ETV Bharat / jagte-raho

ஆன்லைன் வகுப்புகள் புரியாததால் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!

சென்னை: ஆன்லைன் வகுப்புகள் புரியாததால் மன அழுத்தத்தில் இருந்த 17 வயது சிறுவன் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

author img

By

Published : Oct 30, 2020, 1:27 PM IST

online classes
online classes

சென்னை திருவிக நகர், தீட்டி தோட்டம் முதல் தெருவைச் சேர்ந்தவர் ஹேமந்த் குமார். நீதிமன்ற ஊழியராக பணிபுரிந்துவருகிறார். இவரது மனைவி சண்முகப்பிரியா. இவர்களுக்கு மாதவன் (17) என்ற மகன் உள்ளார். இவர் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கரோனா தொற்று காரணமாக, பள்ளிகள் திறக்கப்படாததால், ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வந்துள்ளார். சில மாதங்களாகவே மாதவன், ஆன்லைன் மூலம் வகுப்புகளில் எடுக்கும் பாடங்கள் புரியவில்லை என அடிக்கடி மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மாதவன் இன்று (அக்.29) மாலை 5 மணியளவில், தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தற்செயலாக அவரது அறைக்குச் சென்ற அவரது தாயார் மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, அக்கம் பக்கத்தினர் மாதவனை மீட்டு, பெரியார் நகர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மாதவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்த திருவிக நகர் காவல் துறையினர், மாதவனின் உடலை கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : குண்டர் சட்டத்தில் ஒரே நாளில் 3 பேர் கைது

சென்னை திருவிக நகர், தீட்டி தோட்டம் முதல் தெருவைச் சேர்ந்தவர் ஹேமந்த் குமார். நீதிமன்ற ஊழியராக பணிபுரிந்துவருகிறார். இவரது மனைவி சண்முகப்பிரியா. இவர்களுக்கு மாதவன் (17) என்ற மகன் உள்ளார். இவர் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கரோனா தொற்று காரணமாக, பள்ளிகள் திறக்கப்படாததால், ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வந்துள்ளார். சில மாதங்களாகவே மாதவன், ஆன்லைன் மூலம் வகுப்புகளில் எடுக்கும் பாடங்கள் புரியவில்லை என அடிக்கடி மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மாதவன் இன்று (அக்.29) மாலை 5 மணியளவில், தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தற்செயலாக அவரது அறைக்குச் சென்ற அவரது தாயார் மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, அக்கம் பக்கத்தினர் மாதவனை மீட்டு, பெரியார் நகர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மாதவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்த திருவிக நகர் காவல் துறையினர், மாதவனின் உடலை கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : குண்டர் சட்டத்தில் ஒரே நாளில் 3 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.