ETV Bharat / sitara

மாணவர்களை வியாபாரப் பொருளாக பார்க்கும் கல்லூரிகள்

தனியார் கல்லூரிகள் மாணவர்களை வியாபாரப் பொருளாக பார்க்கும் விதத்தையே 'அடுத்த சாட்டை' படத்தில் காண்பித்திருப்பதாக படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Aug 8, 2019, 10:13 PM IST

Adudhasaattai

அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா, யுவன், மகிமா நம்பியார் ஆகியோர் நடிப்பில் சாட்டை திரைப்படம் 2012 ஆம் ஆண்டு வெளியானது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமாக 'அடுத்த சாட்டை' என்ற படம் உருவாகி உள்ளது. இப்படத்திலும் சாட்டை படத்தில் நடித்திருந்த சமுத்திரகனி, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை பிரபு திலக் தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இவ்விழாவில், சமுத்திரகனி, தம்பி ராமையா, அதுல்யா ரவி, காவல் துறை அலுவலர் ஈஸ்வரன், கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

அப்போது சமுத்திரகனி பேசுகையில், ‘சாட்டை' படத்தில் நானும் தம்பி ராமையாவும் நன்றாக நடித்திருந்தோம். படமும் ஹிட். அப்படத்தில் நடித்ததற்காக நானும், தம்பி ராமையாவும் சம்பளம் வாங்கவில்லை. ஆனால் அந்தப் படத்தை வைத்து தனியார் நிறுவனங்கள் கோடிகோடியாக சம்பாதித்துவருகின்றனர். அதை வாங்கிய டிவி சேனல் வாரம்தோறும் ஒளிபரப்பி சம்பாதிக்கிறது.

அடுத்தசாட்டை இசை வெளியிட்டு விழாவில் சமுத்திரகனி

ஆசிரியர் பகவான் வாழ்வில் நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு படமாக எடுக்கலாம். அப்படி எடுக்கப்பட்ட படங்களில் ஒன்றுதான் ’அடுத்த சாட்டை’ என்றார்.

தொடர்ந்து படத்தின் இயக்குநர் அன்பழகன் பேசுகையில், ”சாட்டையில் பள்ளி மாணவர்களின் பிரச்னை குறித்து கூறியிருந்தோம். அடுத்த சாட்டையில் கிராமங்களுக்கு அருகில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரிதான் கதைக்களம்.

இதில், அக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் பிரச்னை, வாழ்க்கை முறையை கூறி உள்ளோம். மாணவர்களை தனியார் கல்லூரி வியாபாரப் பொருளாக பார்க்கிறது. சாட்டை போலவே இப்படமும் வரவேற்பு பெறும் என நம்புகிறோம்” என்றார்.

அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா, யுவன், மகிமா நம்பியார் ஆகியோர் நடிப்பில் சாட்டை திரைப்படம் 2012 ஆம் ஆண்டு வெளியானது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமாக 'அடுத்த சாட்டை' என்ற படம் உருவாகி உள்ளது. இப்படத்திலும் சாட்டை படத்தில் நடித்திருந்த சமுத்திரகனி, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை பிரபு திலக் தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இவ்விழாவில், சமுத்திரகனி, தம்பி ராமையா, அதுல்யா ரவி, காவல் துறை அலுவலர் ஈஸ்வரன், கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

அப்போது சமுத்திரகனி பேசுகையில், ‘சாட்டை' படத்தில் நானும் தம்பி ராமையாவும் நன்றாக நடித்திருந்தோம். படமும் ஹிட். அப்படத்தில் நடித்ததற்காக நானும், தம்பி ராமையாவும் சம்பளம் வாங்கவில்லை. ஆனால் அந்தப் படத்தை வைத்து தனியார் நிறுவனங்கள் கோடிகோடியாக சம்பாதித்துவருகின்றனர். அதை வாங்கிய டிவி சேனல் வாரம்தோறும் ஒளிபரப்பி சம்பாதிக்கிறது.

அடுத்தசாட்டை இசை வெளியிட்டு விழாவில் சமுத்திரகனி

ஆசிரியர் பகவான் வாழ்வில் நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு படமாக எடுக்கலாம். அப்படி எடுக்கப்பட்ட படங்களில் ஒன்றுதான் ’அடுத்த சாட்டை’ என்றார்.

தொடர்ந்து படத்தின் இயக்குநர் அன்பழகன் பேசுகையில், ”சாட்டையில் பள்ளி மாணவர்களின் பிரச்னை குறித்து கூறியிருந்தோம். அடுத்த சாட்டையில் கிராமங்களுக்கு அருகில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரிதான் கதைக்களம்.

இதில், அக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் பிரச்னை, வாழ்க்கை முறையை கூறி உள்ளோம். மாணவர்களை தனியார் கல்லூரி வியாபாரப் பொருளாக பார்க்கிறது. சாட்டை போலவே இப்படமும் வரவேற்பு பெறும் என நம்புகிறோம்” என்றார்.

Intro:அடுத்த சாட்டை படத்தின் இசை வெளியீட்டு விழாBody:சமுத்திரகனி நடிப்பில் 2012-ம் ஆண்டு வெளிவந்த படம் சாட்டை. தற்போது ‘அடுத்த சாட்டை’ என்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ளது. ஐ.பி.எஸ். அதிகாரியான திலகவதியின் மகன் பிரபுதிலக் தயாரித்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் சமுத்திரகனி தம்பி ராமையா அப்துல்லா ரவி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் காவல்துறை அதிகாரி ஈஸ்வரன் மற்றும் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய நடிகர் சமுத்திரக்கனி

சமுத்திரகனி, ‘சாட்டை படத்தில் நன்றாக நடித்தோம். படம் ஹிட். ஆனால் படத்தில் நடித்த நானும், தம்பி ராமையாவும் சம்பளம் வாங்கவில்லை. ஆனால் அந்தப் படத்தை வைத்து தனியார் நிறுவனங்கள் கோடிகோடியாக சம்பாதித்து வருகின்றனர் அதை வாங்கிய டிவி சேனல் வாரம்தோறும் ஒளிபரப்பி சம்பாதிக்கிறது.

சாட்டை படத்தில் நடிக்கும் போது பல சம்பவங்கள் நடைபெற்றது அந்த சம்பவங்கள் அனைத்தும் ஆசிரியர் பகவான் வி‌ஷயத்தில் அறிந்து அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன் அவர் எழுதிய புத்தகத்தில் பல கேள்விகள் உள்ளன. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு படமாக எடுக்கலாம். அடுத்த சாட்டை படம் அதில் ஒன்றுதான். இந்த படம் வெளியானால் எந்த ஆசிரியரும் தன் மாணவனை வகுப்பை விட்டு இனிய போக சொல்ல மாட்டார் என்றார்

இயக்குனர் அன்பழகன் பேசுகையில்

சாட்டையில் பள்ளி மாணவர்களின் பிரச்சினை குறித்து கூறியிருந்தோம் அடுத்த சாட்டையில் கிராமங்களுக்கு அருகில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரி தான் கதைக்களம். கிராமப்புற கல்லூரி மாணவர்களின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை சொல்லியிருக்கிறோம். தனியார் கல்லூரிமாணவர்களை வியாபாரப் பொருளாக பார்க்கும் விதத்தை சொல்லியிருக்கிறோம். சாட்டை போலவே இப்படமும் வரவேற்பு பெறும் என நம்புகிறோம்.


Conclusion:சென்னை ரூட்டு தல பிரச்சனையில் கடும் நடவடிக்கைகள் எடுத்து, மாணவர்களை நல்வழிப்படுத்திய சென்னை அம்பத்தூர் போலீஸ் இணை ஆணையர் ஈஸ்வர் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அடுத்த சாட்டை படத்தின் பாடல்கள் அடங்கிய இசை குறுந்தகட்டை வெளியிட்டார்


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.