ETV Bharat / sitara

'தமிழ்படம்' இயக்குநருடன் விஜய் ஆண்டனி கூட்டணி!

சென்னை: விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகவுள்ள புதிய படத்தை 'தமிழ்ப் படம்' இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்குகிறார்.

author img

By

Published : Apr 15, 2021, 1:59 PM IST

vijay
vijay

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது 'கோடியில் ஒருவன்', 'காக்கி' ஆகிய படங்கள் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளன. இந்தப் படங்களை ’இன்ஃபினிடி ஃபிலிம் வென்ச்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிறுவனம் மூன்றாவது முறையாக விஜய் ஆண்டனியுடன் ஒரு புதிய படத்தில் இணைகிறது. ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகவுள்ள இந்தப் படத்தினை 'தமிழ்ப் படம் ' இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்குகிறார்.

இந்நிலையில், இப்படம் குறித்து பேசியுள்ள நடிகர் விஜய் ஆண்டனி, "இன்ஃபினிடி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனத்துடன் மூன்றாவது முறையாக இணைவது, பெருமையாக உள்ளது. இயக்குநர் சி.எஸ். அமுதன் என்னிடம் இக்கதையினை சொன்னபோது முற்றிலும் வாயடைத்துப் போனேன். தமிழ் படங்களின் குறைபாடுகளை கிண்டலடிக்கும், ஸ்பூஃப் வகை படங்களிலிருந்து முற்றிலும் வேறாக ஒரு திரில்லர் கதையை அவர் படைத்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு மிகச்சிறந்த திரில்லர் இயக்குநராக அவர் கொண்டாடப்படுவார்" என்றார்.

தொடர்ந்து இயக்குநர் சி.எஸ்.அமுதன் கூறியதாவது: "நடிகர் விஜய் ஆண்டனியின் புதிய படத்தில் இணைந்து, பணியாற்றும் செய்தியை அறிவிப்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன். நகைச்சுவை படங்களிலிருந்து மாறுபட்டு இம்முறை ஒரு திரில்லர் திரைப்படத்தை இயக்கவுள்ளேன். இந்நேரத்தில் என் மீது நம்பிக்கை வைத்த நடிகர் விஜய் ஆண்டனி, இன்ஃபினிடி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனத்துக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. படத்தின் தலைப்பு, படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் தொழில்நுட்பக் குழுவினர் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்" என்றார்.

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது 'கோடியில் ஒருவன்', 'காக்கி' ஆகிய படங்கள் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளன. இந்தப் படங்களை ’இன்ஃபினிடி ஃபிலிம் வென்ச்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிறுவனம் மூன்றாவது முறையாக விஜய் ஆண்டனியுடன் ஒரு புதிய படத்தில் இணைகிறது. ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகவுள்ள இந்தப் படத்தினை 'தமிழ்ப் படம் ' இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்குகிறார்.

இந்நிலையில், இப்படம் குறித்து பேசியுள்ள நடிகர் விஜய் ஆண்டனி, "இன்ஃபினிடி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனத்துடன் மூன்றாவது முறையாக இணைவது, பெருமையாக உள்ளது. இயக்குநர் சி.எஸ். அமுதன் என்னிடம் இக்கதையினை சொன்னபோது முற்றிலும் வாயடைத்துப் போனேன். தமிழ் படங்களின் குறைபாடுகளை கிண்டலடிக்கும், ஸ்பூஃப் வகை படங்களிலிருந்து முற்றிலும் வேறாக ஒரு திரில்லர் கதையை அவர் படைத்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு மிகச்சிறந்த திரில்லர் இயக்குநராக அவர் கொண்டாடப்படுவார்" என்றார்.

தொடர்ந்து இயக்குநர் சி.எஸ்.அமுதன் கூறியதாவது: "நடிகர் விஜய் ஆண்டனியின் புதிய படத்தில் இணைந்து, பணியாற்றும் செய்தியை அறிவிப்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன். நகைச்சுவை படங்களிலிருந்து மாறுபட்டு இம்முறை ஒரு திரில்லர் திரைப்படத்தை இயக்கவுள்ளேன். இந்நேரத்தில் என் மீது நம்பிக்கை வைத்த நடிகர் விஜய் ஆண்டனி, இன்ஃபினிடி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனத்துக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. படத்தின் தலைப்பு, படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் தொழில்நுட்பக் குழுவினர் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.