ETV Bharat / jagte-raho

வீட்டு மாடியில் இளைஞர் சடலம்: கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை - வீட்டு மாடியில் இளைஞர் சடலம்: கொலையா? தற்கொலையா? காவல்துறை விசாரணை!

தூத்துக்குடி: பூபால்ராயபுரத்தில் வீட்டு மாடியில் அழுகிய நிலையில் இளைஞர் சடலம் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டு மாடியில் இளைஞர் சடலம்: கொலையா? தற்கொலையா? காவல்துறை விசாரணை!
வீட்டு மாடியில் இளைஞர் சடலம்: கொலையா? தற்கொலையா? காவல்துறை விசாரணை!
author img

By

Published : Apr 14, 2020, 8:40 AM IST

தூத்துக்குடி பூபால்ராயபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர்கள் குமார் - எவரெஸ்ட் மேரி தம்பதியினர். இவர்களுடைய மகன் சஞ்சய் (19) என்பவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாகத் தெரிகிறது. அடிக்கடி மது அருந்திவிட்டு தந்தையுடன் தகராறில் ஈடுபடுவார் எனவும் கூறப்படுகிறது. இதனால் வீட்டிற்குள் தந்தையும் - மகனும் ஒருவருக்கு ஒருவர் பேசாமலேயே இருந்து வந்துள்ளனர்.

இதற்கிடையே கடந்த நான்கு நாட்களாக வீட்டிலிருந்து சஞ்சய் மாயமானதாகத் தெரிகிறது. இதுகுறித்து அவர்களின் பெற்றோரும் பெரிதாகக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இந்நிலையில், இன்று காலை குமார் வீட்டின் மாடிப்பகுதியிலிருந்து அக்கம்பக்கத்தினருக்கு துர்நாற்றம் எடுத்துள்ளது. இதுகுறித்து அவர்கள் குமாரிடம் தெரியப்படுத்தவே, அவர் மாடிக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் மாடியில் அழுகிய நிலையில் சஞ்சய் இறந்து கிடப்பது தெரியவந்துள்ளது.

வீட்டு மாடியில் இளைஞர் சடலம்: கொலையா? தற்கொலையா?

இதுகுறித்து தகவல் தூத்துக்குடி வடபாகம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், காவல் துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், வீட்டிலிருந்த பூச்சி மருந்து பாட்டில் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனதாக குமார் தெரிவித்துள்ளார். இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே, இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து தெரியவரும். இந்த சம்பவம் குறித்து வடபாகம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க...தடை உத்தரவு மீறல்: விழுப்புரத்தில் 3,174 வழக்குகள் பதிவு

தூத்துக்குடி பூபால்ராயபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர்கள் குமார் - எவரெஸ்ட் மேரி தம்பதியினர். இவர்களுடைய மகன் சஞ்சய் (19) என்பவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாகத் தெரிகிறது. அடிக்கடி மது அருந்திவிட்டு தந்தையுடன் தகராறில் ஈடுபடுவார் எனவும் கூறப்படுகிறது. இதனால் வீட்டிற்குள் தந்தையும் - மகனும் ஒருவருக்கு ஒருவர் பேசாமலேயே இருந்து வந்துள்ளனர்.

இதற்கிடையே கடந்த நான்கு நாட்களாக வீட்டிலிருந்து சஞ்சய் மாயமானதாகத் தெரிகிறது. இதுகுறித்து அவர்களின் பெற்றோரும் பெரிதாகக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இந்நிலையில், இன்று காலை குமார் வீட்டின் மாடிப்பகுதியிலிருந்து அக்கம்பக்கத்தினருக்கு துர்நாற்றம் எடுத்துள்ளது. இதுகுறித்து அவர்கள் குமாரிடம் தெரியப்படுத்தவே, அவர் மாடிக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் மாடியில் அழுகிய நிலையில் சஞ்சய் இறந்து கிடப்பது தெரியவந்துள்ளது.

வீட்டு மாடியில் இளைஞர் சடலம்: கொலையா? தற்கொலையா?

இதுகுறித்து தகவல் தூத்துக்குடி வடபாகம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், காவல் துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், வீட்டிலிருந்த பூச்சி மருந்து பாட்டில் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனதாக குமார் தெரிவித்துள்ளார். இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே, இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து தெரியவரும். இந்த சம்பவம் குறித்து வடபாகம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க...தடை உத்தரவு மீறல்: விழுப்புரத்தில் 3,174 வழக்குகள் பதிவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.