ETV Bharat / sitara

இரண்டு நாள்களில், நான்கு உயிர்களைக் காவு வாங்கிய கரோனா! - கரோனா வைரஸ்

மதுரை மாவட்டத்தில், கடந்த இரண்டு நாள்களில், நான்கு பேர் கரோனா வைரஸால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மதுரை அரசு மருத்துவமனை
மதுரை அரசு மருத்துவமனை
author img

By

Published : Jun 25, 2020, 7:26 PM IST

Updated : Jun 25, 2020, 7:56 PM IST

மதுரை மாவட்டத்தில், கரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மதுரை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் இன்று (ஜூன் 25) மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதற்கு மறுப்புத் தெரிவித்த அம்மாவட்ட அரசு மருத்துவமனை நிர்வாகம், இன்று (ஜூன் 25) 4 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் 4 பேர் கரோனாவால் மதுரை மாவட்டத்தில் உயிரிழந்தது, அப்பகுதி மக்களிடையே மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில், கரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மதுரை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் இன்று (ஜூன் 25) மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதற்கு மறுப்புத் தெரிவித்த அம்மாவட்ட அரசு மருத்துவமனை நிர்வாகம், இன்று (ஜூன் 25) 4 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் 4 பேர் கரோனாவால் மதுரை மாவட்டத்தில் உயிரிழந்தது, அப்பகுதி மக்களிடையே மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Jun 25, 2020, 7:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.