ETV Bharat / jagte-raho

மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை!

கரூர் : கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக தன் மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

author img

By

Published : Oct 19, 2020, 8:43 PM IST

 மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை
மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை

கரூர் மாவட்டம், லாலாப்பேட்டையை அடுத்துள்ள வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35). கூலித்தொழில் செய்துவரும் இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 30). சிபிக்ஷா (வயது 8), கிஷாந்த் (வயது 6), கிதிக் ஷா (வயது 3) ஆகிய மூன்று குழந்தைகள் இவர்களுக்கு உள்ளனர்.

இந்நிலையில், உடல் பரிசோதனைக்காக தன்னை மருத்துவமனை அழைத்துச் செல்லுமாறு முத்துலட்சுமி பல நாள்களாக தனது கணவரிடம் கேட்டு வந்ததாகவும், ஆனால் அவரை மருத்துமனைக்கு அழைத்துச் செல்லாமல் காலம் தாழ்த்தி வந்ததால், இருவருக்குமிடையே நேற்று தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த முத்துலட்சுமி, அரளி விதையை அரைத்து மூன்று குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தொடர்ந்து, குழந்தைகளின் அழுகுரல் கேட்டு அங்கு சென்ற அக்கம்பக்கத்தினர், உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து நான்கு பேரையும் குளித்தலை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதில், முத்துலட்சுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். குழந்தைகள் மூவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக தனது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து லாலாப்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டம், லாலாப்பேட்டையை அடுத்துள்ள வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35). கூலித்தொழில் செய்துவரும் இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 30). சிபிக்ஷா (வயது 8), கிஷாந்த் (வயது 6), கிதிக் ஷா (வயது 3) ஆகிய மூன்று குழந்தைகள் இவர்களுக்கு உள்ளனர்.

இந்நிலையில், உடல் பரிசோதனைக்காக தன்னை மருத்துவமனை அழைத்துச் செல்லுமாறு முத்துலட்சுமி பல நாள்களாக தனது கணவரிடம் கேட்டு வந்ததாகவும், ஆனால் அவரை மருத்துமனைக்கு அழைத்துச் செல்லாமல் காலம் தாழ்த்தி வந்ததால், இருவருக்குமிடையே நேற்று தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த முத்துலட்சுமி, அரளி விதையை அரைத்து மூன்று குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தொடர்ந்து, குழந்தைகளின் அழுகுரல் கேட்டு அங்கு சென்ற அக்கம்பக்கத்தினர், உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து நான்கு பேரையும் குளித்தலை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதில், முத்துலட்சுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். குழந்தைகள் மூவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக தனது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து லாலாப்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.