ETV Bharat / jagte-raho

தீராத வயிற்றுவலி: பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை?

author img

By

Published : Oct 30, 2020, 10:39 PM IST

Updated : Oct 30, 2020, 10:44 PM IST

திண்டுக்கல்: குஜிலியம்பாறை அருகே 14 வயது சிறுமி தீராத வயிற்று வலியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

மாணவி தூக்கிட்டு உயிரிழப்பு
மாணவி தூக்கிட்டு உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே பாளையத்தைச் சேர்ந்த கண்ணன், சசிகலா. இருவரும் கரூரில் உள்ள நூற்பாலையில் வேலைபார்த்து வருகிறார்கள். இவர்களது மகள் ஐஸ்வர்யா தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவருகிறார்.

இந்நிலையில் இன்று (அக். 30) காலையில் சசிகலா வேலைக்குச் சென்றவுடன் ஐஸ்வர்யா தனது துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் குஜிலியம்பாறை காவல் துறையினருக்குத் தகவல் அளித்ததன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குஜிலியம்பாறை காவல் துறையினர் ஐஸ்வர்யாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மாணவி தூக்கிட்டு உயிரிழப்பு

இது குறித்து உறவினர்கள் கூறுகையில், தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டுவந்ததால் மனவேதனையில் இருந்த ஐஸ்வர்யா தற்கொலை செய்துகொண்டிருப்பார் என்றனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: இலங்கைக்கு கடத்தவிருந்த 1200 கிலோ மஞ்சள் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே பாளையத்தைச் சேர்ந்த கண்ணன், சசிகலா. இருவரும் கரூரில் உள்ள நூற்பாலையில் வேலைபார்த்து வருகிறார்கள். இவர்களது மகள் ஐஸ்வர்யா தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவருகிறார்.

இந்நிலையில் இன்று (அக். 30) காலையில் சசிகலா வேலைக்குச் சென்றவுடன் ஐஸ்வர்யா தனது துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் குஜிலியம்பாறை காவல் துறையினருக்குத் தகவல் அளித்ததன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குஜிலியம்பாறை காவல் துறையினர் ஐஸ்வர்யாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மாணவி தூக்கிட்டு உயிரிழப்பு

இது குறித்து உறவினர்கள் கூறுகையில், தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டுவந்ததால் மனவேதனையில் இருந்த ஐஸ்வர்யா தற்கொலை செய்துகொண்டிருப்பார் என்றனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: இலங்கைக்கு கடத்தவிருந்த 1200 கிலோ மஞ்சள் பறிமுதல்

Last Updated : Oct 30, 2020, 10:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.