ETV Bharat / science-and-technology

ஐஐடி கான்பூர்: குளிர்சாதன பெட்டிகளில் மலிவு விலை காற்று சுத்திகரிப்பு சாதனம்

author img

By

Published : Nov 18, 2022, 4:20 PM IST

ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் குளிர்சாதன பெட்டிகளை மலிவு விலை காற்று சுத்திகரிப்பு சாதனங்களாக மாற்றும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.

IIT Kanpur researcher develops technology to turn ACs into air purifiers
IIT Kanpur researcher develops technology to turn ACs into air purifiers

கான்பூர்: ஐஐடி கான்பூரின் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று குளிர்சாதன பெட்டிகளை மலிவு விலை காற்று சுத்திகரிப்பு சாதனங்களாக மாற்றும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தை ஐஐடி கான்பூர் மற்றும் ஐஐஎஸ்சி பெங்களூருவை சேர்ந்த பேராசிரியர்கள் இணைந்து கண்டுபிடித்துள்ளனர். இதில் ஏர் ஃபில்டர்களால் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பு காற்று சுத்திகரிப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஏர் ஃபில்டர்களில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை குளிர்சாதன பெட்டிகளில் பொருத்தும்போது உயிருக்கு ஆபத்தான வைரஸ்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இது மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபனமாகியுள்ளது. இதுகுறித்து ஐஐடி கான்பூர் பேராசிரியர் அங்குஷ் ஷர்மா கூறுகையில், பொதுவாக குளிர் மற்றும் மழைகாலத்தில் காற்றில் அதிகப்படியான வைரஸ்கள் பரவுகின்றன. இந்த வைரஸ்கள் இந்த புதுமையான ஏர் ஃபில்டர் சிஸ்டம் பொருத்தப்பட்ட குளிர்சாதனப்பெட்டி மூலம் 99 சதவீத வடிகட்டப்படுகின்றன.

அதோடு சுத்தகரிக்கப்பட்ட காற்று மட்டுமே வெளியேற்றப்படுகிறது. இந்த உள்நாட்டு கண்டுபிடிப்பு உலக சந்தையில் மாபெரும் வெற்றிபெறும் எனத் தெரிவித்தார். இதுகுறித்து ஐஐடி கான்பூர் இணைப் பேராசிரியர் அமிதாபா பந்தோபாத்யாய் கூறுகையில், இந்த புதிய வகை காற்று சுத்திகரிப்பு தொழில்நுட்பம் வைரஸ் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் மற்றும் சுத்திகரிக்கும். இதனால் குளிர்சாதன பெட்டியிலிருந்து வெளியேறும் காற்றில் இருந்து ஒவ்வாமை, கிருமிகள் பரவல் உள்ளிட்டவை முற்றிலும் கட்டுப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தனியார் விண்வெளி நிறுவனங்கள் இஸ்ரோவின் திறன்களுக்கு கூடுதல் வலுசேர்க்கும்: ஜிதேந்திர சிங்

கான்பூர்: ஐஐடி கான்பூரின் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று குளிர்சாதன பெட்டிகளை மலிவு விலை காற்று சுத்திகரிப்பு சாதனங்களாக மாற்றும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தை ஐஐடி கான்பூர் மற்றும் ஐஐஎஸ்சி பெங்களூருவை சேர்ந்த பேராசிரியர்கள் இணைந்து கண்டுபிடித்துள்ளனர். இதில் ஏர் ஃபில்டர்களால் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பு காற்று சுத்திகரிப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஏர் ஃபில்டர்களில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை குளிர்சாதன பெட்டிகளில் பொருத்தும்போது உயிருக்கு ஆபத்தான வைரஸ்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இது மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபனமாகியுள்ளது. இதுகுறித்து ஐஐடி கான்பூர் பேராசிரியர் அங்குஷ் ஷர்மா கூறுகையில், பொதுவாக குளிர் மற்றும் மழைகாலத்தில் காற்றில் அதிகப்படியான வைரஸ்கள் பரவுகின்றன. இந்த வைரஸ்கள் இந்த புதுமையான ஏர் ஃபில்டர் சிஸ்டம் பொருத்தப்பட்ட குளிர்சாதனப்பெட்டி மூலம் 99 சதவீத வடிகட்டப்படுகின்றன.

அதோடு சுத்தகரிக்கப்பட்ட காற்று மட்டுமே வெளியேற்றப்படுகிறது. இந்த உள்நாட்டு கண்டுபிடிப்பு உலக சந்தையில் மாபெரும் வெற்றிபெறும் எனத் தெரிவித்தார். இதுகுறித்து ஐஐடி கான்பூர் இணைப் பேராசிரியர் அமிதாபா பந்தோபாத்யாய் கூறுகையில், இந்த புதிய வகை காற்று சுத்திகரிப்பு தொழில்நுட்பம் வைரஸ் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் மற்றும் சுத்திகரிக்கும். இதனால் குளிர்சாதன பெட்டியிலிருந்து வெளியேறும் காற்றில் இருந்து ஒவ்வாமை, கிருமிகள் பரவல் உள்ளிட்டவை முற்றிலும் கட்டுப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தனியார் விண்வெளி நிறுவனங்கள் இஸ்ரோவின் திறன்களுக்கு கூடுதல் வலுசேர்க்கும்: ஜிதேந்திர சிங்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.