ETV Bharat / sitara

சச்சி பற்றி தெரிந்திருப்பது ஒரு கெளரவம் - ப்ரித்விராஜ் உருக்கம்

இயக்குநர் சச்சியின் மறைவு குறித்து நடிகர் ப்ரித்விராஜ் உருக்கமான கடிதம் ஒன்றை தனது சமூகவலைத்தளப்பக்கத்தில் எழுதியுள்ளார்.

author img

By

Published : Jun 20, 2020, 3:09 PM IST

இயக்குநர் சச்சி
இயக்குநர் சச்சி

மலையாள திரைப்பட இயக்குநர் சச்சிதானந்தன் இடுப்பு மாற்று அறுவை

சிகிச்சைகாக கடந்த சில நாள்களுக்கு முன் மருத்துவமனையில்

அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை முடிந்த நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது

இதைத்தொடர்ந்து திருசூரிலுள்ள மருத்துவமனையில் அதிதீவிர

சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சைப் பலனின்றி ஜூன் 18 ஆம் தேதி அவரது உயிர்

பிரிந்தது. இயக்குநர் சச்சிதானந்தனின் மறைவு மலையாள

திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,

பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்தனர்.

சச்சியின் மறைவு குறித்து ப்ரித்விராஜ் நீண்ட கடிதம் ஒன்றை தனது

ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

"சச்சி...நிறைய மெசேஜ்களும் சில விசித்திர அழைப்புகளும் வந்தன. நான்

எப்படி இருக்கிறேன் என்று கேட்கின்றனர். எனக்கு ஆறுதல்

கூறுகின்றனர். என்னையும் உங்களையும் தெரிந்த அனைவருக்கும்

நம்மையும் தெரியும் என நினைக்கிறேன்.

ஆனால் அவர்களில் பெரும்பாலாவனர்கள் என்னிடம் கூறிய ஒரு

விஷயத்தை நான் அமைதியாக மறுக்கிறேன். அது நீங்கள் உச்சத்துக்கு

சென்று விட்டீர்கள் என்ற வார்த்தை. உங்களுடைய கனவுகளையும்,

யோசனைகளைத் தெரிந்தவர்களில் ஒருவனாக அய்யப்பனும் கோஷியும்

உங்கள் உச்சம் அல்ல என்பதை நான் அறிவேன். இது தான் நீங்கள்

விரும்பிய ஆரம்பம். நீங்கள் விஸ்வரூபம் எடுக்கும் இந்த கட்டத்தை

அடைய உங்கள் ஒட்டுமொத்த படங்களும் ஒரு பயணமாக அமைந்தது

எனக்கு தெரியும். சொல்லப்படாத கதைகள் ஏராளம் உண்டு. பல

நிறைவேறாத கனவுகள் உண்டு. பல நேர வாட்ஸ்ப் வாய்ஸ் மெசேஜ்

கதை சொல்லலும் உண்டு. ஏராளமான தொலைபேசி அழைப்புகளும்

உண்டு. வரப்போகும் வருடங்களுக்கான இந்த மிகப்பெரிய திட்டத்தை

நீங்களும் நானும் உருவாக்கினோம். இப்போ திடீரென நீங்கள்

சென்றுவிட்டீர்கள்.

சினிமா குறித்த உங்கள் பார்வையும் வரப்போகும் ஆண்டுகளுக்குத்

தேவையான உங்கள் படங்களின் திட்டங்களையும் வேறுயாரிடமும்

சொல்லியிருக்கிறீர்களா என எனக்குத் தெரியவில்லை. ஆனால் என்னிடம்

கூறினீர்கள். நீங்கள் இருந்திருந்தால் அடுத்த 25 ஆண்டு மலையாள

சினிமாவும் என்னுடய எஞ்சியிருக்கும் சினிமா வாழ்க்கையும்

வேறுமாதிரி அமையும் என்பதை நான் அறிவேன்.

நடிகர் ப்ரித்விராஜ்
நடிகர் ப்ரித்விராஜ்

சினிமாவை விட்டுவிடுவோம். நீங்கள் என்னோடு இருக்க அந்த கனவுகள்

அனைத்தையும் நான் நிறைவேற்றுவேன். நாம் இருவரும் ஒரே

மாதிரியானவர்கள் என்று என்னிடம் சொல்வீர்கள். ஆம் நாம் ஒரே

மாதிரியானவர்கள்தான். ஆனால் என்னை விட நீங்கள் மிகவும்

வித்தியாசமாக உணர்பவர் என்று நான் இப்போது நம்புகிறேன்.

உங்களைப் பற்றி தெரிந்திருப்பது ஒரு கெளரவம் சச்சி. என்னுடைய ஒரு

பகுதி உங்களுடனே சென்றுவிட்டது. இப்போதிலிருந்து உங்களை

நினைவில் கொள்வது என்னுடைய அந்த பகுதியையும் நினைவில்

கொள்வது போலாகும். நன்றாக ஓய்வெடுங்கள் சகோதரா...நன்றாக

ஓய்வெடுங்கள் ஜீனியஸ். உங்களை உலகின் மறுபக்கத்தில்

சந்திக்கிறேன். சாண்டல்வுட் கதையின் கிளைமாக்ஸை இன்னும் நீங்கள்

என்னிடம் சொல்லவில்லை" என உருக்கமாக எழுதியுள்ளார்.

சச்சி ப்ரித்விராஜ் - பிஜூ மேனனை வைத்து 2015 ஆம் ஆண்டு

‘அனார்கலி’ (Anarkali) என்னும் படத்தை இயக்கியிருந்தார். இந்தாண்டு

பிப்ரவரி மாதம் வெளியான ‘அய்யப்பனும் கோஷியும்’ இவர்களை வைத்து

அவர் இயக்கிய இரண்டாவது திரைப்படம். இப்படம் தற்போது தமிழ், தெலுங்கு,

இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் ஆகவுள்ளது.

மலையாள திரைப்பட இயக்குநர் சச்சிதானந்தன் இடுப்பு மாற்று அறுவை

சிகிச்சைகாக கடந்த சில நாள்களுக்கு முன் மருத்துவமனையில்

அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை முடிந்த நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது

இதைத்தொடர்ந்து திருசூரிலுள்ள மருத்துவமனையில் அதிதீவிர

சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சைப் பலனின்றி ஜூன் 18 ஆம் தேதி அவரது உயிர்

பிரிந்தது. இயக்குநர் சச்சிதானந்தனின் மறைவு மலையாள

திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,

பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்தனர்.

சச்சியின் மறைவு குறித்து ப்ரித்விராஜ் நீண்ட கடிதம் ஒன்றை தனது

ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

"சச்சி...நிறைய மெசேஜ்களும் சில விசித்திர அழைப்புகளும் வந்தன. நான்

எப்படி இருக்கிறேன் என்று கேட்கின்றனர். எனக்கு ஆறுதல்

கூறுகின்றனர். என்னையும் உங்களையும் தெரிந்த அனைவருக்கும்

நம்மையும் தெரியும் என நினைக்கிறேன்.

ஆனால் அவர்களில் பெரும்பாலாவனர்கள் என்னிடம் கூறிய ஒரு

விஷயத்தை நான் அமைதியாக மறுக்கிறேன். அது நீங்கள் உச்சத்துக்கு

சென்று விட்டீர்கள் என்ற வார்த்தை. உங்களுடைய கனவுகளையும்,

யோசனைகளைத் தெரிந்தவர்களில் ஒருவனாக அய்யப்பனும் கோஷியும்

உங்கள் உச்சம் அல்ல என்பதை நான் அறிவேன். இது தான் நீங்கள்

விரும்பிய ஆரம்பம். நீங்கள் விஸ்வரூபம் எடுக்கும் இந்த கட்டத்தை

அடைய உங்கள் ஒட்டுமொத்த படங்களும் ஒரு பயணமாக அமைந்தது

எனக்கு தெரியும். சொல்லப்படாத கதைகள் ஏராளம் உண்டு. பல

நிறைவேறாத கனவுகள் உண்டு. பல நேர வாட்ஸ்ப் வாய்ஸ் மெசேஜ்

கதை சொல்லலும் உண்டு. ஏராளமான தொலைபேசி அழைப்புகளும்

உண்டு. வரப்போகும் வருடங்களுக்கான இந்த மிகப்பெரிய திட்டத்தை

நீங்களும் நானும் உருவாக்கினோம். இப்போ திடீரென நீங்கள்

சென்றுவிட்டீர்கள்.

சினிமா குறித்த உங்கள் பார்வையும் வரப்போகும் ஆண்டுகளுக்குத்

தேவையான உங்கள் படங்களின் திட்டங்களையும் வேறுயாரிடமும்

சொல்லியிருக்கிறீர்களா என எனக்குத் தெரியவில்லை. ஆனால் என்னிடம்

கூறினீர்கள். நீங்கள் இருந்திருந்தால் அடுத்த 25 ஆண்டு மலையாள

சினிமாவும் என்னுடய எஞ்சியிருக்கும் சினிமா வாழ்க்கையும்

வேறுமாதிரி அமையும் என்பதை நான் அறிவேன்.

நடிகர் ப்ரித்விராஜ்
நடிகர் ப்ரித்விராஜ்

சினிமாவை விட்டுவிடுவோம். நீங்கள் என்னோடு இருக்க அந்த கனவுகள்

அனைத்தையும் நான் நிறைவேற்றுவேன். நாம் இருவரும் ஒரே

மாதிரியானவர்கள் என்று என்னிடம் சொல்வீர்கள். ஆம் நாம் ஒரே

மாதிரியானவர்கள்தான். ஆனால் என்னை விட நீங்கள் மிகவும்

வித்தியாசமாக உணர்பவர் என்று நான் இப்போது நம்புகிறேன்.

உங்களைப் பற்றி தெரிந்திருப்பது ஒரு கெளரவம் சச்சி. என்னுடைய ஒரு

பகுதி உங்களுடனே சென்றுவிட்டது. இப்போதிலிருந்து உங்களை

நினைவில் கொள்வது என்னுடைய அந்த பகுதியையும் நினைவில்

கொள்வது போலாகும். நன்றாக ஓய்வெடுங்கள் சகோதரா...நன்றாக

ஓய்வெடுங்கள் ஜீனியஸ். உங்களை உலகின் மறுபக்கத்தில்

சந்திக்கிறேன். சாண்டல்வுட் கதையின் கிளைமாக்ஸை இன்னும் நீங்கள்

என்னிடம் சொல்லவில்லை" என உருக்கமாக எழுதியுள்ளார்.

சச்சி ப்ரித்விராஜ் - பிஜூ மேனனை வைத்து 2015 ஆம் ஆண்டு

‘அனார்கலி’ (Anarkali) என்னும் படத்தை இயக்கியிருந்தார். இந்தாண்டு

பிப்ரவரி மாதம் வெளியான ‘அய்யப்பனும் கோஷியும்’ இவர்களை வைத்து

அவர் இயக்கிய இரண்டாவது திரைப்படம். இப்படம் தற்போது தமிழ், தெலுங்கு,

இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் ஆகவுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.