ETV Bharat / jagte-raho

சவுகார்பேட்டை கொலை குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் அடைக்க பரிந்துரை!

author img

By

Published : Dec 14, 2020, 2:24 PM IST

சென்னை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைதான 6 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க காவல் ஆணையருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

murder
murder

சவுகார்பேட்டையில் கடந்த மாதம் 11 ஆம் தேதி தலில் சந்த், அவரது மனைவி புஷ்பா பாய் மற்றும் மகன் ஷீத்தல் ஆகியோர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இதில், குடும்பத்தகராறு காரணமாக ஷீத்தலின் மனைவி ஜெயமாலா மற்றும் அவரது சகோதர்களான விலாஷ், கைலாஷ், ராஜீவ் ஷிண்டே, விஜய் உத்தம், ரவீந்திர நாத்கர் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது.

இதனையடுத்து 6 பேரையும் டெல்லி, பூனே என இரண்டு மாநிலங்களில் வைத்து தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் துப்பாக்கி கொடுத்து உதவியதாக ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ராஜீவ் துபே என்பவரும் கைது செய்யப்பட்டார்.

பின்னர் 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கைதான ஜெயமாலா உள்ளிட்ட 6 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டுமென யானை கவுனி காவல்துறையினர் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளனர். இது குறித்து அவர் விரைவில் முடிவெடுப்பார் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க: டெல்லியில் ரயிலுக்கு காத்திருந்த பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

சவுகார்பேட்டையில் கடந்த மாதம் 11 ஆம் தேதி தலில் சந்த், அவரது மனைவி புஷ்பா பாய் மற்றும் மகன் ஷீத்தல் ஆகியோர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இதில், குடும்பத்தகராறு காரணமாக ஷீத்தலின் மனைவி ஜெயமாலா மற்றும் அவரது சகோதர்களான விலாஷ், கைலாஷ், ராஜீவ் ஷிண்டே, விஜய் உத்தம், ரவீந்திர நாத்கர் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது.

இதனையடுத்து 6 பேரையும் டெல்லி, பூனே என இரண்டு மாநிலங்களில் வைத்து தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் துப்பாக்கி கொடுத்து உதவியதாக ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ராஜீவ் துபே என்பவரும் கைது செய்யப்பட்டார்.

பின்னர் 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கைதான ஜெயமாலா உள்ளிட்ட 6 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டுமென யானை கவுனி காவல்துறையினர் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளனர். இது குறித்து அவர் விரைவில் முடிவெடுப்பார் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க: டெல்லியில் ரயிலுக்கு காத்திருந்த பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.