ETV Bharat / opinion

இந்திய ரூபாயின் வீழ்ச்சி - நீங்கள் நினைப்பதை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்!

author img

By

Published : Aug 18, 2020, 3:46 PM IST

ஹைதராபாத்: அமெரிக்க டாலர் மற்றும் பிற நாடுகளின் பண மதிப்பை விட இந்திய ரூபாயின் மதிப்பு குறைவது நம் அன்றாட வாழ்க்கையை மட்டுமின்றி, எதிர்காலத்தையும் பாதிக்கும். இதுகுறித்து விவரிக்கிறது இத்தொகுப்பு...

Rupee depreciation
Rupee depreciation

1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றபோது, இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக இருந்தது. அதன்பிறகு இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்துவருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், அமெரிக்க டாலரை ஒப்பிடும்போது இந்திய ரூபாயின் மதிப்பு 70% குறைந்துள்ளது. அதேபோல் கோவிட் - 19 தொற்று பரவத் தொடங்கிய பின்னான ஆறு மாதங்களை கணக்கில் கொண்டால், இந்திய ரூபாயின் மதிப்பு 4% குறைந்து, ஒரு அமெரிக்க டாலர் 75 ரூபாயில் வந்து நிற்கிறது.

எளிய மக்கள் இந்திய ரூபாயின் வீழ்ச்சியை பெரிதாக கண்டுகொள்வதில்லை. அவர்கள் அதை அரசாங்கத்தின் பிரச்னையாகவும், இந்திய ரிசர்வ் வங்கி அல்லது கார்ப்பரேட்டுகளின் பிரச்னையாகவும் கருதுகின்றனர். ஆனால், அது அம்மக்களின் வாழ்வில் நினைத்துப் பார்க்க முடியாத விளைவுகளை ஏற்படுத்தும். இதுகுறித்து விரிவாக காண்போம்,

வெளிநாட்டில் கல்வி:

வெளிநாட்டில் கல்வி
வெளிநாட்டில் கல்வி

இந்திய பெற்றோர்களில் பலர் தங்கள் குழந்தைகளை வெளிநாட்டில் உள்ள நல்ல பல்கலைக்கழகங்களில் படிக்க வைக்க திட்டமிட்டிருப்பார்கள். இதற்காக அவர்கள் சிறுக சிறுக பணத்தை சேமித்திருப்பார்கள். ஆனால், இந்திய ரூபாயின் வீழ்ச்சி காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் கனவு கலைந்துபோனது.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் கல்விக் கட்டணத்தை உயர்த்தாது என நீங்கள் நினைக்கலாம். ஆனால், இந்திய ரூபாயின் வீழ்ச்சி காரணமாக நீங்கள் திட்டமிட்டு வைத்திருந்த கட்டணத்தைக் காட்டிலும் அதிக பணம் செலுத்த நேரிடும்.

உதாரணமாக, அமெரிக்க பல்கலைக்கழகத்தில் 2010ஆம் ஆண்டு 1,000 டாலர்கள் கல்விக் கட்டணம் என்றால், ஒரு மாணவனின் பெற்றோர் அப்போது 45,000 ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால், தற்போதைய கணக்குப்படி அவர்கள் 75,000 ரூபாய் செலுத்த வேண்டும்.

கல்வி மட்டுமல்லாது மாணவரின் விடுதி கட்டணம், உணவு மற்றும் பிற செலவுகளையும் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியுள்ளது. இது அவர்களை பெரும் பொருளாதார சிக்கலுக்கு ஆளாக்குகிறது.

வெளிநாட்டு பயணம்:

வெளிநாட்டு பயணம்
வெளிநாட்டு பயணம்

போக்குவரத்து நிறுவனங்கள் கரோனா வைரஸ் பரவல் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

எனினும், சர்வதேச விமான சேவை தொடங்கிவிட்டால் போக்குவரத்து நிலை மாறிவிடும். பொதுமக்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுமுறை நாட்களை வெளிநாடுகளில் கழிக்க நினைப்பவர்கள், தங்கள் பயணச் செலவுகளை மனதில் வைத்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது. ஆனால், இந்திய ரூபாயின் வீழ்ச்சி அவர்கள் பயணச் செலவுகளை அதிகரிக்கிறது. பயணக் கட்டணம், தங்குமிட கட்டணம் மற்றும் ஷாப்பிங் செய்வதற்கு அதிக பணத்தை செலவு செய்ய வேண்டியுள்ளது.

இதனால் வெளிநாட்டு பயணத்துக்கு தற்போது திட்டமிடுபவர்கள், தாங்கள் பயணிக்கும் இடத்தை மாற்ற வேண்டியுள்ளது அல்லது திட்டத்தையே கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் விலை:

எரிபொருள் விலை
எரிபொருள் விலை

கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், இந்திய ரூபாயின் வீழ்ச்சியால் இந்த இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நாட்டில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துவருவது எளிய மனிதர்களை பொருளாதார நெருக்கடிக்கு ஆளாக்கும்.

டீசல் விலை அதிகரிப்பால் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கின்றன, இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் மறைமுகமாக அதிகரிக்கும்.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி:

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி

இந்திய ரூபாயின் சரிவு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையை அதிகரிக்கிறது. ஏனென்றால் அந்தப் பொருட்கள் அனைத்தும் அமெரிக்க டாலர்களில் விற்கப்படுகின்றன.

இந்திய ரூபாயில் சம்பளம் பெறும் ஒருவருக்கு இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரானிக் பொருட்கள், வாசனை திரவியங்கள், ஆடைகள் உள்ளிட்டவை விலையுயர்ந்ததாக மாறும்.

அதேபோல், தங்கள் தயாரிப்புகளுக்கான மூலப் பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் மற்றும் தொழில்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படும்.

பங்குச் சந்தை:

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

இந்திய ரூபாயில் ஏற்படும் சரிவு, பங்குச் சந்தையை நிலையற்றதாக மாற்றும்.

சென்செக்ஸ், நிஃப்டி குறியீடு நெகட்டிவ் மதிப்பில் செல்லத் தொடங்கும். இதனால் சிறிய முதலீட்டாளர்கள் தாங்கள் கடினமாக உழைத்து ஈட்டிய பணத்தை இழக்க நேரிடும்.

1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றபோது, இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக இருந்தது. அதன்பிறகு இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்துவருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், அமெரிக்க டாலரை ஒப்பிடும்போது இந்திய ரூபாயின் மதிப்பு 70% குறைந்துள்ளது. அதேபோல் கோவிட் - 19 தொற்று பரவத் தொடங்கிய பின்னான ஆறு மாதங்களை கணக்கில் கொண்டால், இந்திய ரூபாயின் மதிப்பு 4% குறைந்து, ஒரு அமெரிக்க டாலர் 75 ரூபாயில் வந்து நிற்கிறது.

எளிய மக்கள் இந்திய ரூபாயின் வீழ்ச்சியை பெரிதாக கண்டுகொள்வதில்லை. அவர்கள் அதை அரசாங்கத்தின் பிரச்னையாகவும், இந்திய ரிசர்வ் வங்கி அல்லது கார்ப்பரேட்டுகளின் பிரச்னையாகவும் கருதுகின்றனர். ஆனால், அது அம்மக்களின் வாழ்வில் நினைத்துப் பார்க்க முடியாத விளைவுகளை ஏற்படுத்தும். இதுகுறித்து விரிவாக காண்போம்,

வெளிநாட்டில் கல்வி:

வெளிநாட்டில் கல்வி
வெளிநாட்டில் கல்வி

இந்திய பெற்றோர்களில் பலர் தங்கள் குழந்தைகளை வெளிநாட்டில் உள்ள நல்ல பல்கலைக்கழகங்களில் படிக்க வைக்க திட்டமிட்டிருப்பார்கள். இதற்காக அவர்கள் சிறுக சிறுக பணத்தை சேமித்திருப்பார்கள். ஆனால், இந்திய ரூபாயின் வீழ்ச்சி காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் கனவு கலைந்துபோனது.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் கல்விக் கட்டணத்தை உயர்த்தாது என நீங்கள் நினைக்கலாம். ஆனால், இந்திய ரூபாயின் வீழ்ச்சி காரணமாக நீங்கள் திட்டமிட்டு வைத்திருந்த கட்டணத்தைக் காட்டிலும் அதிக பணம் செலுத்த நேரிடும்.

உதாரணமாக, அமெரிக்க பல்கலைக்கழகத்தில் 2010ஆம் ஆண்டு 1,000 டாலர்கள் கல்விக் கட்டணம் என்றால், ஒரு மாணவனின் பெற்றோர் அப்போது 45,000 ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால், தற்போதைய கணக்குப்படி அவர்கள் 75,000 ரூபாய் செலுத்த வேண்டும்.

கல்வி மட்டுமல்லாது மாணவரின் விடுதி கட்டணம், உணவு மற்றும் பிற செலவுகளையும் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியுள்ளது. இது அவர்களை பெரும் பொருளாதார சிக்கலுக்கு ஆளாக்குகிறது.

வெளிநாட்டு பயணம்:

வெளிநாட்டு பயணம்
வெளிநாட்டு பயணம்

போக்குவரத்து நிறுவனங்கள் கரோனா வைரஸ் பரவல் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

எனினும், சர்வதேச விமான சேவை தொடங்கிவிட்டால் போக்குவரத்து நிலை மாறிவிடும். பொதுமக்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுமுறை நாட்களை வெளிநாடுகளில் கழிக்க நினைப்பவர்கள், தங்கள் பயணச் செலவுகளை மனதில் வைத்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது. ஆனால், இந்திய ரூபாயின் வீழ்ச்சி அவர்கள் பயணச் செலவுகளை அதிகரிக்கிறது. பயணக் கட்டணம், தங்குமிட கட்டணம் மற்றும் ஷாப்பிங் செய்வதற்கு அதிக பணத்தை செலவு செய்ய வேண்டியுள்ளது.

இதனால் வெளிநாட்டு பயணத்துக்கு தற்போது திட்டமிடுபவர்கள், தாங்கள் பயணிக்கும் இடத்தை மாற்ற வேண்டியுள்ளது அல்லது திட்டத்தையே கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் விலை:

எரிபொருள் விலை
எரிபொருள் விலை

கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், இந்திய ரூபாயின் வீழ்ச்சியால் இந்த இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நாட்டில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துவருவது எளிய மனிதர்களை பொருளாதார நெருக்கடிக்கு ஆளாக்கும்.

டீசல் விலை அதிகரிப்பால் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கின்றன, இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் மறைமுகமாக அதிகரிக்கும்.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி:

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி

இந்திய ரூபாயின் சரிவு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையை அதிகரிக்கிறது. ஏனென்றால் அந்தப் பொருட்கள் அனைத்தும் அமெரிக்க டாலர்களில் விற்கப்படுகின்றன.

இந்திய ரூபாயில் சம்பளம் பெறும் ஒருவருக்கு இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரானிக் பொருட்கள், வாசனை திரவியங்கள், ஆடைகள் உள்ளிட்டவை விலையுயர்ந்ததாக மாறும்.

அதேபோல், தங்கள் தயாரிப்புகளுக்கான மூலப் பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் மற்றும் தொழில்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படும்.

பங்குச் சந்தை:

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

இந்திய ரூபாயில் ஏற்படும் சரிவு, பங்குச் சந்தையை நிலையற்றதாக மாற்றும்.

சென்செக்ஸ், நிஃப்டி குறியீடு நெகட்டிவ் மதிப்பில் செல்லத் தொடங்கும். இதனால் சிறிய முதலீட்டாளர்கள் தாங்கள் கடினமாக உழைத்து ஈட்டிய பணத்தை இழக்க நேரிடும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.