நடிகர் அமிதாப் பச்சனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்று செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து தனக்கு கரோனா தொற்று இருப்பதாக அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பதிவு வாயிலாக செய்தியை உறுதி செய்தார்.
இதையடுத்து, அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனும் தனக்கு கரோனா தொற்று இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கும், அவரது மகள் ஆரத்யாவுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து முதற்கட்ட சோதனை முடிவுகளில் ஐஸ்வர்யா ராய்க்கு கரோனா தொற்று இல்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இரண்டாம் கட்ட சோதனையில் ஐஸ்வர்யாவுக்கும் ஆரத்யாவுக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி திரைத்துறையினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க...அமிதாப் பச்சனுக்கு கரோனா, மருத்துவமனையில் அனுமதி