ETV Bharat / jagte-raho

மாணவர்களிடம் கஞ்சா விற்பனை: பிகாரைச் சேர்ந்த இருவர் கைது

author img

By

Published : Feb 3, 2020, 12:05 PM IST

சென்னை: பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்துவந்த பிகாரைச் சேர்ந்த இருவரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். அவர்களிடமிருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.

arrest
arrest

ஆதம்பாக்கம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுவருவதாகக் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, ஆதம்பாக்கம் காவல் ஆய்வாளர் பாலன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடிவந்தனர்.

இந்நிலையில், பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் பகுதியில், தனியாக வீடு எடுத்து கஞ்சா, போதைப் பொருள்கள் விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. அதையடுத்து அந்த வீட்டிலிருந்த கௌரப் குமார் (20) மணிஷ் சிங் (23) ஆகிய இருவரையும் காவலர்கள் கைதுசெய்தனர்.

இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், பல மாதங்களாக அப்பகுதிகளில் உள்ள பள்ளிக் கல்லூரிகளுக்கு மாவா பாக்கெட், கஞ்சாவை விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. இதனையடுத்து, இருவரிடமிருந்தும் 9 கிலோ மாவா, சுமார் 1 கிலோ கஞ்சாவையும் காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய காவல் துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: வன்கொடுமைக்குள்ளாகி கொலைசெய்யப்பட்ட சிறுமி - காவல் துறை விசாரணை

ஆதம்பாக்கம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுவருவதாகக் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, ஆதம்பாக்கம் காவல் ஆய்வாளர் பாலன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடிவந்தனர்.

இந்நிலையில், பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் பகுதியில், தனியாக வீடு எடுத்து கஞ்சா, போதைப் பொருள்கள் விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. அதையடுத்து அந்த வீட்டிலிருந்த கௌரப் குமார் (20) மணிஷ் சிங் (23) ஆகிய இருவரையும் காவலர்கள் கைதுசெய்தனர்.

இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், பல மாதங்களாக அப்பகுதிகளில் உள்ள பள்ளிக் கல்லூரிகளுக்கு மாவா பாக்கெட், கஞ்சாவை விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. இதனையடுத்து, இருவரிடமிருந்தும் 9 கிலோ மாவா, சுமார் 1 கிலோ கஞ்சாவையும் காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய காவல் துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: வன்கொடுமைக்குள்ளாகி கொலைசெய்யப்பட்ட சிறுமி - காவல் துறை விசாரணை

Intro:ஆதம்பாக்கத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்தவர்கள் பிடிபட்டனர்Body:ஆதம்பாக்கத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்தவர்கள் பிடிபட்டனர்

சென்னை புறநகர் பகுதியான ஆதம்பாக்கம் அதன் சுற்றியுள்ள பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து

ஆதம்பாக்கம் காவல் ஆய்வாளர்
பாலன் தலைமையில் தனிப்படை ஒன்றை அமைத்து போலீசார் தேடி வந்தனர் இந்நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்
ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் பகுதியில் தனியாக வீடு எடுத்து கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதை அடுத்து கௌரப் குமார் (20) மணிஷ் சிங் (23) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இருவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர் விசாரணையில்

பல மாதங்களாக ஆதம்பாக்கம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு மாவா பாக்கெட் மற்றும் கஞ்சாவை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
பின்னர் இருவரிடமிருந்து 9 கிலோ மதிப்புடைய மாவா மற்றும் 1கிலோ 100 கிராம் மதிப்புள்ள கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்...Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.