ETV Bharat / jagte-raho

அரிசிக் கடை திருட்டு; சிசிடிவி காட்சியைக் கொண்டு காவல்துறை விசாரணை! - அரிசி கடையில் திருட்டு

திருப்பூர்: அரிசிக் கடையின் மேற்கூரையை உடைத்து  கல்லாவில் இருந்து பணம் திருடிய மர்மநபர் குறித்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

CCTV
author img

By

Published : Sep 11, 2019, 2:13 PM IST

திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் அருகே உள்ள சக்திநகர் பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ்குமார். இவர் அதே பகுதியில் அரிசிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு வழக்கம்போல் கடையை அடைத்து பூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் மீண்டும் காலையில் வந்து கடையைத் திறந்துள்ளார்.

அப்போது, கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த 3000 ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடையின் மேற்கூரையை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து சிசிடிவி கேமராக்களை திருப்பி வைத்துவிட்டு கொள்ளையடித்தது தெரியவந்தது.

அரிசி கடையில் பணம் திருட்டு

இந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு சுரேஷ்குமார் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் அருகே உள்ள சக்திநகர் பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ்குமார். இவர் அதே பகுதியில் அரிசிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு வழக்கம்போல் கடையை அடைத்து பூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் மீண்டும் காலையில் வந்து கடையைத் திறந்துள்ளார்.

அப்போது, கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த 3000 ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடையின் மேற்கூரையை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து சிசிடிவி கேமராக்களை திருப்பி வைத்துவிட்டு கொள்ளையடித்தது தெரியவந்தது.

அரிசி கடையில் பணம் திருட்டு

இந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு சுரேஷ்குமார் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:அரிசி கடையின் மேற்கூரையை உடைத்து கல்லாவில் இருந்த பணம் திருட்டு சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை.

Body:திருப்பூர் போயம்பாளையம் சக்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ்குமார் இவர் அதே பகுதியில் அரிசி கடை நடத்தி வருகிறார் நேற்று இரவு வழக்கம்போல் கடையை அடைத்துவிட்டு சென்றவர் மீண்டும் காலையில் வந்து பார்த்தபோது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த 3000 ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது கடையின் மேற்கூரையை உடைத்து கொண்டு உள்ளே நுழையும் நபர் சிசிடிவி கேமராக்களை திருப்பி வைத்துவிட்டு கொள்ளையடித்தது தெரியவந்தது. இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு சுரேஷ்குமார் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.