ETV Bharat / jagte-raho

சாதிப் பெயரைச் சொல்லி திட்டிய ஓட்டுநர்... காலணி காண்பித்த பெண்! - தஞ்சையில் பரபரப்பு - ஓட்டுநரை செருப்பால் அடித்த பெண்

தஞ்சாவூர்: அரசுப் பேருந்து ஓட்டுநர் பெண் பயணியை சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதால் அப்பெண் காலணியை கழற்றி காட்டியுள்ளார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஓட்டுனர்கள் சாலைமறியல்!
author img

By

Published : Sep 17, 2019, 11:58 AM IST

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம், திருவையாறு பேருந்துகள் நிற்கும் பேருந்து நிலையம் ஆகியன கரந்தை அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே உள்ள தற்காலிக பேருந்து நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த ஒருவாரமாக தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் பூண்டியிலிருந்து தஞ்சை தற்காலிக பேருந்து நிலையத்திற்கு வந்த அரசுப் பேருந்தில் மணக்கரம்பையில் ஏறிய பெண் பயணி ஒருவர் கரந்தை போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு இறங்குவதற்கு பயணச்சீட்டு எடுத்துள்ளார்.

பேருந்தை அங்கு நிறுத்தும்போது மற்ற பயணிகள் இறங்கியுள்ளனர். ஆனால் அந்தப் பெண் பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்தார். பேருந்து அங்கிருந்து தற்காலிக பேருந்து நிலையத்திற்குள் வந்து நின்றவுடன் அந்தப் பெண், "நான் போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு இறங்குவதற்குதான் பயணச்சீட்டு எடுத்தேன். நான் தூங்கினாலும், என்னை எழுப்பி இறக்கிவிட்டு இருக்க வேண்டும்" எனச் சொல்லியுள்ளார். இது தொடர்பாக ஓட்டுநருக்கும் அந்தப் பயணிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பெண் பயணி தாக்கப்பட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் ஓட்டுநரை நோக்கி காலணியை கழற்றி காட்டியதாகக் கூறப்படுகிறது. அதன்பேரில் பேருந்து நிலையத்திற்கு வந்த மற்ற ஓட்டுநர்களும் நடத்துநர்களும் பேருந்தை நிறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த தஞ்சை மேற்கு காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பெண் பயணி காலணியை கழற்றி அடித்ததாக ஓட்டுநரும், சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கியதால் தான் காலணியை கழற்றி காண்பித்ததாகவும் அந்தப் பெண்ணும் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம், திருவையாறு பேருந்துகள் நிற்கும் பேருந்து நிலையம் ஆகியன கரந்தை அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே உள்ள தற்காலிக பேருந்து நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த ஒருவாரமாக தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் பூண்டியிலிருந்து தஞ்சை தற்காலிக பேருந்து நிலையத்திற்கு வந்த அரசுப் பேருந்தில் மணக்கரம்பையில் ஏறிய பெண் பயணி ஒருவர் கரந்தை போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு இறங்குவதற்கு பயணச்சீட்டு எடுத்துள்ளார்.

பேருந்தை அங்கு நிறுத்தும்போது மற்ற பயணிகள் இறங்கியுள்ளனர். ஆனால் அந்தப் பெண் பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்தார். பேருந்து அங்கிருந்து தற்காலிக பேருந்து நிலையத்திற்குள் வந்து நின்றவுடன் அந்தப் பெண், "நான் போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு இறங்குவதற்குதான் பயணச்சீட்டு எடுத்தேன். நான் தூங்கினாலும், என்னை எழுப்பி இறக்கிவிட்டு இருக்க வேண்டும்" எனச் சொல்லியுள்ளார். இது தொடர்பாக ஓட்டுநருக்கும் அந்தப் பயணிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பெண் பயணி தாக்கப்பட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் ஓட்டுநரை நோக்கி காலணியை கழற்றி காட்டியதாகக் கூறப்படுகிறது. அதன்பேரில் பேருந்து நிலையத்திற்கு வந்த மற்ற ஓட்டுநர்களும் நடத்துநர்களும் பேருந்தை நிறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த தஞ்சை மேற்கு காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பெண் பயணி காலணியை கழற்றி அடித்ததாக ஓட்டுநரும், சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கியதால் தான் காலணியை கழற்றி காண்பித்ததாகவும் அந்தப் பெண்ணும் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.

Intro:தஞ்சாவூர்,செப்.16


ஸ்டாபில் இறக்கிவிட மறுத்த டிரைவரை செருப்பால் அடித்த பெண் அதிரமடைந்த சக பஸ் ஓட்டுனர் நடத்துனர்கள் சாலைமறியல் Body:
தஞ்சை பழைய பஸ் நிலையம் மற்றும் திருவையாறு பஸ்கள் நிற்கும் பஸ் நிலையம் கரந்தை அரசு போக்குவரத்துக்கழக
பணிமனை அருகே உள்ள தற்காலிக பஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அதன்படி கடந்த ஒரு வாரமாக
தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பூண்டியில் இருந்து தஞ்சை தற்காலிக பஸ் நிலையத்துக்கு அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது.
இந்த பஸ் மணக்கரம்பை வந்த போது ஒரு பெண் பயணி பஸ்சில் ஏறி உள்ளார். அவர் தற்காலிக பஸ் நிலையத்திற்கு
வெளியே கரந்தை போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு இறங்குவதற்கு டிக்கெட் எடுத்துள்ளார்.
வாய்த்தகராறு
ஆனால் பஸ் பணிமனை அருகில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்திற்கு வந்து நின்றது. அப்போது அந்த பெண் நான்
போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு தானே இறங்குவதற்கு டிக்கெட் எடுத்தேன். ஏன் இறக்கி விடவில்லை என கேட்டுள்ளார்.
அதற்கு பணிமனை முன்பு 10 பயணிகள் இறங்கினர். அப்போது நீங்கள் எதற்கு இறங்கவில்லை என கேட்டுள்ளார்.
நான் தூங்கினாலும், என்னை இறக்கி விட்டு இருக்க வேண்டும் என்று அந்த பயணி கேட்டுள்ளார். இது தொடர்பாக டிரைவருக்கும்,
அந்த பயணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. டிரைவருக்கு ஆதரவாக பஸ் கண்டக்டரும் வந்துள்ளார். அப்போது
அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
தாக்குதல்
இந்த தகராறின் போது பெண் பயணி தாக்கப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பெண் பயணி செருப்பை எடுத்து காட்டி
மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வந்த மற்ற பஸ்களின் டிரைவர், கண்டக்டர்களும் பஸ்சை
அப்படியே நிறுத்தி விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் அந்த பெண்ணை, அருகில் இருந்த போக்குவரத்து கழக அறைக்கு அழைத்துச்சென்று அமரவைத்தனர். இது குறித்து
தஞ்சை மேற்கு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து
வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அந்த பெண்ணையும் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்.
போலீசில் புகார்
இது குறித்து பஸ் டிரைவர் கொடுத்த புகாரில், பெண் பயணி செருப்பை கழற்றி அடித்ததாக கூறி உள்ளார். அந்த பெண்
பயணி கொடுத்த புகாரில், தன்னை சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கியதால் தான், செருப்பை கழற்றி காண்பித்தேன் என
கூறி உள்ளார். 2 பேரின் புகாரையும் பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.