பழம்பெரும் பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் ஞாயிற்றுக்கிழமை காற்று மாசுபாட்டால் ஏற்பட்ட நோய்த் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 67 வயதான ரிஷி கபூர், தனது உறவினரின் வீட்டு நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் டெல்லி சென்றிருந்த நிலையில், அங்கு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், காற்று மாசு காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறேன். பயப்படும் அளவுக்கு ஏதுமில்லை எனத் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து தற்போது ரிஷி கபூரின் உடநலம் குறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், அவருக்கு வைரல் காய்சல் தான். பயப்படும் அளவுக்கு ஏதுமில்லை எனக் கூறியுள்ளனர்.
முன்னதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ரிஷி கபூர் கடந்த செப்டம்பர் மாதம் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று திரும்பினார். கடைசியாக ரிஷி கபூர் நடிப்பில் ஜீத்து இயக்கிய 'தி பாடி' திரைப்படம் வெளியாகியிருந்தது. அடுத்ததாக இவர் நடிக்கும் புதிய படத்திற்கு 'தி இன்டர்ன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஹாலிவுட் படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்தப் படத்தில் தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இதையும் வாசிங்க: ராம்சரண் - ஜூனியர் என்.டி.ஆரின் 'RRR' வெளியாகும் தேதி - படக்குழுவின் புதிய அப்டேட்