ETV Bharat / jagte-raho

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோவில் கைது!

author img

By

Published : Oct 23, 2020, 10:44 PM IST

சாலையில் நடந்து சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர்.

pocso_arrest
pocso_arrest

கோயம்புத்தூர் : கோவையில், 15 வயது சிறுமி ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து விட்டு தப்பி செல்ல முயன்றுள்ளார்.

சிறுமி சப்தமிட்டதைத் தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் தப்பி ஓட முயன்ற இளைஞரை பிடித்து குனியமுத்தூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர் போத்தனூர் பகுதியை சேர்ந்த சுதர்சன் (28) என்பதும், தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதும் தெரிய வந்தது.

சிறுமியின் பெற்றொர் அளித்த புகாரின் பேரில், சுதர்சன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், அவரைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.


இதையும் படிங்க : 2 சிறுமிகளுக்கு திருமண ஆசை காட்டி கடத்திய நால்வர் கைது!

கோயம்புத்தூர் : கோவையில், 15 வயது சிறுமி ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து விட்டு தப்பி செல்ல முயன்றுள்ளார்.

சிறுமி சப்தமிட்டதைத் தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் தப்பி ஓட முயன்ற இளைஞரை பிடித்து குனியமுத்தூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர் போத்தனூர் பகுதியை சேர்ந்த சுதர்சன் (28) என்பதும், தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதும் தெரிய வந்தது.

சிறுமியின் பெற்றொர் அளித்த புகாரின் பேரில், சுதர்சன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், அவரைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.


இதையும் படிங்க : 2 சிறுமிகளுக்கு திருமண ஆசை காட்டி கடத்திய நால்வர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.