ஹைதராபாத்: ‘ஃபிடா’ படத்தை இயக்கிய சேகர் கம்முலாவுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து அப்படத்தின் நாயகி சாய் பல்லவி பகிர்ந்துள்ளார்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சேகர் கம்முலா குறித்து சாய் பல்லவியிடம் கேட்டதற்கு, அவர் எனக்கு இயக்குநருக்கும் மேல். வாழ்க்கை மீதான எனது பார்வையை மாற்றியவர் அவர்தான். தொழில் ரீதியாக தவறு என தெரியும் விஷயம், உனக்கு சரி என்று தோன்றினால் அதற்காக போராட தயங்காதே என என்னை ஊக்குவித்தார். அவர் இல்லையென்றால் ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் இன்னும் சின்னக் குழந்தை போலதான் நடந்துகொண்டிருப்பேன் என தெரிவித்துள்ளார்.
![Sekhar Kammula more than a director to me: Sai Pallavi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14240541_538902562980869_1107657244_n_2912newsroom_1609244464_278.jpg)