ETV Bharat / sitara

களவாணி-2 படம் வெளியிட இடைக்கால தடை

author img

By

Published : Jul 3, 2019, 4:01 PM IST

இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிக்கும் களவாணி-2 படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

களவாணி-2 படத்துக்கு இடைக்கால தடை

இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான படம் களவாணி. இப்படத்தின் கலகலப்பான திரைக்கதையும், விமல், சரண்யா, இளவரசன் ஆகியோரின் தேர்ந்த நடிப்பால் இப்படம், ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் அறிமுகமான இயக்குநர் சற்குணம், விமல், ஓவியா ஆகியோருக்கு சிறந்த தொடக்கமாகவும் இருந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை, இயக்குநர் சற்குணம் எடுத்துள்ளார். முதல் பாகத்தில் நடித்த விமலும், ஓவியாவும் ஜோடி போட்டு நடித்துள்ளனர். அனைத்து பணிகளும் முடிந்து, படம் வெளியீ்ட்டுக்கு தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் இணை தயாரிப்பாளரான ஜெயக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், களவாணி 2 படத்தை தயாரிப்பதற்கு ஒப்பந்தப்படி இயக்குநர் சற்குணம் தன்னிடம் வாங்கிய ரூ.67 லட்சத்தை வட்டியுடன் தரவில்லை என்றும், பணத்தை திருப்பி தரும்வரை படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்னிலையில் இன்று நடைபெற்றது. விசாரணைக்கு பிறகு, களவாணி 2 படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதனால் இப்படம் வெளியாகுவதில் சிக்கல் நீடிக்கிறது.

இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான படம் களவாணி. இப்படத்தின் கலகலப்பான திரைக்கதையும், விமல், சரண்யா, இளவரசன் ஆகியோரின் தேர்ந்த நடிப்பால் இப்படம், ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் அறிமுகமான இயக்குநர் சற்குணம், விமல், ஓவியா ஆகியோருக்கு சிறந்த தொடக்கமாகவும் இருந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை, இயக்குநர் சற்குணம் எடுத்துள்ளார். முதல் பாகத்தில் நடித்த விமலும், ஓவியாவும் ஜோடி போட்டு நடித்துள்ளனர். அனைத்து பணிகளும் முடிந்து, படம் வெளியீ்ட்டுக்கு தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் இணை தயாரிப்பாளரான ஜெயக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், களவாணி 2 படத்தை தயாரிப்பதற்கு ஒப்பந்தப்படி இயக்குநர் சற்குணம் தன்னிடம் வாங்கிய ரூ.67 லட்சத்தை வட்டியுடன் தரவில்லை என்றும், பணத்தை திருப்பி தரும்வரை படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்னிலையில் இன்று நடைபெற்றது. விசாரணைக்கு பிறகு, களவாணி 2 படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதனால் இப்படம் வெளியாகுவதில் சிக்கல் நீடிக்கிறது.

Intro:Body:

kalavani 2 movie 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.