ETV Bharat / jagte-raho

திருத்தணி கல்குவாரியில் ஆண் சடலம் கண்டெடுப்பு

கல்குவாரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட ஆண் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா எனக் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

male-body
male-body
author img

By

Published : Oct 6, 2020, 7:08 PM IST

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்குள்பட்ட பெரியார் நகர் பகுதியில் கல்குவாரி ஒன்று உள்ளது. இதில், 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக அப்பகுதி மக்கள், திருத்தணி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், 50 அடி ஆழத்தில் சடலம் கிடப்பதைப் பார்த்து, தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரில் இருந்து சடலத்தை மீட்டனர்.

மீட்கப்பட்ட சடலம் உடற்கூராய்வுக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பின்னர், காவலர்கள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், இறந்தவர் திருத்தணி நகராட்சிக்குள்பட்ட அங்காய நாயுடு பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் (50) என்பதும், மெக்கானிக் கடை வைத்திருந்த இவர், இரண்டு நாட்களுக்கு முன் வீட்டிலிருந்து காணமல் போயுள்ளார் என்பதும் தெரியவந்தது.

இது குறித்து வழக்குப் பதிவுசெய்த காவல் துறையினர், வேலாயுதம் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க : குடும்பத்தகராறு: மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவன் - பதறவைக்கும் சிசிடிவி!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்குள்பட்ட பெரியார் நகர் பகுதியில் கல்குவாரி ஒன்று உள்ளது. இதில், 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக அப்பகுதி மக்கள், திருத்தணி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், 50 அடி ஆழத்தில் சடலம் கிடப்பதைப் பார்த்து, தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரில் இருந்து சடலத்தை மீட்டனர்.

மீட்கப்பட்ட சடலம் உடற்கூராய்வுக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பின்னர், காவலர்கள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், இறந்தவர் திருத்தணி நகராட்சிக்குள்பட்ட அங்காய நாயுடு பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் (50) என்பதும், மெக்கானிக் கடை வைத்திருந்த இவர், இரண்டு நாட்களுக்கு முன் வீட்டிலிருந்து காணமல் போயுள்ளார் என்பதும் தெரியவந்தது.

இது குறித்து வழக்குப் பதிவுசெய்த காவல் துறையினர், வேலாயுதம் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க : குடும்பத்தகராறு: மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவன் - பதறவைக்கும் சிசிடிவி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.