ETV Bharat / sitara

டாப்ஸியை தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துகொண்ட வித்யா பாலன்

author img

By

Published : Jul 8, 2020, 3:18 PM IST

மும்பை: நடிகை டாப்ஸிக்குப் பிறகு, வித்யா பாலன் தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

வித்யா பாலன்
வித்யா பாலன்

கரோனா தொற்று நோய் அச்சம் காரணமாக இந்தியாவில் மார்ச் இறுதி வாரம் முதல் தேசிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்துவித படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து திரைப் பிரபலங்கள் தங்களது வீடுகளில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர்.

இதனையடுத்து தற்போது மத்திய மாநில அரசுகள் பல்வேறு நிபந்தனைகளுடன் படப்பிடிப்பை தொடங்கலாம் என அனுமதி அளித்துள்ளது. ஒரு சில மாநிலங்களில் சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகை டாப்ஸி பன்னு படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளதாக நேற்று (ஜூலை 7) தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருந்தார்.

இவரைத் தொடர்ந்து நடிகை வித்யா பாலன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒப்பனை செய்து முடிக்கும்போது தனது குழுவினருடன் போஸ் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும் அதில், '#backtowork' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒப்பனை குழுவினருடன் வித்யா பாலன்
ஒப்பனை குழுவினருடன் வித்யா பாலன்
அதுமட்டுமல்லாது வித்யா பாலன் தனது புதிய நண்பரான அகஸ்தியா அகா கஸ்டோவின் ( Agustya aka Gusto) செட்ஸில் இருந்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அதில், என் அன்பான அகஸ்தியா அகா கஸ்டோ உன்னை மறக்க முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அகஸ்தியா அக்கா கஸ்டோ பிரபல தயாரிப்பாளரான சாந்தி சிவாராமின் மகள் ஆவார்.
அகுஸ்தியா அக்கா கஸ்டோ
அகுஸ்தியா அக்கா கஸ்டோ
வித்யா பாலனின் நடிப்பில் உருவாகியுள்ள சகுந்தலா தேவி திரைப்படம் ஜூலை 31 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது.இப்படத்தையடுத்து வித்யா பாலன் அமித் வி. மசூர்கரின் ‘ஷெர்னி’ (Amit V. Masurkar's Sherni) என்னும் படத்தில் நடித்துவருகிறார்.

கரோனா தொற்று நோய் அச்சம் காரணமாக இந்தியாவில் மார்ச் இறுதி வாரம் முதல் தேசிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்துவித படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து திரைப் பிரபலங்கள் தங்களது வீடுகளில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர்.

இதனையடுத்து தற்போது மத்திய மாநில அரசுகள் பல்வேறு நிபந்தனைகளுடன் படப்பிடிப்பை தொடங்கலாம் என அனுமதி அளித்துள்ளது. ஒரு சில மாநிலங்களில் சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகை டாப்ஸி பன்னு படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளதாக நேற்று (ஜூலை 7) தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருந்தார்.

இவரைத் தொடர்ந்து நடிகை வித்யா பாலன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒப்பனை செய்து முடிக்கும்போது தனது குழுவினருடன் போஸ் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும் அதில், '#backtowork' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒப்பனை குழுவினருடன் வித்யா பாலன்
ஒப்பனை குழுவினருடன் வித்யா பாலன்
அதுமட்டுமல்லாது வித்யா பாலன் தனது புதிய நண்பரான அகஸ்தியா அகா கஸ்டோவின் ( Agustya aka Gusto) செட்ஸில் இருந்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அதில், என் அன்பான அகஸ்தியா அகா கஸ்டோ உன்னை மறக்க முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அகஸ்தியா அக்கா கஸ்டோ பிரபல தயாரிப்பாளரான சாந்தி சிவாராமின் மகள் ஆவார்.
அகுஸ்தியா அக்கா கஸ்டோ
அகுஸ்தியா அக்கா கஸ்டோ
வித்யா பாலனின் நடிப்பில் உருவாகியுள்ள சகுந்தலா தேவி திரைப்படம் ஜூலை 31 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது.இப்படத்தையடுத்து வித்யா பாலன் அமித் வி. மசூர்கரின் ‘ஷெர்னி’ (Amit V. Masurkar's Sherni) என்னும் படத்தில் நடித்துவருகிறார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.