'சாஹோ' திரைப்படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம், 'ராதே ஷ்யாம்'. ராதா கிருஷ்ணகுமார் இயக்கி வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளிலும் தயாராகி வருகிறது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக தற்காலிகமாகப் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், இதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து மீண்டும் துவங்கவுள்ளதாகப் படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதுதவிர பிரபாஸ் ஓம் ராவத் இயக்கத்தில், 'ஆதிபுருஷ்’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.