ETV Bharat / sitara

#saandhkiaankh - டாப்சி படத்துக்கு மாநில ஜிஎஸ்டி விலக்கு!

டாப்சி-பூமி பெட்னேகர் இணைந்து நடித்துள்ள ‘சாண்ட் கி ஆங்’ (Saand Ki Aankh) திரைப்படத்துக்கு ராஜஸ்தான் அரசு மாநில ஜிஎஸ்டி வரி விலக்கு அளித்துள்ளது.

author img

By

Published : Oct 10, 2019, 7:05 PM IST

Taapsee's saand ki aankh exempted from state GST in Rajasthan

பிரகாஷி தோமர், சந்திரோ தோமர் என்னும் வயதான துப்பாக்கிச் சுடும் வீராங்கனைகளின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட படம் ‘சாண்ட் கி ஆங்’ (Saand Ki Aankh). துஷர் ஹிராநந்தனி இயக்கியுள்ள இப்படத்துக்கு ஜக்தீப் சித்து வசனம் எழுதியுள்ளார். அக்டோபர் 25ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Taapsee's saand ki aankh exempted from state GST in Rajasthan
Taapsee's saand ki aankh exempted from state GST in Rajasthan

இந்தப் படத்துக்காக டாப்சியும் பூமி பட்னேகரும் ‘ஷூட்டிங் பாட்டிகளை’ சந்தித்து பயிற்சி பெற்றனர். பாலிவுட்டில் பயோகிராபி (வாழ்க்கை வரலாறு) படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. சர்ப்ஜித், பாக் மில்கா பாக், பேண்டிட் குயின் என அதற்கு பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம். அந்த வரிசையில் தவிர்க்க முடியாத வெற்றிப்படமாக ‘சாண்ட் கி ஆங்’ இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்திரோ தோமராக பூமி பட்னேகரும், பிரகாஷி தோமராக டாப்சியும் நடித்துள்ள இப்படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட்டுடன் இணைந்து அனுராக் கஷ்யப் தயாரித்துள்ளார். இந்நிலையில் சாண்ட் கி ஆங் திரைப்படத்துக்கு ராஜஸ்தான் மாநில அரசு ஜிஎஸ்டி வரி விலக்களித்துள்ளது சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.

இதையும் வாசிங்க: #SaandKiAankh - அவமானங்கள் தந்த வெற்றி: ஷூட்டிங் பாட்டிகளின் வரலாறு

பிரகாஷி தோமர், சந்திரோ தோமர் என்னும் வயதான துப்பாக்கிச் சுடும் வீராங்கனைகளின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட படம் ‘சாண்ட் கி ஆங்’ (Saand Ki Aankh). துஷர் ஹிராநந்தனி இயக்கியுள்ள இப்படத்துக்கு ஜக்தீப் சித்து வசனம் எழுதியுள்ளார். அக்டோபர் 25ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Taapsee's saand ki aankh exempted from state GST in Rajasthan
Taapsee's saand ki aankh exempted from state GST in Rajasthan

இந்தப் படத்துக்காக டாப்சியும் பூமி பட்னேகரும் ‘ஷூட்டிங் பாட்டிகளை’ சந்தித்து பயிற்சி பெற்றனர். பாலிவுட்டில் பயோகிராபி (வாழ்க்கை வரலாறு) படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. சர்ப்ஜித், பாக் மில்கா பாக், பேண்டிட் குயின் என அதற்கு பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம். அந்த வரிசையில் தவிர்க்க முடியாத வெற்றிப்படமாக ‘சாண்ட் கி ஆங்’ இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்திரோ தோமராக பூமி பட்னேகரும், பிரகாஷி தோமராக டாப்சியும் நடித்துள்ள இப்படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட்டுடன் இணைந்து அனுராக் கஷ்யப் தயாரித்துள்ளார். இந்நிலையில் சாண்ட் கி ஆங் திரைப்படத்துக்கு ராஜஸ்தான் மாநில அரசு ஜிஎஸ்டி வரி விலக்களித்துள்ளது சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.

இதையும் வாசிங்க: #SaandKiAankh - அவமானங்கள் தந்த வெற்றி: ஷூட்டிங் பாட்டிகளின் வரலாறு

Intro:Body:நாடாளுமன்ற கூட்டணியில் வலியுறுத்திய கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றாததால் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், "தமிழகத்தில் 21 ஆம் தேதி நடைபெறயிருக்கின்ற விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல்களில் புதிய தமிழகம் கட்சி எப்படிப்பட்ட நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று இன்று எனது தலைமையில் புதிய தமிழகம் கட்சியின் அரசியல் உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் மொத்தம் 18 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளோம். அதில் சிறப்பு தீர்மானங்களாக நாளை தமிழகத்துக்கு வரயிருக்கும் சீன தேசத்து அதிபர் ஸி ஜிங்பின்னும் பாரத பிரதமர் மோடி அவர்களுக்கும் சந்திக்கவுள்ளனர். அவர்களின் வருகையை வரவேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்யும்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியிலும் தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியிலும் புதிய தமிழகம் கட்சி இடம்பெற்றது. அப்போது மிக முக்கிய கோரிக்கையை முதல்வரிடத்தில் வைத்தோம். மருதநில மக்களாக குறிப்பிடப்பட்டுள்ள மக்களின் ஆறு உட்பிரிவுகளை ஒன்றாகி தேவந்திர குல வேளாளராக அழைத்திட அரசாணை வெளியி வேண்டும் என்றும் அந்த மகக்ள் தற்போது இடம்பெற்றுள்ள பட்டியல் பிரிவிலிருந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியிலுக்கு மாற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். தேர்தல் முடிந்தவுடன் நிறைவேற்றப்படும் என்று உத்தரவாதம் அளித்ததால் நாங்கள் அ.இ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றோம்.

ஆனால் தேர்தல் முடிந்து இதுவரை அந்த கோரிக்கை நிறைவேற்ற படவில்லை. முதல்வர் அவர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து தேவந்திர குல மக்கள் தேர்தலை புறக்கணித்து பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு மதிப்பு அளிக்கக்கூடிய வகையில் அ.தி.மு.க வுக்கு ஆதரவு அளிக்கக்கூடாது என்று இன்று நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதனடிப்படையில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.முக. வுக்கு ஆதரவு அளிப்பதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி எந்த கட்சிக்கும் இந்த தேர்தலில் ஆதரவு இல்லை என்றும் முடிவு செய்துள்ளோம்.

நாடாளுமன்ற தோல்வியினால் அ.இ.அ.தி.மு.க வுக்கு ஒரு சோர்வு இருக்கும் என்பதால் ஜீன், ஜுலை மாதங்களில் அவர்களை தொடர்பு கொள்ளவில்லை. பின்னர் ஆகஸ்ட் மாதம் எழுதிய கடிதத்துக்கு எந்த பதிலும் வரவில்லை. எனவே எங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அ.தி.முக. வுக்கு ஆதரவு அளிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளோம்.

2010 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் இல்லாதபோது அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க. தான் வெற்றி பெறும் என்று பல அ.தி.முக. உறுப்பினர்கள் தி.மு.க வில் இணைந்துகொண்டிருந்த காலம் அப்போதும் ஜெயலலிதாவை சந்தித்து இந்த கோரிக்கையை வைத்தோம். ஆனால் தேர்தலுக்கு பின் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. நாங்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறோம். எனவே இதேபோன்று ஒரு வாக்குறுதி நம்பி புதிய தமிழகம் கட்சி இனியும் ஆதரவு தெரிவிக்க வழியில்லை. அரசாணை வெளியிடும் வரை ஆதரவு அளிக்கப போவதில்லை" என்று தெரிவித்தார்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் எல்லா வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக கூறுகிறார் என்ற கேள்விக்கு, "எல்லாமே பேச்சாக இருந்தால் எப்படி. தொடர்ந்து நாங்கள் ஏமாற்றப் படுகிறோம்" என்று
கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.