ETV Bharat / jagte-raho

தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீற முயன்றவர் கைது!

author img

By

Published : Jan 24, 2021, 12:10 AM IST

செஞ்சி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தண்ணீர் கேட்பது போல கேட்டு, அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்ணிடம் அத்துமீறி முயன்றவர் கைது
பெண்ணிடம் அத்துமீறி முயன்றவர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நாட்டார்மங்கலம் கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்பதைப் போல் வந்த நபர், இந்தப் பெண்ணை கையை பிடித்து இழுத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்து அந்தப் பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் வருவதைக் கண்ட அந்நபர் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார்.

தப்பி ஓடியவரை மடக்கிப் பிடித்த பகுதிவாசி பொதுமக்கள், செஞ்சி காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த செஞ்சி காவல்துறையினர். அந்த நபரை பிடித்து விசாரித்ததில், அவர் திண்டிவனம் கிடங்கல் பகுதியை சேர்ந்த ஏசுதாஸ் (36) என்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து அவர் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, செஞ்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்திவந்த இருவர் கைது!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நாட்டார்மங்கலம் கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்பதைப் போல் வந்த நபர், இந்தப் பெண்ணை கையை பிடித்து இழுத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்து அந்தப் பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் வருவதைக் கண்ட அந்நபர் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார்.

தப்பி ஓடியவரை மடக்கிப் பிடித்த பகுதிவாசி பொதுமக்கள், செஞ்சி காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த செஞ்சி காவல்துறையினர். அந்த நபரை பிடித்து விசாரித்ததில், அவர் திண்டிவனம் கிடங்கல் பகுதியை சேர்ந்த ஏசுதாஸ் (36) என்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து அவர் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, செஞ்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்திவந்த இருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.