ETV Bharat / sitara

ஆதங்கத்துடன் டீசர் பகிர்ந்த விஜய் சேதுபதி பட இயக்குநர்!

சென்னை: ஒரு இயக்குநரின் தன்மானத்துடன் தன் படத்தின் டீசரை பகிர்வதாக 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' படத்தின் இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

author img

By

Published : Mar 13, 2021, 7:12 AM IST

vijay
vijay

இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனின் 'பேராண்மை', 'பூலோகம்' ஆகியப் படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். இவர் தற்போது விஜய் சேதுபதியை வைத்து 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்னும் படத்தை இயக்கி வருகிறார்.

சந்திரா ஆர்ட்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் முதன்முறையாக விவேக், விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ளார். மேலும், மேகா ஆகாஷ், ரித்திவிகா, இயக்குநர்கள் கரு. பழனியப்பன், மோகன் ராஜா, மகிழ் திருமேனி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின், கதையில் சர்வதேச பிரச்னை ஒன்றை மையப்படுத்தி இப்படத்தின் கதை உள்ளதாகத் தெரிகிறது. இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடிக்கிறார். படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படம் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் இந்தப் படத்தின் டீஸர் வெளியானது.

ஆனால் "இப்படத்தின் டீசர் எனக்கு தெரியாமலேயே வெளியிடப்பட்டுள்ளது. இது நான் வெளியிட விரும்பிய டீசர் அல்ல" என்று படத்தின் இயக்குநர் வெங்கடகிருஷ்ணா தனது ஃபேஸ்புக்கில் முன்னதாகப் பதிவிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் தனது ஃபேஸ்புக்கில் தற்போது மற்றொரு பதிவினை பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த்  ஃபேஸ்புக் பதிவு
இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் ஃபேஸ்புக் பதிவு

அதில், "அன்பார்ந்த நண்பர்களுக்கு, முந்தைய பதிவில் #யாதும்ஊரேயாவரும்கேளிர் டீசர் வெளியானதைத் தொடர்ந்து தயாரிப்பு தரப்பு கொடுக்கும் விளக்கத்தை அறிவிக்கிறேன் என்று பதிவிட்டிருந்தேன். தொடர்ந்து நான் பதிவிட்ட மறுநாளில் இருந்து என் பேஸ்புக் பக்கத்தை பார்க்க முடியவில்லை என்று சிலர் கூற ஆரப்பித்தார்கள். மறு நாள் இந்த எண்ணிக்கை கூடியது. அடுத்த நாள் என்னாலும் என் பேஸ்புக் பக்கத்துக்குள் நுழைய முடியவில்லை. வெங்கட கிருஷ்ண ரோகாந்த் பெயரிலான கணக்கு முடக்கப்பட்டதாக காட்டியது. அதன் பின் நீண்ட நேர போராட்டத்திற்கு என பேஸ்புக் பக்கம் மீட்கப்பட்டது.

ஆனல் அதில் எனது கடைசி பதிவான யாதும் ஊரே யாவரும் கேளிர் டீசர் பதிவு நீக்கப்பட்டிருந்தது. அதற்கு முந்தைய எனது பதிவான ஜனா சாரின் 'லாபம்' ட்ரெய்லர் தான் எனது கடைசி ஆக்டிவிட்டியாகக் காட்டியது. என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க பெரிய துப்பறியும் அறிவு ஒன்றும் தேவைப்படாதுதான். இருந்தாலும் ஊகங்களின் பின்னால் நான் செல்ல தயாராக இல்லை. அமைதியாக இருந்தேன். நேற்று, இந்தப் படம் உருவாக்கத்தில் இருந்து இன்று வரை இந்த ப்ராஜக்டின் முக்கியக் காரணியாக இருக்கும் குமார் சார் தொலைபேசி வாயிலாக பேசினார்.

சில அறிவுரைகள், சில தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய விஷயங்கள், அடுத்த செயல் திட்டங்கள் என்று எங்கள் உரையாடல் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரத்தொடங்கி இருக்கிறது. சுமார் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு ஆலுவலகம் செல்லப்போகிறேன். நல்லது. இனி நான் பேசப் போகும் விஷயம்தான் ரொம்ப முக்கியமானது என நான் கருதுகிறேன்.

நான் அடிப்படையில் இயக்குநர் சங்க உறுப்பினர் இல்லை. பேராண்மையின்போது ஜனா சார் தற்காலிக உறுப்பினராக என்னை சேர்த்துவிட்டபோதும் அதைத் தொடராமல் விட்டதால், நான் இன்று இயக்குநர் சங்கத்தின் உறுப்பினர் இல்லை. அதனாலயே தவிர்க்க முடியாமல் இந்த விஷயத்தை பொதுவெளிக்கு கொண்டு வரும்படியாகிவிட்டது. இது முற்றிலும் ஒரு தவறான முன்னுதாரணம் என்பதை திரைத்துறையினர் முன்னால் ஒப்புக்கொள்கிறேன். என் படத்து டீசரை என் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட முடியாமலே போய்விடுமோ என்கிற மன உளைச்சல் இருந்தது.

இன்று நிலைமை மாறி இருக்கிறது. 20 லட்சத்தைத் தாண்டிய பார்வையாளர்கள், பாராட்டுகள், கருத்துகள், எதிர்க்கருத்துகள் என்று முன்னேறி போய்க்கொண்டிருக்கும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' டீசரை எனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிடுகிறேன். தாமதமாக இந்த டீசர் பதிவிடப்படுகிறது என்றாலும் ஒரு இயக்குநரின் தன்மானத்தோடு பதிவிடப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' காலையில் ஃபர்ஸ்ட் லுக்...மாலையில் செகண்ட் லுக்!

இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனின் 'பேராண்மை', 'பூலோகம்' ஆகியப் படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். இவர் தற்போது விஜய் சேதுபதியை வைத்து 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்னும் படத்தை இயக்கி வருகிறார்.

சந்திரா ஆர்ட்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் முதன்முறையாக விவேக், விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ளார். மேலும், மேகா ஆகாஷ், ரித்திவிகா, இயக்குநர்கள் கரு. பழனியப்பன், மோகன் ராஜா, மகிழ் திருமேனி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின், கதையில் சர்வதேச பிரச்னை ஒன்றை மையப்படுத்தி இப்படத்தின் கதை உள்ளதாகத் தெரிகிறது. இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடிக்கிறார். படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படம் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் இந்தப் படத்தின் டீஸர் வெளியானது.

ஆனால் "இப்படத்தின் டீசர் எனக்கு தெரியாமலேயே வெளியிடப்பட்டுள்ளது. இது நான் வெளியிட விரும்பிய டீசர் அல்ல" என்று படத்தின் இயக்குநர் வெங்கடகிருஷ்ணா தனது ஃபேஸ்புக்கில் முன்னதாகப் பதிவிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் தனது ஃபேஸ்புக்கில் தற்போது மற்றொரு பதிவினை பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த்  ஃபேஸ்புக் பதிவு
இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் ஃபேஸ்புக் பதிவு

அதில், "அன்பார்ந்த நண்பர்களுக்கு, முந்தைய பதிவில் #யாதும்ஊரேயாவரும்கேளிர் டீசர் வெளியானதைத் தொடர்ந்து தயாரிப்பு தரப்பு கொடுக்கும் விளக்கத்தை அறிவிக்கிறேன் என்று பதிவிட்டிருந்தேன். தொடர்ந்து நான் பதிவிட்ட மறுநாளில் இருந்து என் பேஸ்புக் பக்கத்தை பார்க்க முடியவில்லை என்று சிலர் கூற ஆரப்பித்தார்கள். மறு நாள் இந்த எண்ணிக்கை கூடியது. அடுத்த நாள் என்னாலும் என் பேஸ்புக் பக்கத்துக்குள் நுழைய முடியவில்லை. வெங்கட கிருஷ்ண ரோகாந்த் பெயரிலான கணக்கு முடக்கப்பட்டதாக காட்டியது. அதன் பின் நீண்ட நேர போராட்டத்திற்கு என பேஸ்புக் பக்கம் மீட்கப்பட்டது.

ஆனல் அதில் எனது கடைசி பதிவான யாதும் ஊரே யாவரும் கேளிர் டீசர் பதிவு நீக்கப்பட்டிருந்தது. அதற்கு முந்தைய எனது பதிவான ஜனா சாரின் 'லாபம்' ட்ரெய்லர் தான் எனது கடைசி ஆக்டிவிட்டியாகக் காட்டியது. என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க பெரிய துப்பறியும் அறிவு ஒன்றும் தேவைப்படாதுதான். இருந்தாலும் ஊகங்களின் பின்னால் நான் செல்ல தயாராக இல்லை. அமைதியாக இருந்தேன். நேற்று, இந்தப் படம் உருவாக்கத்தில் இருந்து இன்று வரை இந்த ப்ராஜக்டின் முக்கியக் காரணியாக இருக்கும் குமார் சார் தொலைபேசி வாயிலாக பேசினார்.

சில அறிவுரைகள், சில தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய விஷயங்கள், அடுத்த செயல் திட்டங்கள் என்று எங்கள் உரையாடல் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரத்தொடங்கி இருக்கிறது. சுமார் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு ஆலுவலகம் செல்லப்போகிறேன். நல்லது. இனி நான் பேசப் போகும் விஷயம்தான் ரொம்ப முக்கியமானது என நான் கருதுகிறேன்.

நான் அடிப்படையில் இயக்குநர் சங்க உறுப்பினர் இல்லை. பேராண்மையின்போது ஜனா சார் தற்காலிக உறுப்பினராக என்னை சேர்த்துவிட்டபோதும் அதைத் தொடராமல் விட்டதால், நான் இன்று இயக்குநர் சங்கத்தின் உறுப்பினர் இல்லை. அதனாலயே தவிர்க்க முடியாமல் இந்த விஷயத்தை பொதுவெளிக்கு கொண்டு வரும்படியாகிவிட்டது. இது முற்றிலும் ஒரு தவறான முன்னுதாரணம் என்பதை திரைத்துறையினர் முன்னால் ஒப்புக்கொள்கிறேன். என் படத்து டீசரை என் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட முடியாமலே போய்விடுமோ என்கிற மன உளைச்சல் இருந்தது.

இன்று நிலைமை மாறி இருக்கிறது. 20 லட்சத்தைத் தாண்டிய பார்வையாளர்கள், பாராட்டுகள், கருத்துகள், எதிர்க்கருத்துகள் என்று முன்னேறி போய்க்கொண்டிருக்கும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' டீசரை எனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிடுகிறேன். தாமதமாக இந்த டீசர் பதிவிடப்படுகிறது என்றாலும் ஒரு இயக்குநரின் தன்மானத்தோடு பதிவிடப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' காலையில் ஃபர்ஸ்ட் லுக்...மாலையில் செகண்ட் லுக்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.