஸ்ட்) போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் போட்டியை காண 25 ஆயிரம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கையை 30 ஆயிரமாக அதிகரித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கு அதிக அளவிலான பார்வையாளர்களை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

அடிலெய்டில் நடைபெறவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு 50 விழுக்காடு பார்வையாளர்களும், கபா மற்றும் பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டிகளுக்கு 75 விழுக்காடு பார்வையாளர்களையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஐஎஸ்எல் தொடர்: சென்னையை வீழ்த்திய மும்பை!

இந்திய - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற டிச.17 ஆம் தேதி தொடங்குகிறது. அடிலெய்டில் தொடங்கும் முதலாவது போட்டி, பகலிரவு ஆட்டமாக நடக்கிறது.

இந்நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் (இரண்டாவது டெஸ்ட்) போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் போட்டியை காண 25 ஆயிரம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கையை 30 ஆயிரமாக அதிகரித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கு அதிக அளவிலான பார்வையாளர்களை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

அடிலெய்டில் நடைபெறவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு 50 விழுக்காடு பார்வையாளர்களும், கபா மற்றும் பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டிகளுக்கு 75 விழுக்காடு பார்வையாளர்களையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஐஎஸ்எல் தொடர்: சென்னையை வீழ்த்திய மும்பை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.