ETV Bharat / lifestyle

திருப்பரங்குன்றம் ஆனி ஊஞ்சல் உற்சவம் ரத்து!

author img

By

Published : Jun 14, 2021, 3:39 PM IST

கரோனா தொற்று காரணமாக திருப்பரங்குன்றம் கோயிலில் ஆனி ஊஞ்சல் உற்சவ விழா மற்றும் முப்பழ பூஜை விழா உள்ளிட்ட ஒன்பது நாள் திருவிழா ரத்து செய்யப்பட்டதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம் ஆனி ஊஞ்சல் உற்சவம் ரத்து
திருப்பரங்குன்றம் ஆனி ஊஞ்சல் உற்சவம் ரத்து

மதுரை: திருப்பரங்குன்றத்தில் ஆனி ஊஞ்சல் உற்சவ விழா ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அறுபடை வீடுகளில் முதற்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி ஊஞ்சல் உற்சவ விழா மற்றும் முப்பழ பூஜை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

தற்போது கரோனா தொற்று காரணமாக தமிழ்நாடு அரசு தரவுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி உள்ளதால் அனைத்து கோயில்களும் திறக்க கூடாது என அறிவித்துள்ளது.

இதனால், வைகாசி விசாகம் உள்ளிட்ட மிக பிரசித்தி பெற்ற திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டது என கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.

தற்போது ஜூன் 15ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஒன்பது நாள் திருவிழாவான ஆனி ஊஞ்சல் உற்சவ விழா மற்றும் முப்பழ பூஜை விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை: திருப்பரங்குன்றத்தில் ஆனி ஊஞ்சல் உற்சவ விழா ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அறுபடை வீடுகளில் முதற்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி ஊஞ்சல் உற்சவ விழா மற்றும் முப்பழ பூஜை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

தற்போது கரோனா தொற்று காரணமாக தமிழ்நாடு அரசு தரவுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி உள்ளதால் அனைத்து கோயில்களும் திறக்க கூடாது என அறிவித்துள்ளது.

இதனால், வைகாசி விசாகம் உள்ளிட்ட மிக பிரசித்தி பெற்ற திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டது என கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.

தற்போது ஜூன் 15ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஒன்பது நாள் திருவிழாவான ஆனி ஊஞ்சல் உற்சவ விழா மற்றும் முப்பழ பூஜை விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.