ETV Bharat / jagte-raho

விளையாடச் சென்ற சிறுவர்கள் கூவம் ஆற்றில் மூழ்கி மரணம்!

author img

By

Published : Oct 6, 2019, 10:42 PM IST

சென்னை: விளையாடச் சென்ற சிறுவர்கள் இருவர் கூவம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஆயிரம்விளக்கு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பரிதாபமாக இறந்த சிறுவர்கள்

சென்னை மக்கீஸ் தோட்டம் பகுதியில் உள்ள கூவம் ஆற்றின் கரையில் ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஆற்றுக்குள் விழுந்த பந்தை எடுக்க சிறுவன் பிரதீப் (8) முயன்றபோது, ஆற்றுக்குள் தவறி விழுந்து மூழ்கினார். அவரை காப்பாற்ற ரித்தீஷ் குமார் (13), ஸ்டீபன் (12) ஆகிய சிறுவர்களும் ஆற்றில் இறங்கியுள்ளனர்.

பின்னர் ரித்தீஷ் குமாரும் சேற்றுக்குள் சிக்கிக்கொள்ள, அங்கிருந்த மற்ற சிறுவர்கள் கூச்சலிட்டு அனைவரையும் அழைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த எழும்பூர் தீயணைப்பு துறையினர் உடனடியாக சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட ரித்தீஷ் குமார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் ஆற்றில் இருந்து பிரதீப் சடலமாக மீட்கப்பட்டார். மற்றொரு சிறுவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மக்கீஸ் தோட்டம் பகுதியில் உள்ள கூவம் ஆற்றின் கரையில் ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஆற்றுக்குள் விழுந்த பந்தை எடுக்க சிறுவன் பிரதீப் (8) முயன்றபோது, ஆற்றுக்குள் தவறி விழுந்து மூழ்கினார். அவரை காப்பாற்ற ரித்தீஷ் குமார் (13), ஸ்டீபன் (12) ஆகிய சிறுவர்களும் ஆற்றில் இறங்கியுள்ளனர்.

பின்னர் ரித்தீஷ் குமாரும் சேற்றுக்குள் சிக்கிக்கொள்ள, அங்கிருந்த மற்ற சிறுவர்கள் கூச்சலிட்டு அனைவரையும் அழைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த எழும்பூர் தீயணைப்பு துறையினர் உடனடியாக சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட ரித்தீஷ் குமார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் ஆற்றில் இருந்து பிரதீப் சடலமாக மீட்கப்பட்டார். மற்றொரு சிறுவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க:

ஆற்றில் 60 பயணிகளுடன் முழ்கிய படகு - பிகாரில் சோகம்

Intro:Body:சென்னை ஆயிரம்விளக்கு பகுதியை சேர்ந்த சிறுவர்கள் கூவம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கிரீம்ஸ் சாலையை சேர்ந்த சிறுவர்கள் சிலர் மக்கீஸ் தோட்டம் பகுதியில் கூவம் ஆறு கரைப்பகுதியில் விளையடிக்கொண்டு இருந்தனர். அப்போது பிரதீப் என்பவர் கூவம் ஆற்றில் விழுந்து சேற்றில் மாட்டிக்கொள்ளவே, பிரதீப்பை காப்பாற்ற ரீதிஷ் குமார் உட்பட்ட சிறுவர்கள் கூவம் ஆற்றில் இறங்கி உள்ளனர். ஆனால் பிரதீப் மற்றும் ரீதிஷ் குமார் ஆகிய இருவரும் சேற்றில் சிக்கி ஆற்றின் உள்ளே மூழ்கினர். தகவலறிந்த எழும்பூர் தீயணைப்பு துறையினர் சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ரீதீஷ்குமார் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் பிரதீப்பின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.