ETV Bharat / sitara

திகில் படத்தில் இணையும் ஆதவ் கண்ணதாசன் - வாணி போஜன்!

author img

By

Published : Aug 22, 2020, 10:15 PM IST

பெரியவர்கள் முதல் குழந்தைகள் ரசிக்கும் விஷயங்கள் ஒருசேர இருப்பது போல் மர்மங்கள் நிறைந்த திகில் பாணியில் ஆதவ் கண்ணதாசன் - வாணி போஜன் நடிக்கும் தாழ் திறவா படம் உருவாகி வருகிறது.

Thazh Thiravaa first look poster
திகில் படத்தில் இணையும் ஆதவ் கண்ணதாசன் - வாணி போஜன்

சென்னை: ஆதவ் கண்ணதாசன் - வாணி போஜன் இணைந்து நடிக்கும் 'தாழ் திறவா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

பர்மேன் பிக்சர்ஸ் சார்பில் இயக்குநர் பரணி சேகரன் இயக்கத்தில் ஆதவ் கண்ணதாசன் மற்றும் வாணி போஜன் நடிக்கும் படம் 'தாழ் திறவா' வித்தியாசமான தலைப்பு மட்டுமில்லாமல், கதைக்களமும் வித்தியாசமாக அமைந்துள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Thazh Thiravaa first look poster
தாழ் திறவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

படம் குறித்து இதன் இயக்குநர் பரணி சேகரன் கூறியதாவது:

ஒரு சின்ன கிராமத்தில் தொல்பொருள் சோதனை ஒன்று நடக்கிறது. அங்கு மறைந்திருக்கும் நாகரீகம் ஒன்றை கண்டுபிடிக்கிறார்கள். அதனால் ஏற்படும் பிரச்னைகள் ஒவ்வொன்றாக எப்படி சரி செய்யப்படுகிறது என்பதுதான் படத்தின் கதை.

மர்மங்கள் நிறைந்த திகில் பாணியில் படம் அமைந்திருக்கும். அடுத்த காட்சி என்ன என்பதை யாராலும் யூகிக்க முடியாத அளவில் இருக்கும்.

தொல்பொருள் ஆய்வை மையப்படுத்திய படம் என்பதால், இதற்காக நிறைய முன் தயாரிப்பு தேவைப்பட்டது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் ரசிக்கும் விஷயங்கள் ஒரு சேர இருப்பது போல் படத்துக்கு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

Actor Adav kannadasan and vani bhojan inThazh Thiravaa
தாழ் திறவா படத்தில் ஆதவ் கண்ணதாசன் - வாணி போஜன்

ஆதவ் கண்ணதாசன், வாணி போஜன், சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'யாரடி நீ மோகினி' தொடரில் நடித்துள்ள லிசா என்ற பெண்ணும், லலித் என்ற பையனும் நடித்துள்ளார்கள்.

இரண்டு குட்டீஸும் கண்டிப்பாக பார்வையாளர்களைக் கவர்வார்கள். படத்தில் இன்னொரு முக்கியமான கதாபாத்திரம் இருக்கிறது. அது என்ன என்பது சஸ்பென்ஸ்.

ஊட்டி, கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் 25 நாள்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது 80 விழுக்காடு வரை படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படத்தின் கதையில் கிராபிக்ஸ் முக்கியமான பங்கு வகிக்கும்.

'ஆயிரத்தில் ஒருவன்', 'கடாரம் கொண்டான்' உள்ளிட்ட பல படங்களுக்கு கிராபிக்ஸ் மேற்பார்வையாளராக பணிபுரிந்த செந்தில் தலைமையில், கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்துக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார்.

ஒவ்வொருவருமே தங்களுடைய பணியை ரொம்பவே புரிந்து, ஆத்மார்த்தமாகச் செய்துள்ளனர். கண்டிப்பாக ஒவ்வொருவரின் பணியும் தனித்துவத்துடன் அசரவைக்கும். இப்போதைக்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மறைந்த பாடலாசிரியரும், கவிஞருமான கண்ணதாசனின் பேரனுமான ஆதவ் கண்ணதாசன், பொன்மாலை பொழுது என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து யாமிருக்க பயமே, காளிதாஸ் படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்த இவர், தாழ் திறவா படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இதையும் படிங்க: மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்ஷய்குமார்!

சென்னை: ஆதவ் கண்ணதாசன் - வாணி போஜன் இணைந்து நடிக்கும் 'தாழ் திறவா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

பர்மேன் பிக்சர்ஸ் சார்பில் இயக்குநர் பரணி சேகரன் இயக்கத்தில் ஆதவ் கண்ணதாசன் மற்றும் வாணி போஜன் நடிக்கும் படம் 'தாழ் திறவா' வித்தியாசமான தலைப்பு மட்டுமில்லாமல், கதைக்களமும் வித்தியாசமாக அமைந்துள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Thazh Thiravaa first look poster
தாழ் திறவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

படம் குறித்து இதன் இயக்குநர் பரணி சேகரன் கூறியதாவது:

ஒரு சின்ன கிராமத்தில் தொல்பொருள் சோதனை ஒன்று நடக்கிறது. அங்கு மறைந்திருக்கும் நாகரீகம் ஒன்றை கண்டுபிடிக்கிறார்கள். அதனால் ஏற்படும் பிரச்னைகள் ஒவ்வொன்றாக எப்படி சரி செய்யப்படுகிறது என்பதுதான் படத்தின் கதை.

மர்மங்கள் நிறைந்த திகில் பாணியில் படம் அமைந்திருக்கும். அடுத்த காட்சி என்ன என்பதை யாராலும் யூகிக்க முடியாத அளவில் இருக்கும்.

தொல்பொருள் ஆய்வை மையப்படுத்திய படம் என்பதால், இதற்காக நிறைய முன் தயாரிப்பு தேவைப்பட்டது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் ரசிக்கும் விஷயங்கள் ஒரு சேர இருப்பது போல் படத்துக்கு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

Actor Adav kannadasan and vani bhojan inThazh Thiravaa
தாழ் திறவா படத்தில் ஆதவ் கண்ணதாசன் - வாணி போஜன்

ஆதவ் கண்ணதாசன், வாணி போஜன், சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'யாரடி நீ மோகினி' தொடரில் நடித்துள்ள லிசா என்ற பெண்ணும், லலித் என்ற பையனும் நடித்துள்ளார்கள்.

இரண்டு குட்டீஸும் கண்டிப்பாக பார்வையாளர்களைக் கவர்வார்கள். படத்தில் இன்னொரு முக்கியமான கதாபாத்திரம் இருக்கிறது. அது என்ன என்பது சஸ்பென்ஸ்.

ஊட்டி, கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் 25 நாள்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது 80 விழுக்காடு வரை படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படத்தின் கதையில் கிராபிக்ஸ் முக்கியமான பங்கு வகிக்கும்.

'ஆயிரத்தில் ஒருவன்', 'கடாரம் கொண்டான்' உள்ளிட்ட பல படங்களுக்கு கிராபிக்ஸ் மேற்பார்வையாளராக பணிபுரிந்த செந்தில் தலைமையில், கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்துக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார்.

ஒவ்வொருவருமே தங்களுடைய பணியை ரொம்பவே புரிந்து, ஆத்மார்த்தமாகச் செய்துள்ளனர். கண்டிப்பாக ஒவ்வொருவரின் பணியும் தனித்துவத்துடன் அசரவைக்கும். இப்போதைக்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மறைந்த பாடலாசிரியரும், கவிஞருமான கண்ணதாசனின் பேரனுமான ஆதவ் கண்ணதாசன், பொன்மாலை பொழுது என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து யாமிருக்க பயமே, காளிதாஸ் படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்த இவர், தாழ் திறவா படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இதையும் படிங்க: மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்ஷய்குமார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.