ETV Bharat / sitara

பக்கா மாஸ் காட்டும் கேஜிஎப் வில்லன்! தெறி போஸ்டர்!

author img

By

Published : Jul 30, 2019, 12:25 AM IST

கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்தில் ராக்கியை எதிர்த்து சண்டையிடும் பவர்புல் வில்லனாக சஞ்சய் தத் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் புதிய போஸ்டர் வலைதளத்தை கலக்கி வருகிறது.

kgf

2018ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களில் சினிமா ரசிகர்களை தாண்டி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த படம் கேஜிஎப். கன்னட சினிமாவில் இப்படியொரு பிரமாண்ட படைப்பை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். காட்சிக்கு காட்சி ராக்கியின் ரத்தம் தெறிக்கிற சண்டைகளை கண்டு பிரமித்து போனார்கள். இப்படம் கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் மாபெரும் வெற்றி பெற்று 100 கோடி ரூபாய் வசூலை பெற்ற முதல் கன்னட படம் என்ற பெருமையை பெற்றது. கதையின் நாயகனாக வரும் யஷ் அசாத்திய நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். படம் முழுக்க ஒரு நடிகரின் பிம்பத்தை தாங்கி கதைக்களம் கமர்ஷியல் வெற்றியை தொட்டது.

இப்படத்தின் முதல் பாகம் அதிரடியான வெற்றி முத்திரையை பதித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் கருடன் கொல்லப்பட்டதற்கு பின்பு நடக்கும் கதையாக உருவாகிறது. இதில் கருடனின் அண்ணனாக பிரபலமானவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதை கேஜிஎப் படக்குழு பூர்த்தி செய்துள்ளது. கேஜிஎப் ராக்கியை எதிர்த்து சண்டையிடும் பவர்புல் வில்லனாக சஞ்சய் தத் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. இப்படத்தில் டானுக்கே வித்தை காட்டும் ஆதிரா கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

sanjay dut
சஞ்சய் தத்

சஞ்சய் தத்தின் கெட்டப் வலைதளத்தில் வைரலாகி வருகிறது. படம் பார்க்கும் முன்பே ஆதிராவை வீழ்த்தி எப்படி தங்கக் கோளாறை கைப்பற்றுவார் ராக்கி என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் நிச்சயம் வசூல் சாதனை புரியும் என்று சாண்டல்வுட் திரையுலகினர் தெரிவித்துள்ளனர். இயக்குநர் பிரசாந்த் நீல் முதல் பாகம்போல் விறுவிறுப்பான காட்சிகளை அமைத்து வருகிறார். சஞ்சய் தத் அக்னிபத் படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

2018ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களில் சினிமா ரசிகர்களை தாண்டி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த படம் கேஜிஎப். கன்னட சினிமாவில் இப்படியொரு பிரமாண்ட படைப்பை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். காட்சிக்கு காட்சி ராக்கியின் ரத்தம் தெறிக்கிற சண்டைகளை கண்டு பிரமித்து போனார்கள். இப்படம் கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் மாபெரும் வெற்றி பெற்று 100 கோடி ரூபாய் வசூலை பெற்ற முதல் கன்னட படம் என்ற பெருமையை பெற்றது. கதையின் நாயகனாக வரும் யஷ் அசாத்திய நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். படம் முழுக்க ஒரு நடிகரின் பிம்பத்தை தாங்கி கதைக்களம் கமர்ஷியல் வெற்றியை தொட்டது.

இப்படத்தின் முதல் பாகம் அதிரடியான வெற்றி முத்திரையை பதித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் கருடன் கொல்லப்பட்டதற்கு பின்பு நடக்கும் கதையாக உருவாகிறது. இதில் கருடனின் அண்ணனாக பிரபலமானவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதை கேஜிஎப் படக்குழு பூர்த்தி செய்துள்ளது. கேஜிஎப் ராக்கியை எதிர்த்து சண்டையிடும் பவர்புல் வில்லனாக சஞ்சய் தத் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. இப்படத்தில் டானுக்கே வித்தை காட்டும் ஆதிரா கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

sanjay dut
சஞ்சய் தத்

சஞ்சய் தத்தின் கெட்டப் வலைதளத்தில் வைரலாகி வருகிறது. படம் பார்க்கும் முன்பே ஆதிராவை வீழ்த்தி எப்படி தங்கக் கோளாறை கைப்பற்றுவார் ராக்கி என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் நிச்சயம் வசூல் சாதனை புரியும் என்று சாண்டல்வுட் திரையுலகினர் தெரிவித்துள்ளனர். இயக்குநர் பிரசாந்த் நீல் முதல் பாகம்போல் விறுவிறுப்பான காட்சிகளை அமைத்து வருகிறார். சஞ்சய் தத் அக்னிபத் படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Intro:நிரந்தர நியாயவிலை கட்டிடம் கட்டித் தரக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு.Body:நிரந்தர நியாயவிலை கட்டிடம் கட்டித் தரக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு.


நாகை அடுத்த ஆவராணி கிராமத்தில் 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் . இந்நிலையில்,
இப்பகுதி மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கா அப்பகுதியில் ரேஷன் கடை செயல்பட்டு வந்தது.

இந்த சூழலில்,
நியாய விலை கடைக்கான கட்டிடம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலைக்கு உள்ளானதை அடுத்து கடை தற்காலிகமாக கிராமத்தின் ஒதுக்குபுறமாக உள்ள மகளிர் கூட்டுறவு சங்க கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.
இது ஆவராணி கிராம குடியிருப்பு பகுதியில் இருந்து 2 கி.மீ தூரம் தொலைவில் அமைந்திருந்ததால்
ரேஷன் பொருட்கள் வாங்க செல்லும் பெண்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக கூறி, ஏற்கனவே செயல்பட்டு வந்த பகுதியிலேயே புதிய கட்டடம் கட்டித் தரப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்துள்ளார், அதனை அரசு கண்டுகொள்ளவில்லை என்று அப்பகுதி மக்கள் இன்று முன்னாள் எம்.எல்.ஏ.க் கள் மாரிமுத்து மற்றும் நாகை மாலி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர் .

இதனை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகை பி.டி.ஓ. வெற்றிச்செல்வன் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் கிராம மக்கள் தற்காலிகமாக போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். இதனால் அங்கு போலீசார் திரண்டிருந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.