ETV Bharat / sitara

'முயற்சி செய்யாமல் முடியாது என்று நினைக்கக் கூடாது' - 'துக்ளக் தர்பார்' மஞ்சிமா!

author img

By

Published : Jul 9, 2020, 6:33 PM IST

நடிகை மஞ்சிமா மோகன் 'துக்ளக் தர்பார்' படப்பிடிப்பில் நடந்த சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

மஞ்சிமா மோகன்
மஞ்சிமா மோகன்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் 'துக்ளக் தர்பார்'. இதில் மஞ்சிமா மோகன், அதிதி ராவ், பார்த்திபன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதற்கிடையில் நேற்று 'துக்ளக் தர்பார்' படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை நடிகை மஞ்சிமா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட தனது புகைப்படத்தைப் பகிர்ந்த அவர், ''துக்ளக் தர்பாரில் நான் நடித்த முதல் காட்சி இதுதான். எனக்கு அப்போது காலில் அறுவைச் சிகிச்சை நடைபெற்றிருந்தது. அதனால் என்னால் சரியாக எழுந்துகூட நடக்க முடியவில்லை.

அப்படி இருக்கும் சூழலில் முதல் நாள் படப்பிடிப்பிற்கு மிகவும் பதற்றத்தோடு சென்றேன். இயக்குநர் என்னிடம் வந்து காட்சியை விவரித்துவிட்டு, நான் அக்காட்சியில் நடந்து வரவேண்டும் என்று கூறினார்.

கால்வலி தெரியாமல் இயல்பாகவும் நடக்க வேண்டும்; அதே நேரத்தில் எமோஷன்ஸ்களை எப்படி காட்டப்போகிறேன் என்று நினைத்து அதிர்ச்சி அடைந்தேன். இயக்குநரிடம் எனது பிரச்னையைச் சொன்னேன். எதைப் பற்றியும் கவலைப்படாமல் சிறப்பாகச் செய்யுங்கள் போதும் என்று கூறினார்.
இதன்மூலம், வாழ்க்கையில் சில விஷயங்களை நாம் முயற்சி செய்யாமல், அது முடியாது என்று நினைக்கக் கூடாது என்பதைப் புரிந்துகொண்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் 'துக்ளக் தர்பார்'. இதில் மஞ்சிமா மோகன், அதிதி ராவ், பார்த்திபன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதற்கிடையில் நேற்று 'துக்ளக் தர்பார்' படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை நடிகை மஞ்சிமா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட தனது புகைப்படத்தைப் பகிர்ந்த அவர், ''துக்ளக் தர்பாரில் நான் நடித்த முதல் காட்சி இதுதான். எனக்கு அப்போது காலில் அறுவைச் சிகிச்சை நடைபெற்றிருந்தது. அதனால் என்னால் சரியாக எழுந்துகூட நடக்க முடியவில்லை.

அப்படி இருக்கும் சூழலில் முதல் நாள் படப்பிடிப்பிற்கு மிகவும் பதற்றத்தோடு சென்றேன். இயக்குநர் என்னிடம் வந்து காட்சியை விவரித்துவிட்டு, நான் அக்காட்சியில் நடந்து வரவேண்டும் என்று கூறினார்.

கால்வலி தெரியாமல் இயல்பாகவும் நடக்க வேண்டும்; அதே நேரத்தில் எமோஷன்ஸ்களை எப்படி காட்டப்போகிறேன் என்று நினைத்து அதிர்ச்சி அடைந்தேன். இயக்குநரிடம் எனது பிரச்னையைச் சொன்னேன். எதைப் பற்றியும் கவலைப்படாமல் சிறப்பாகச் செய்யுங்கள் போதும் என்று கூறினார்.
இதன்மூலம், வாழ்க்கையில் சில விஷயங்களை நாம் முயற்சி செய்யாமல், அது முடியாது என்று நினைக்கக் கூடாது என்பதைப் புரிந்துகொண்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.