பாலிவுட்டில் 2010ஆம் ஆண்டு அபினவ் காஷ்யப் இயக்கத்தில் நடிகர் சல்மான்கான் நடிப்பில் வெளியான படம் 'தபாங்'. இப்படம் அப்போது பெரும் வெற்றிபெற்றது. இதனையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகமான 'தாபாங் 2'ஆம் பாகத்தை அர்பாஸ் கான் இயக்கினார்.
இப்படத்தின் 3ஆம் பாகமான 'தாபாங் 3' படத்தை நடிகர் சல்மான்கானை வைத்து பிரபுதேவா இயக்கிவருகிறார். இப்படத்தில் சோனாக்ஷி சின்ஹா, சயீ மஞ்ச்ரேக்கர் (அறிமுகம்) ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
'தபாங் 3' திரைப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளதாக, படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடும் உரிமையை கே.ஜே.ஆர் பட நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இப்படத்தின் புரொமோஷன் பணியில் படக்குழு இறங்கியுள்ளது. வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் சென்னை பத்திரிக்கையாளர்களை சல்மான்கான் சந்தித்தார்.
அப்போது பத்திரைக்களார்கள் விஜய்யின் எந்த படத்தின் ரீமேக்கில் நடிக்க விரும்புகிறீர்கள் என்று கேள்வியெழுப்பினார். அதற்கு சல்மான்கான் தமிழ் படங்கள் தற்போது டப் செய்யப்பட்டு இங்கு ஒளிப்பரப்படுகிறது. அதனால் இங்குள்ள மக்களும் பார்க்கின்றனர். விஜய்யின் 'தெறி', 'திருபாச்சி' ஆகிய படங்கள் பற்றி பிரபு தேவாவிடம் கேட்டுள்ளேன் என்றார்.
இதையும் வாசிங்க: 'ஜல்லிக்கட்டு காளை ரெடி' - தமிழில் பேசிய சல்மான் கான்!