ETV Bharat / sitara

மேன் vs வைல்டு: புலிகள் காப்பகத்தின் விதிகளை மீறி ஆவணப்படம்...!

author img

By

Published : Jan 29, 2020, 9:17 AM IST

ரஜினிகாந்த் கலந்துகொண்ட மேன் vs வைல்ட் ஆவணப்படம் ஷூட்டிங் புலிகள் காப்பகத்தின் விதிகளை மீறி எடுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

புலிகள் காப்பகத்தின் விதிகளை மீறி ஆவணப்படம் எடுக்கப்பட்டது!
புலிகள் காப்பகத்தின் விதிகளை மீறி ஆவணப்படம் எடுக்கப்பட்டது!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மேன் vs வைல்டு நிகழ்ச்சி உலகம் முழுவதிலும் பிரபலமானது. இதில் நேற்று நடிகர் ரஜினிகாந்த், உலகப் புகழ்பெற்ற வனவிலங்கு சாகச இயக்குநர் பியர் கிரிஸ்யுடன் கர்நாடக எல்லையில் உள்ள பண்டிப்பூர் வனப்பகுதிக்குச் சென்றார்.

ஆவணப்படம் எடுக்க மத்திய மாநில வனத் துறை ஐந்து நாள்கள் அனுமதி வழங்கியதாகப் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தின், இயக்குநர் பாலச்சந்திரா கூறியுள்ளார்.

மேலும் ஆவணப்படம் தயாரிப்புக் குழுவில் பத்து பேர் இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், காடுகளுக்குள் அதிக இரைச்சல் கொண்ட வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக வனத் துறையினரின் ஒரு சில வாகனங்களையும், வனக் குழுவினரையும் மட்டுமே பயன்படுத்தி படப்பிடிப்பிற்கான கட்டணத்தை செலுத்தியதாகவும் கூறியுள்ளார்.

புலிகள் காப்பகத்தின் விதிகளை மீறி ஆவணப்படம்

அது மட்டுமின்றி அனுமதியில்லாமல் ட்ரோன் பயன்படுத்தப்பட்டதாகவும், அதிக இரைச்சலுடன் வாகனம் பயன்படுத்தி, புலிகள் காப்பகத்தின் விதியை மீறி படப்பிடிப்பு நடத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் படப்பிடிப்புத் தளத்தில் பத்திரிகை, காட்சி ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை எனக் கர்நாடக பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் நேற்று மாலை ரஜினிகாந்துக்கு, புலிகள் காப்பகத்தில் சிறிய காயம் ஏற்பட்டதால் மீண்டும் சென்னை திரும்பிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அருண் விஜய்யின் 'சினம்' மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மேன் vs வைல்டு நிகழ்ச்சி உலகம் முழுவதிலும் பிரபலமானது. இதில் நேற்று நடிகர் ரஜினிகாந்த், உலகப் புகழ்பெற்ற வனவிலங்கு சாகச இயக்குநர் பியர் கிரிஸ்யுடன் கர்நாடக எல்லையில் உள்ள பண்டிப்பூர் வனப்பகுதிக்குச் சென்றார்.

ஆவணப்படம் எடுக்க மத்திய மாநில வனத் துறை ஐந்து நாள்கள் அனுமதி வழங்கியதாகப் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தின், இயக்குநர் பாலச்சந்திரா கூறியுள்ளார்.

மேலும் ஆவணப்படம் தயாரிப்புக் குழுவில் பத்து பேர் இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், காடுகளுக்குள் அதிக இரைச்சல் கொண்ட வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக வனத் துறையினரின் ஒரு சில வாகனங்களையும், வனக் குழுவினரையும் மட்டுமே பயன்படுத்தி படப்பிடிப்பிற்கான கட்டணத்தை செலுத்தியதாகவும் கூறியுள்ளார்.

புலிகள் காப்பகத்தின் விதிகளை மீறி ஆவணப்படம்

அது மட்டுமின்றி அனுமதியில்லாமல் ட்ரோன் பயன்படுத்தப்பட்டதாகவும், அதிக இரைச்சலுடன் வாகனம் பயன்படுத்தி, புலிகள் காப்பகத்தின் விதியை மீறி படப்பிடிப்பு நடத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் படப்பிடிப்புத் தளத்தில் பத்திரிகை, காட்சி ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை எனக் கர்நாடக பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் நேற்று மாலை ரஜினிகாந்துக்கு, புலிகள் காப்பகத்தில் சிறிய காயம் ஏற்பட்டதால் மீண்டும் சென்னை திரும்பிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அருண் விஜய்யின் 'சினம்' மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்

Intro:Body:tn_erd_01_sathy_rajinikanth_vis_tn10009

பண்டிப்பூர் காட்டில் வன பாதுகாப்பு குறித்த ஆவணப்படம் : ரஜினிகாந்த் பியர்கிரில்ஸ் பங்கேற்பு:
.ரஜியுடன் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டிய கர்நாடக வனத்துறையினர்

தமிழகம் கேரளா மற்றும் கர்நாடக எல்லையில் உள்ள பண்டிப்பூர் வனப்பகுதியில் ரஜினிகாந்த் மற்றும் உலக புகழ்பெற்ற வனவிலங்கு சாகச இயக்குனர் பியர் கிரில்ஸ் மற்றும் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ஆகியோர் நடிக்கும் 'மேன் வெர்சஸ் வைல்ட்' என்ற ஆவணப்படம் படமாக்கப்படுகிறது. மத்திய மாநில வனத்துறையின் அனுமதி பெற்று வனப் பாதுகாப்பு குறித்த ஆவணப்படத்துக்கு 5 நாள்கள் வனத்தில் வைத்து படமாக்கப்படுகிறது என பந்திப்பூர் புலிகள் காப்பகத்தின் இயக்குநர் பாலச்சந்திரா கூறியுள்ளார்.
ஆவணப்படம் தயாரிப்புக் குழுவில் பத்து பேர் இருந்ததாகவும், காடுகளுக்குள் அதிக இரைச்சல் கொண்ட வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக ஒரு சில வனத்துறை வாகனங்களையும், வனக் குழுவினரையும் மட்டுமே பயன்படுத்தி படப்பிடிப்பிற்கான துறையின் கட்டணத்தை செலுத்தியதாகவும் அவர் கூறினார்.
அதே சமயம் , அனுமதியில்லாமல் ட்ரோன் பயன்படுத்தப்பட்டதாகவும் அதிக இரைச்சலுடன் வாகனம் பயன்படுத்தப்பட்டதாகவும் புலிகள் காப்பகத்தின் நடத்தை விதிகள் மீறி படப்பிடிபபு நடந்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. படப்படிப்பின்போது கர்நாடக வனத்துறையினர் ரஜினியுடன் நின்று குரூப் படம் எடுத்துக்கொண்டனர். படப்பிடிப்பு தளத்தில் பத்திரிகை மற்றும் காட்சி ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை என கர்நாடக பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.