ETV Bharat / jagte-raho

போலீஸ் வருவதற்குள் தங்கும் விடுதியில் இருந்து கேங்ஸ்டர் விகாஸ் தப்பியோட்டம் :  இருவர் கைது!

author img

By

Published : Jul 8, 2020, 9:59 PM IST

சண்டிகர் (ஹரியானா) : கான்பூர் என்கவுன்ட்டர் வழக்கில் தேடப்பட்டு வரும் விகாஸ் தூபே, பரிதாபாத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்ததாக கிடைத்த தகவலை அடுத்து, ஹரியானா காவல் துறையினர் எச்சரிக்கை படுத்தப்பட்டுள்ளனர்.

vikas dubey
vikas dubey

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் எட்டுக் காவலர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், பிரபல கேங்ஸ்டர் விகாஸ் தூபேவை அம்மாநில சிறப்பு அதிரடிப்படை வலைவீசித் தேடிவருகிறது.

இந்நிலையில், விகாஸ் தூபே ஹரியானா மாநிலம், பரிதாபாத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருப்பதாகக் காவல் துறையினருக்குத் துப்பு கிடைத்தது.

இதனையடுத்து, ஹரியானா காவல் துறையினர் அந்த தங்கும் விடுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். ஆனால்,தங்கும் விடுதியில் முழுமையாகத் தேடியும் விகாஸ் தூபேவை கண்டுபிடிக்க முடியவில்லை.

பிறகு, அந்த விடுதியில் சிசிடிவி காட்சிகளைக் காவல் துறையினர் ஆராய்ந்த போது, கறுப்பு நிற சட்டை, ஜீன்ஸ், முகக் கவசம் அணிந்துகொண்டு விகாஸ் தூபே நின்றுகொண்டிருந்தது தெரியவந்தது.

தங்கும் விடுதி ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில், விகாஸ் தூரே வேறொருவராகத் தன்னை பாவித்துக்கொண்டு, அங்குத் தங்கியது தெரியவந்தது.

விகாஸ் தூரே தப்பிச் சென்ற போதிலும், அவரது மருமகன் பிரபாத் மிஷ்ரா உள்ளிட்ட இரண்டு கூட்டாளிகளைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மிஷ்ராவிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, ஹரியானா காவல் துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : கேங்ஸ்டர் விகாஸ் தூபேயின் முக்கியக் கூட்டாளியை என்கவுன்ட்டர் செய்த உ.பி. போலீஸ்

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் எட்டுக் காவலர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், பிரபல கேங்ஸ்டர் விகாஸ் தூபேவை அம்மாநில சிறப்பு அதிரடிப்படை வலைவீசித் தேடிவருகிறது.

இந்நிலையில், விகாஸ் தூபே ஹரியானா மாநிலம், பரிதாபாத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருப்பதாகக் காவல் துறையினருக்குத் துப்பு கிடைத்தது.

இதனையடுத்து, ஹரியானா காவல் துறையினர் அந்த தங்கும் விடுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். ஆனால்,தங்கும் விடுதியில் முழுமையாகத் தேடியும் விகாஸ் தூபேவை கண்டுபிடிக்க முடியவில்லை.

பிறகு, அந்த விடுதியில் சிசிடிவி காட்சிகளைக் காவல் துறையினர் ஆராய்ந்த போது, கறுப்பு நிற சட்டை, ஜீன்ஸ், முகக் கவசம் அணிந்துகொண்டு விகாஸ் தூபே நின்றுகொண்டிருந்தது தெரியவந்தது.

தங்கும் விடுதி ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில், விகாஸ் தூரே வேறொருவராகத் தன்னை பாவித்துக்கொண்டு, அங்குத் தங்கியது தெரியவந்தது.

விகாஸ் தூரே தப்பிச் சென்ற போதிலும், அவரது மருமகன் பிரபாத் மிஷ்ரா உள்ளிட்ட இரண்டு கூட்டாளிகளைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மிஷ்ராவிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, ஹரியானா காவல் துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : கேங்ஸ்டர் விகாஸ் தூபேயின் முக்கியக் கூட்டாளியை என்கவுன்ட்டர் செய்த உ.பி. போலீஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.