ETV Bharat / sports

அனுஷ்கா சர்மாவின் யோகா மாஸ்டராக மாறிய கோலி!

author img

By

Published : Dec 1, 2020, 9:31 PM IST

அனுஷ்கா சர்மா கருவுற்றிருக்கும் நிலையில், தலைகீழாக நின்றபடி அவர் யோகாசனம் செய்யும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Anushka Sharma sets fitness goals as she aces 'headstand' with husband Kohli's help
Anushka Sharma sets fitness goals as she aces 'headstand' with husband Kohli's help

சர்வதேசக் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சையமான ஜோடிகளின் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி - அனுஷ்கா சர்மா ஆகியோரின் பெயர் எப்போதும் முன்னிலையில் இருக்கும். இவர்கள் இருவரும் 2017ஆம் ஆண்டு இத்தாலியில் பிரம்மாண்டமாகத் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் தற்போது அனுஷ்கா சர்மா கருவுற்றுள்ளார்.

மேலும் ஜனவரியில் அனுஷ்காவுக்கு குழந்தைப் பிறக்கவுள்ளதால் தான் அப்போது அவருடன் இருக்க வேண்டும் என்பதற்காக, இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரின் கடைசி மூன்று ஆட்டங்களில் இருந்து இந்தியக் கேப்டன் விராட் கோலி விடுப்பு எடுத்துள்ளார்.

இந்நிலையில் தனது கர்ப்ப காலத்தில் அனுஷ்கா சர்மா தலைகீழாக நின்றபடி சிரசாசனம் எனும் கடினமான யோகாப்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். அவருக்கு பயிற்சியாளராக விராட் கோலியும் உதவிவருகிறார். இதுகுறித்து அனுஷ்கா சர்மா வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அனுஷ்கா சர்மா இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், "இந்தப் பயிற்சி மிகவும் கடினமானது. என் வாழ்க்கையில் யோகாப் பயிற்சிக்கு முக்கியப் பங்கு உள்ளதால் கர்ப்பமடைவதற்கு முன்பு, நான் செய்த அனைத்து யோகாசனங்களையும் எனது மருத்துவரின் அறிவுரைப்படி செய்து வருகிறேன்.

சிரசாசனத்தை நான் பல வருடங்களாக செய்து வருகிறேன். இப்போது செய்தபோது நான் சாய்ந்துகொள்ள சுவரும் நான் விழாமல் இருப்பதற்காக என் கணவரின் உதவியும் தேவைப்பட்டன. இணையம் வழியாக என்னுடைய யோகா ஆசிரியரின் முன்னிலையில் இதைச் செய்தேன். யோகக் கலைப் பயிற்சிகளை நான் கர்ப்பமாக இருக்கும்போதும் செய்வது மகிழ்ச்சியாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மேலும் மூன்று பாகிஸ்தான் வீரர்களுக்கு கரோனா உறுதி!

சர்வதேசக் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சையமான ஜோடிகளின் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி - அனுஷ்கா சர்மா ஆகியோரின் பெயர் எப்போதும் முன்னிலையில் இருக்கும். இவர்கள் இருவரும் 2017ஆம் ஆண்டு இத்தாலியில் பிரம்மாண்டமாகத் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் தற்போது அனுஷ்கா சர்மா கருவுற்றுள்ளார்.

மேலும் ஜனவரியில் அனுஷ்காவுக்கு குழந்தைப் பிறக்கவுள்ளதால் தான் அப்போது அவருடன் இருக்க வேண்டும் என்பதற்காக, இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரின் கடைசி மூன்று ஆட்டங்களில் இருந்து இந்தியக் கேப்டன் விராட் கோலி விடுப்பு எடுத்துள்ளார்.

இந்நிலையில் தனது கர்ப்ப காலத்தில் அனுஷ்கா சர்மா தலைகீழாக நின்றபடி சிரசாசனம் எனும் கடினமான யோகாப்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். அவருக்கு பயிற்சியாளராக விராட் கோலியும் உதவிவருகிறார். இதுகுறித்து அனுஷ்கா சர்மா வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அனுஷ்கா சர்மா இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், "இந்தப் பயிற்சி மிகவும் கடினமானது. என் வாழ்க்கையில் யோகாப் பயிற்சிக்கு முக்கியப் பங்கு உள்ளதால் கர்ப்பமடைவதற்கு முன்பு, நான் செய்த அனைத்து யோகாசனங்களையும் எனது மருத்துவரின் அறிவுரைப்படி செய்து வருகிறேன்.

சிரசாசனத்தை நான் பல வருடங்களாக செய்து வருகிறேன். இப்போது செய்தபோது நான் சாய்ந்துகொள்ள சுவரும் நான் விழாமல் இருப்பதற்காக என் கணவரின் உதவியும் தேவைப்பட்டன. இணையம் வழியாக என்னுடைய யோகா ஆசிரியரின் முன்னிலையில் இதைச் செய்தேன். யோகக் கலைப் பயிற்சிகளை நான் கர்ப்பமாக இருக்கும்போதும் செய்வது மகிழ்ச்சியாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மேலும் மூன்று பாகிஸ்தான் வீரர்களுக்கு கரோனா உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.