ETV Bharat / jagte-raho

மஸ்கட்டில் கொத்தடிமையாக இருந்த தமிழ்நாட்டுப் பெண் மீட்பு!

author img

By

Published : Dec 30, 2019, 6:29 PM IST

சென்னை: மஸ்கட்டிற்கு வீட்டு வேலைக்குச் சென்று கொடுமைப்படுத்தப்பட்ட தமிழ்நாட்டுப் பெண், தன்னாா்வ தொண்டு நிறுவனம் மூலம் மீட்கப்பட்டு இன்று தாயகம் திரும்பினார்.

woman
woman

வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்தவர் நதியா. வெளிநாட்டில் நல்ல ஊதியத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆம்பூரைச் சேர்ந்த முகவர் ஜெயக்குமாரி கூறியதன்பேரில், மஸ்கட் நாட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற நதியா மூன்று மாதங்கள் வேலை செய்துள்ளார். அதன்பின்னர் அவரிடம் தகாத முறையில் நடந்து, தினசரி அடித்துத் துன்புறுத்தி கொத்தடிமையாக மாற்றியிருக்கின்றனர். ஒருநாளைக்கு ஒருவேளை உணவு மட்டுமே கொடுக்கப்பட்ட நதியா, உறவினரைத் தொடர்பு கொண்டு நடக்கும் கொடுமைகளைக் கூறி, தன்னை ஊருக்கு எப்படியாவது அழைத்துச் செல்ல கூறியுள்ளார்.

பின்னர், நதியாவின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அவர்கள், ’ALL INDIA MOVEMENT FOR SERVICE’ என்ற அமைப்பின் உதவியை நாடியுள்ளனர்.

அந்த தனியார் அமைப்பினர், நதியாவிவை மஸ்கட் நாட்டிற்கு அனுப்பிவைத்த ஜெயக்குமாரியின் மூலம் பெங்களூருவைச் சேர்ந்த முகமது என்பவரிடம் பேசியுள்ளனர். அதற்கு இரண்டு லட்ச ரூபாய் கொடுத்தால்தான் நதியாவை அனுப்புவோம் என முகமது தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொண்ட தனியார் அமைப்பினர், அவர்கள் மூலமாக மஸ்கட் அரசிடம் பேசி நதியாவை சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்த நதியா கதறி அழுதார். உடல்முழுவதும் காயத் தழும்புகளுடன் காட்சியளித்த அவரை உறவினர்கள் தேற்றினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நதியா, ” என்னை அடித்து துன்புறுத்தி பல சித்ரவதைகள் செய்தனர். என்னைப்போல் பணத்திற்காக ஆசைப்பட்டு யாரும் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டாம். போலி முகவர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் ” எனக் கோரிக்கை விடுத்தார்.

அடித்து துன்புறுத்தி சித்திரவதைகள் செய்தனர் - நதியா கதறல்

இதையும் படிங்க: திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த மகளுக்கு சூடு வைத்த தாய் கைது!

வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்தவர் நதியா. வெளிநாட்டில் நல்ல ஊதியத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆம்பூரைச் சேர்ந்த முகவர் ஜெயக்குமாரி கூறியதன்பேரில், மஸ்கட் நாட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற நதியா மூன்று மாதங்கள் வேலை செய்துள்ளார். அதன்பின்னர் அவரிடம் தகாத முறையில் நடந்து, தினசரி அடித்துத் துன்புறுத்தி கொத்தடிமையாக மாற்றியிருக்கின்றனர். ஒருநாளைக்கு ஒருவேளை உணவு மட்டுமே கொடுக்கப்பட்ட நதியா, உறவினரைத் தொடர்பு கொண்டு நடக்கும் கொடுமைகளைக் கூறி, தன்னை ஊருக்கு எப்படியாவது அழைத்துச் செல்ல கூறியுள்ளார்.

பின்னர், நதியாவின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அவர்கள், ’ALL INDIA MOVEMENT FOR SERVICE’ என்ற அமைப்பின் உதவியை நாடியுள்ளனர்.

அந்த தனியார் அமைப்பினர், நதியாவிவை மஸ்கட் நாட்டிற்கு அனுப்பிவைத்த ஜெயக்குமாரியின் மூலம் பெங்களூருவைச் சேர்ந்த முகமது என்பவரிடம் பேசியுள்ளனர். அதற்கு இரண்டு லட்ச ரூபாய் கொடுத்தால்தான் நதியாவை அனுப்புவோம் என முகமது தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொண்ட தனியார் அமைப்பினர், அவர்கள் மூலமாக மஸ்கட் அரசிடம் பேசி நதியாவை சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்த நதியா கதறி அழுதார். உடல்முழுவதும் காயத் தழும்புகளுடன் காட்சியளித்த அவரை உறவினர்கள் தேற்றினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நதியா, ” என்னை அடித்து துன்புறுத்தி பல சித்ரவதைகள் செய்தனர். என்னைப்போல் பணத்திற்காக ஆசைப்பட்டு யாரும் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டாம். போலி முகவர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் ” எனக் கோரிக்கை விடுத்தார்.

அடித்து துன்புறுத்தி சித்திரவதைகள் செய்தனர் - நதியா கதறல்

இதையும் படிங்க: திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த மகளுக்கு சூடு வைத்த தாய் கைது!

Intro:மஸ்கட் நாட்டில் கொத்தடிமையாக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த பெண் மீட்புBody:மஸ்கட் நாட்டில் கொத்தடிமையாக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த பெண் மீட்பு

வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த நதியா(31) என்ற பெண் மஸ்கட்டில் வீட்டு வேலைக்காக சென்று 7 மாதங்கள் அங்கு கொத்தடிமையாக இருந்துள்ளார். அவரை தன்னாா்வ தொண்டு நிறுவனம் மூலம் மீட்கப்பட்டு இன்று சென்னை திரும்பினார்.

வெளிநாட்டில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக ஆம்பூரை சேர்ந்த ஏஜன்ட் ஜெயக்குமாரி என்பவர் அதே பகுதியை சேர்ந்த நதியா(31) என்பவரை மஸ்க்கட் நாட்டிற்கு அனுப்பிவைத்துள்ளார்.


வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல்
மருத்துவ பரிசோதனை முதல் பாஸ்போர்ட் விசா முதலானவை ஏற்பாடு செய்து அவரை மஸ்க்கட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு சென்ற அந்த பெண் மூன்று மாதங்கள் வேலை செய்துள்ளார்.பின்னர் சில தவறான செயல்களில் ஈடுபட சொல்லி, தினசரி அடித்து கொத்தடிமைபடுத்தி ,அங்கு கொத்தடிமையாக வைத்துயிருந்துள்ளனர்.மேலும் ஒரு வேளை உணவு கூட கொடுக்காமல் அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.

இந்நிலையில் உறவினருடன் தொடர்பு கொண்ட நதியா அவர்க்கு நேர்ந்த கொடுமையை கூறி தன்னை ஊருக்கு அழைத்து செல்ல கூறியுள்ளார்.

பின்னர் நதியாவின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நதியாவின் உறவினர்கள்(AIMS) ALL INDIA MOVEMENT FOR SERVICE என்ற அமைப்பிடம் நதியாவை காப்பாற்றுமாறு கூறியுள்ளனர்.

பின்னர் நதியாவின் மஸ்கட் நாட்டிற்கு அனுப்பிவைத்த ஜெயக்குமாரியை தொடர்புகொண்டு பேசியபோது நதியாவை நான் அனுப்பவில்லை பெங்களூருவைச் சேர்ந்த முகமது என்பவர் தான் அனுப்பி வைத்துள்ளார் என கூறியுள்ளார். உடனடியாக முகம்மதுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் நாங்கள் அனுப்பி வைப்போம் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தனியார் அமைப்பு இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு அவர்கள் மூலமாக மஸ்கட் நாட்டு அரசிடம் தெரியப்படுத்தி சென்னைக்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்து நதியாவை சென்னை அழைத்து வந்துள்ளனர்.

பின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நதியா என்னை அடித்து துன்புறுத்தி பல சித்திரவதைகளை செய்தனர் என்னைப் போல் பணத்திற்காக ஆசைப்பட்டு யாரும் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டாம் என கண்ணீர் மல்க கூறினார். போலி ஏஜெண்டுகள் யார் என்பதை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவ்வாறு கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.