திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இயங்கிவரும் சிகரம் பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
பொங்கல் பண்டிகை நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், பெற்றோர் அனைவரும் கலந்துகொண்டனர். மாணவர்கள் பாரம்பரிய பாடல்களைப் பாடியும், நடனமாடியும் விழாவை சிறப்பித்தனர்.
மாணவர்களையும் பெற்றோர்களையும் மகிழ்விக்கும்விதமாக சூப்பர் சிங்கர் புகழ் பாடகர்கள் செந்தில் கணேஷ், ராஜலக்ஷ்மி ஜோடி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி அசத்தினர்.