ETV Bharat / sitara

'ஓ மை கடவுளே' படத்தில் கடவுளான விஜய் சேதுபதி

author img

By

Published : Feb 8, 2020, 11:34 AM IST

Updated : Feb 8, 2020, 5:06 PM IST

சென்னை: ஓ மை கடவுளே படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கடவுள் அவதாரம் எடுத்திருப்பதாக சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

Oh my kadavulae press meet
Actor ashok selvan

காதலர் தின (பிப்ரவரி 14) ஸ்பெஷலாக 'ஓ மை கடவுளே' படம் திரைக்குவருகிறது.

ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியுள்ள படம் 'ஓ மை கடவுளே'.

இந்தப் படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு அண்மையில் நடந்தது. இதில் படக்குழுவினர்கள் பங்கேற்று பேசினர்.

இதில் நடிகை வாணி போஜன் பேசும்போது, “ஒரு படம் உருவாகும்போது அதில் வேலை செய்யும் அனைவருக்கும் பிடித்திருக்க வேண்டும். இந்தப் படம் அப்படியான படம்.

நான் பார்ப்பவர்களிடம் எல்லாம் முதலில் “ஓ மை கடவுளே” ரிலீஸ் ஆக வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். அப்படி என்ன படத்தில் இருக்கிறது என்று எல்லோரும் கேட்டார்கள். இது எங்கள் படம். எல்லோரும் நண்பர்கள் போல் இணைந்து படத்தை எடுத்துள்ளோம். கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.

நடிகை ரித்திகா சிங், “இந்தப் படம் எனக்கு மிக முக்கியமான படம். மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வந்துள்ளேன். இயக்குநர் அஷ்வத் மிகத் தெளிவானவர். காட்சிகள் எப்படி வர வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார்.

சாரா மிகச்சிறந்த நண்பர். மிகவும் கலகலப்பானவர். வாணி போஜன் மிக எளிமையானவர். அவர் என்னிடம் சகோதரி போல் அன்பு செலுத்தினார்” எனக் கூறினார்.

அடுத்து பேசிய நடிகர் அசோக் செல்வன், ஓ மை கடவுளே படத்தில் விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரம் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்தார். படம் குறித்து அவர் பேசுகையில், “அஷ்வத் என் நண்பன். மிகச்சிறப்பாக திரைக்கதை எழுதும் திறமை அவரிடம் இருக்கிறது. ராட்சசன் போன்ற படத்துக்கு பிறகு எங்களுடன் இணைந்துள்ளார். படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றுள்ளது. அதுக்கு விஜய் சேதுபதி அண்ணாகிட்ட கேட்டோம்.

Oh My kadavulae movie
Ashok selvan and Rithika singh in Oh My Kadavulae press meet

நான் நல்லா வர வேண்டும் என்று மனதார நினைப்பவர், கதையே கேட்காமல் எனக்காக நடிக்க ஒப்புக்கொண்டார். அவருக்கு பெரிய மனசு. எளிமையா வந்து நடிச்சு கொடுத்திட்டு போயிட்டார். விஜய் சேதுபதி இந்தப்படத்தில் கடவுளாக நடிக்கிறார்” என்றார்.

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து கூறும்போது, “இந்த மேடை எனது நெடு நாள் கனவு. நான் சினிமா எடுப்பேன் என அம்மா, அப்பா நம்பவில்லை. என் குறும்படம் ஒன்றை பார்த்த பிறகுதான் நம்பினார்கள். இப்போது வரை எனக்கு மிகப்பெரிய ஆதரவாக உள்ளார்கள்.

ரித்திகா சிங் இறுதிசுற்று படத்துக்கு பிறகு இந்தப் படத்தில் அனைவருக்கும் அவரைப்பிடிக்கும். அவர் மிகச்சிறந்த நடிகை. அவர் நிறைய தமிழ் படங்களில் நடிக்க வேண்டும்” என்றார்.

காதலர் தின (பிப்ரவரி 14) ஸ்பெஷலாக 'ஓ மை கடவுளே' படம் திரைக்குவருகிறது.

ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியுள்ள படம் 'ஓ மை கடவுளே'.

இந்தப் படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு அண்மையில் நடந்தது. இதில் படக்குழுவினர்கள் பங்கேற்று பேசினர்.

இதில் நடிகை வாணி போஜன் பேசும்போது, “ஒரு படம் உருவாகும்போது அதில் வேலை செய்யும் அனைவருக்கும் பிடித்திருக்க வேண்டும். இந்தப் படம் அப்படியான படம்.

நான் பார்ப்பவர்களிடம் எல்லாம் முதலில் “ஓ மை கடவுளே” ரிலீஸ் ஆக வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். அப்படி என்ன படத்தில் இருக்கிறது என்று எல்லோரும் கேட்டார்கள். இது எங்கள் படம். எல்லோரும் நண்பர்கள் போல் இணைந்து படத்தை எடுத்துள்ளோம். கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.

நடிகை ரித்திகா சிங், “இந்தப் படம் எனக்கு மிக முக்கியமான படம். மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வந்துள்ளேன். இயக்குநர் அஷ்வத் மிகத் தெளிவானவர். காட்சிகள் எப்படி வர வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார்.

சாரா மிகச்சிறந்த நண்பர். மிகவும் கலகலப்பானவர். வாணி போஜன் மிக எளிமையானவர். அவர் என்னிடம் சகோதரி போல் அன்பு செலுத்தினார்” எனக் கூறினார்.

அடுத்து பேசிய நடிகர் அசோக் செல்வன், ஓ மை கடவுளே படத்தில் விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரம் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்தார். படம் குறித்து அவர் பேசுகையில், “அஷ்வத் என் நண்பன். மிகச்சிறப்பாக திரைக்கதை எழுதும் திறமை அவரிடம் இருக்கிறது. ராட்சசன் போன்ற படத்துக்கு பிறகு எங்களுடன் இணைந்துள்ளார். படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றுள்ளது. அதுக்கு விஜய் சேதுபதி அண்ணாகிட்ட கேட்டோம்.

Oh My kadavulae movie
Ashok selvan and Rithika singh in Oh My Kadavulae press meet

நான் நல்லா வர வேண்டும் என்று மனதார நினைப்பவர், கதையே கேட்காமல் எனக்காக நடிக்க ஒப்புக்கொண்டார். அவருக்கு பெரிய மனசு. எளிமையா வந்து நடிச்சு கொடுத்திட்டு போயிட்டார். விஜய் சேதுபதி இந்தப்படத்தில் கடவுளாக நடிக்கிறார்” என்றார்.

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து கூறும்போது, “இந்த மேடை எனது நெடு நாள் கனவு. நான் சினிமா எடுப்பேன் என அம்மா, அப்பா நம்பவில்லை. என் குறும்படம் ஒன்றை பார்த்த பிறகுதான் நம்பினார்கள். இப்போது வரை எனக்கு மிகப்பெரிய ஆதரவாக உள்ளார்கள்.

ரித்திகா சிங் இறுதிசுற்று படத்துக்கு பிறகு இந்தப் படத்தில் அனைவருக்கும் அவரைப்பிடிக்கும். அவர் மிகச்சிறந்த நடிகை. அவர் நிறைய தமிழ் படங்களில் நடிக்க வேண்டும்” என்றார்.

Intro:“ஓ மை கடவுளே” பத்திரிகையாளர் சந்திப்பு Body:ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியுள்ள படம்
“ஓ மை கடவுளே”. அசோக் செல்வன் ரித்திகா சிங் வாணிி போஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் பிப்ரவரிிி 14 ஆம் தேதி வெளியாக உள்ளது இதனைை அடுத்து இந்தப்் படத்தின் பத்திரைக்கையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

நடிகை வாணி போஜன் பேசுகையில்,

ஒரு உருவாகும்போது அந்தப்படத்தில் படத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் அந்தப்படம் பிடித்திருக்க வேண்டும். இந்தப்படம் அப்படிபட்ட படம். நான் பார்ப்பவர்களிடம் எல்லாம் முதலில் “ஓ மை கடவுளே” ரிலீஸ் ஆக வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். எல்லோரும் கேட்டார்கள் அப்படி என்ன படம் அது என்று. இது எங்கள் படம் .எல்லோரும் நண்பர்கள் போல் இணைந்து இந்தப்படத்தை எடுத்துள்ளோம். கண்டிப்பாக இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகை ரித்திகா சிங் பேசுகையில்,

இந்தப்படம் எனக்கு மிக முக்கியமான படம். மூன்று வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு வந்துள்ளேன். இயக்குநர் அஷ்வத் மிகத் தெளிவானவர். காட்சிகள் எப்படி வர வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். சாரா மிகச்சிறந்த நண்பர், மிக கலகலப்பானவர். வாணி போஜன் மிக எளிமையானவர் அவர் என் சகோதரி போல் அன்பு செலுத்தினார். அசோக் செல்வன் மிகமிக ஆதரவாக ஒரு நண்பனாக எந்த ஈகோ இன்றி இருந்தார். அவர் போல பெண்களுக்கு துணையாக ஆண்கள் உலகில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தப்படம் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்.

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பேசுகையில்,

இந்த மேடை நெடு நாளைய கனவு. நான் சினிமா எடுப்பேன் என அம்மா, அப்பா நம்பவில்லை. என் குறும்படம் ஒன்றை பார்த்த பிறகு தான் நம்ப ஆரம்பித்தார்கள். இப்போது வரை பெரிய ஆதரவாக உள்ளார்கள். இந்த மேடையில் இருப்பவர்கள் அனவருமே எனது நெருங்கிய நண்பர்கள். அவர்களால் தான் இந்தப்படம் நடந்தது. அசோக் எனது நெருங்கிய நண்பன். தயாரிப்பாளர் டில்லிபாபுவை முதலில் சந்திக்கும்போது லேட்டாகத்தான் போனேன். ஆனால் அவருக்கு கதை பிடித்திருந்தது. எந்த ஈகோ இல்லாமல் ராட்சசனுக்கு பிறகு என் படம் தயாரிக்க ஒத்துகொண்டார். அவர் இல்லை என்றால் இந்த மேடை இல்லை. இப்படத்தில் வாணி போஜன் கேரக்டருக்கு நிறைய பேரை அணுகினோம் ஆனால் அக்கா எனும் வார்த்தையால் யாரும் செய்ய மாட்டேன் என்றார்கள். ஆனால் வாணி போஜன் அவரே முன்வந்து இந்தக்கதாப்பாத்திரத்தை செய்தார். அவர் இந்தப்படத்திற்கு பிறகு எல்லோருடைய கிரஷ்ஷாக மாறி விடுவார். ரித்திகா சிங் இறுதிசுற்றுக்கு பிறகு இந்தப்படத்தில் அனைவருக்கும் அவரைப்பிடிக்கும். அவர் மிகச்சிறந்த நடிகர். அவர் மிக எளிமையாக இருந்தார். மிக மிக அர்ப்பணிப்பானவர். அவர் நிறைய தமிழ் படங்கள் செய்ய வேண்டும். அசோக் என் மச்சான் நாளைய இயக்குநரிலிருந்து தெரியும். நான் என்ன சொன்னாலும் செய்வேன் என சொல்பவர். அவரது முழுத்திறமையை இப்படம் வெளியில் காட்டும்.

நடிகர் அசோக் செல்வன் பேசுகையில்.

ரொம்ப நாள் கழித்து உங்களை சந்திக்கிறேன். அஷ்வத் என் நண்பன். மிகச்சிறப்பாக எழுதும் திறமை இருக்கிறது. ராட்சசன் போன்ற படத்திற்கு பிறகு எங்களுடன் இணைந்து படம் செய்ததற்கு டில்லிபாபு சாருக்கு நன்றி. சினிமாவில் பணம் சம்பாதிக்க ஆசை இல்லை அதனால் தான் இந்த பெரிய இடைவெளி. எனக்கு நிறைய வித்தியாசமான கேரக்டர், கதைகள் செய்ய ஆசை. இப்போது காதல் கதைகள் எதுவும் வருவதில்லை அதனால் இந்தப்படம் செய்யலாம் எனத் தோன்றியது. எனக்கு பிடித்து ஆசைப்பட்டு செய்த படம் உங்களுக்கும் பிடிக்கும். அஷ்வத் 8 வருடம் ஒன்றாக பயணிக்கும் நண்பன். அஷ்வத் இந்தப்படம் செய்கிறான் என்பதால் எனக்கு பயமே இல்லை அந்தளவு முழுமையாக அவனை நம்புகிறேன். படத்தில் முக்கியமான பாத்திரம் ஒன்னு இருக்கு. அதுக்கு விஜய் செதுபதி அண்ணாகிட்ட கேட்டோம். நான் நல்லா வர வேண்டும் என்று மனதார நினைப்பவர். கதையே கேட்காமல் எனக்காக நடிக்க ஒப்புக்கொண்டார்.
Conclusion:அவருக்கு பெரிய மனசு எளிமையா வந்து நடிச்சு கொடுத்திட்டு போயிட்டார். விஜய் சேதுபதி இந்தப்படத்தில் கடவுளாக நடிக்கிறார்.
Last Updated : Feb 8, 2020, 5:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.