ETV Bharat / sitara

'புதிதாக நடிக்கும் படங்களுக்குச் சம்பளம் வேண்டாம்' - நடிகர் அருள்தாஸ்

author img

By

Published : May 9, 2020, 12:42 PM IST

சென்னை: நடிகர் அருள்தாஸ் தயாரிப்பாளர்களின் நலன்கருதி, வரும் டிசம்பர் மாதம்வரை சம்பளம் வாங்காமல் திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

அருள்தாஸ்
அருள்தாஸ்

கரோனா தீநுண்மி காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் வருமானமின்றி தவித்துவருகின்றனர். அதிலும் திரைப்படங்கள் வெளியாகாததால் தயாரிப்பாளர்கள் பலரும் சிரமப்பட்டுவருகின்றனர்.

தயாரிப்பாளர்களின் நலன்கருதி, தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் சிலர் தங்களது ஊதியத்தைக் குறைத்துக்கொண்டனர். அந்த வரிசையில் தற்போது ஒளிப்பதிவாளரும், நடிகருமான அருள்தாஸ் இணைந்துள்ளார்.

இவர், இந்த வருடம் டிசம்பர் மாதம்வரை சம்பளம் வாங்காமல் படங்களில் நடித்துகொடுப்பதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

“மதுரையிலிருந்து சினிமா கனவுகளோடு வந்த நான், மீடியாவில் தற்காலிகமாக வேலை பார்த்தேன். அதனைத்தொடர்ந்து சினிமாவில் உதவி கேமராமேன், அதன் அடுத்தகட்டமாக கேமராமேன் பிறகு நடிகன் என்று படிப்படியாக உழைத்து, வளர்ந்து இன்று எங்கு சென்றாலும் ஒரு நடிகனாக அடையாளம் தெரிகிற அளவுக்கு வந்திருக்கிறேன்.

திரையில் நடிக்க ஆரம்பித்தது என்பது என் வாழ்வில் தற்செயலாக நடந்த சம்பவம்தான். முதல் படமான 'நான் மகான் அல்ல' தொடங்கி இப்போதுவரை தொடர்ந்து நடிகனாக பிசியாக இருக்கிறேன். அதற்குக் காரணம் எனது இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், தயாரிப்பு நிர்வாகிகள், திரைப்படத் துறை நண்பர்கள்தான். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்.

வாய்ப்புக் கொடுத்தது இயக்குநர்கள் என்றாலும், எனக்குச் சம்பளம் கொடுத்தது தயாரிப்பாளர்கள் என்னும் முதலாளிகள். இன்று வாழ்க்கையில் என் இருப்பிடம், உணவு, உடை, வாகனம் என்று அனைத்து வசதிகளையும் கொடுத்தது, அந்த முதலாளிகளின் பணம்தான். இந்த நேரத்தில் எனக்குச் சம்பளம் கொடுத்து, என் வாழ்வை மேம்படுத்த உதவிய அனைத்து முதலாளிகளுக்கும் எனது அன்பு கலந்த மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது உலகம் முழுக்க 'கோவிட்-19' என்ற கொடிய தீநுண்மி நமது திரைத் துறையில் பல தயாரிப்பாளர்கள், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிட்டது. ஆனாலும் நம் திரைத் துறையிலுள்ள ஃபெப்சி உள்ளிட்ட அனைத்துச் சங்கங்களும், ரஜினிகாந்த் உள்ளிட்ட உச்ச நட்சத்திரம் தொடங்கி பல நல்ல உள்ளம் படைத்த திரைத் துறை நண்பர்களும் இயன்றவரை பல உதவிகளைச் செய்துவருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.

நானும் என்னைச் சுற்றியிருக்கும் நம் திரைத் துறை நண்பர்கள், முகம் தெரியாத பலருக்கும் என்னால் இயன்றவரை உதவிகள் செய்து கொண்டுதான் இருக்கிறேன். இந்தச் சூழ்நிலையில் உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவுகளின் காரணமாக வருகிற சில மாதங்களுக்கு சினிமா எடுப்பதும் அதை வெளியிடுவதும் தயாரிப்பாளர்களுக்கு மிகுந்த சிரமமான காரியமாக இருக்கும்.

அதை மனத்தில் கொண்டு தயாரிப்பாளர்கள் நலன்கருதி சில நடிகர்களும், இயக்குநர்களும் அவர்களது சம்பளத்தில் குறிப்பிட்ட விழுக்காட்டைக் குறைத்துக் கொள்வதாகக் கூறியது உண்மையிலேயே இந்த நேரத்தில் பாராட்டத்தக்கது. அதேபோல என் வாழ்வை மேம்படுத்திய தயாரிப்பாளர்களுக்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி என்னுள்ளும் ஒலித்துக்கொண்டே இருந்தது.

அதன் காரணமாக இந்தாண்டு டிசம்பர் மாதம் வரை நான் புதிதாக நடிக்கும் எல்லாப் படங்களுக்கும் சம்பளம் எதுவும் வாங்காமல் என் உழைப்பை முழுமையாக, என் முதலாளிகளுக்கும், என் இயக்குநர் சகோதரர்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன்.

நான் பலகோடிகள் சம்பாதிக்கும் நடிகனில்லை என்றாலும், எனக்கும் தேவைகள் இருக்கின்றன. ஆனாலும், அதை என்னிடம் உள்ள பொருளாதாரத்தை வைத்தும், நண்பர்களிடம் உதவியாகப் பெற்றும் சில மாதங்கள் சமாளிக்க முடியும்.

எனவே, இந்த இக்கட்டான சூழலில் நான் சார்ந்த திரையுலக முதலாளிகளுக்கு கை்மாறாக இதைச் செய்வதில் உள்ளபடியே எனக்கு மிகுந்த மன நிறைவைத் தரும் என்று மனதார நம்புகிறேன்.

இலையுதிர் காலத்திற்குப் பின் மரங்கள், துளிர்விட்டு பசுமையான வசந்தகாலத்திற்கு காத்திருப்பது போலவே நம் வாழ்விலும் வசந்தகாலம் வருமென்று நம்பிக்கையோடு காத்திருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தொலைக்காட்சி ஒளிபரப்பில் தனுஷ் படம் செய்த சாதனை!

கரோனா தீநுண்மி காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் வருமானமின்றி தவித்துவருகின்றனர். அதிலும் திரைப்படங்கள் வெளியாகாததால் தயாரிப்பாளர்கள் பலரும் சிரமப்பட்டுவருகின்றனர்.

தயாரிப்பாளர்களின் நலன்கருதி, தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் சிலர் தங்களது ஊதியத்தைக் குறைத்துக்கொண்டனர். அந்த வரிசையில் தற்போது ஒளிப்பதிவாளரும், நடிகருமான அருள்தாஸ் இணைந்துள்ளார்.

இவர், இந்த வருடம் டிசம்பர் மாதம்வரை சம்பளம் வாங்காமல் படங்களில் நடித்துகொடுப்பதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

“மதுரையிலிருந்து சினிமா கனவுகளோடு வந்த நான், மீடியாவில் தற்காலிகமாக வேலை பார்த்தேன். அதனைத்தொடர்ந்து சினிமாவில் உதவி கேமராமேன், அதன் அடுத்தகட்டமாக கேமராமேன் பிறகு நடிகன் என்று படிப்படியாக உழைத்து, வளர்ந்து இன்று எங்கு சென்றாலும் ஒரு நடிகனாக அடையாளம் தெரிகிற அளவுக்கு வந்திருக்கிறேன்.

திரையில் நடிக்க ஆரம்பித்தது என்பது என் வாழ்வில் தற்செயலாக நடந்த சம்பவம்தான். முதல் படமான 'நான் மகான் அல்ல' தொடங்கி இப்போதுவரை தொடர்ந்து நடிகனாக பிசியாக இருக்கிறேன். அதற்குக் காரணம் எனது இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், தயாரிப்பு நிர்வாகிகள், திரைப்படத் துறை நண்பர்கள்தான். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்.

வாய்ப்புக் கொடுத்தது இயக்குநர்கள் என்றாலும், எனக்குச் சம்பளம் கொடுத்தது தயாரிப்பாளர்கள் என்னும் முதலாளிகள். இன்று வாழ்க்கையில் என் இருப்பிடம், உணவு, உடை, வாகனம் என்று அனைத்து வசதிகளையும் கொடுத்தது, அந்த முதலாளிகளின் பணம்தான். இந்த நேரத்தில் எனக்குச் சம்பளம் கொடுத்து, என் வாழ்வை மேம்படுத்த உதவிய அனைத்து முதலாளிகளுக்கும் எனது அன்பு கலந்த மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது உலகம் முழுக்க 'கோவிட்-19' என்ற கொடிய தீநுண்மி நமது திரைத் துறையில் பல தயாரிப்பாளர்கள், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிட்டது. ஆனாலும் நம் திரைத் துறையிலுள்ள ஃபெப்சி உள்ளிட்ட அனைத்துச் சங்கங்களும், ரஜினிகாந்த் உள்ளிட்ட உச்ச நட்சத்திரம் தொடங்கி பல நல்ல உள்ளம் படைத்த திரைத் துறை நண்பர்களும் இயன்றவரை பல உதவிகளைச் செய்துவருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.

நானும் என்னைச் சுற்றியிருக்கும் நம் திரைத் துறை நண்பர்கள், முகம் தெரியாத பலருக்கும் என்னால் இயன்றவரை உதவிகள் செய்து கொண்டுதான் இருக்கிறேன். இந்தச் சூழ்நிலையில் உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவுகளின் காரணமாக வருகிற சில மாதங்களுக்கு சினிமா எடுப்பதும் அதை வெளியிடுவதும் தயாரிப்பாளர்களுக்கு மிகுந்த சிரமமான காரியமாக இருக்கும்.

அதை மனத்தில் கொண்டு தயாரிப்பாளர்கள் நலன்கருதி சில நடிகர்களும், இயக்குநர்களும் அவர்களது சம்பளத்தில் குறிப்பிட்ட விழுக்காட்டைக் குறைத்துக் கொள்வதாகக் கூறியது உண்மையிலேயே இந்த நேரத்தில் பாராட்டத்தக்கது. அதேபோல என் வாழ்வை மேம்படுத்திய தயாரிப்பாளர்களுக்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி என்னுள்ளும் ஒலித்துக்கொண்டே இருந்தது.

அதன் காரணமாக இந்தாண்டு டிசம்பர் மாதம் வரை நான் புதிதாக நடிக்கும் எல்லாப் படங்களுக்கும் சம்பளம் எதுவும் வாங்காமல் என் உழைப்பை முழுமையாக, என் முதலாளிகளுக்கும், என் இயக்குநர் சகோதரர்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன்.

நான் பலகோடிகள் சம்பாதிக்கும் நடிகனில்லை என்றாலும், எனக்கும் தேவைகள் இருக்கின்றன. ஆனாலும், அதை என்னிடம் உள்ள பொருளாதாரத்தை வைத்தும், நண்பர்களிடம் உதவியாகப் பெற்றும் சில மாதங்கள் சமாளிக்க முடியும்.

எனவே, இந்த இக்கட்டான சூழலில் நான் சார்ந்த திரையுலக முதலாளிகளுக்கு கை்மாறாக இதைச் செய்வதில் உள்ளபடியே எனக்கு மிகுந்த மன நிறைவைத் தரும் என்று மனதார நம்புகிறேன்.

இலையுதிர் காலத்திற்குப் பின் மரங்கள், துளிர்விட்டு பசுமையான வசந்தகாலத்திற்கு காத்திருப்பது போலவே நம் வாழ்விலும் வசந்தகாலம் வருமென்று நம்பிக்கையோடு காத்திருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தொலைக்காட்சி ஒளிபரப்பில் தனுஷ் படம் செய்த சாதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.