ETV Bharat / sitara

ஆறு மாததிற்கு பிறகு படப்பிடிப்பில் கலந்துகொண்ட சல்மான் கான்!

author img

By

Published : Oct 5, 2020, 10:51 AM IST

நடிகர் சல்மான் கான் ஆறு மாதத்திற்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சல்மான் கான்
சல்மான் கான்

‘தபாங் 3’ படப்பிடிப்பை முடித்த கையோடு பிரபு தேவாவுக்கு அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார் சல்மான் கான். ‘ராதே’ (Radhe) என பெயரிடப்பட்ட இப்படத்தில் சல்மான் ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். இதில் ஜாக்கி ஷெராஃப், ரந்தீப் ஹூடா, சோஹேல் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். சல்மான் கானின் சொந்த தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் பரத் வில்லனாக நடித்துவருகிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளதாக நடிகர் சல்மான்கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில், ”ஆறு மாதங்களுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இத்திரைப்படம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: புதுச்சேரியில் விஜய்சேதுபதி ரசிகர் மன்ற வெட்டிப் படுகொலை

‘தபாங் 3’ படப்பிடிப்பை முடித்த கையோடு பிரபு தேவாவுக்கு அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார் சல்மான் கான். ‘ராதே’ (Radhe) என பெயரிடப்பட்ட இப்படத்தில் சல்மான் ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். இதில் ஜாக்கி ஷெராஃப், ரந்தீப் ஹூடா, சோஹேல் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். சல்மான் கானின் சொந்த தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் பரத் வில்லனாக நடித்துவருகிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளதாக நடிகர் சல்மான்கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில், ”ஆறு மாதங்களுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இத்திரைப்படம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: புதுச்சேரியில் விஜய்சேதுபதி ரசிகர் மன்ற வெட்டிப் படுகொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.