ETV Bharat / jagte-raho

கத்திமுனையில் நகை கொள்ளை - பிடிபட்ட நால்வர் சிறையிலடைப்பு!

author img

By

Published : Jan 25, 2020, 6:59 PM IST

சென்னை: பீர்க்கன்காரணை பகுதியில் நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கொள்ளையடித்த நான்கு நபர்களை சிசிடிவி காட்சிகளை வைத்து சிறப்புப் படை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

arrest
arrest

தாம்பரத்தையடுத்த பீர்க்கன்காரணை பகுதியில் நான்கு நாட்களுக்கு முன்பு, வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து சீனிவாசன் நகரைச் சேர்ந்த சுசித்ரா (46), மூவேந்தர் நகரைச் சேர்ந்த உஷா (29) ஆகியோரிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கத்தி முனையில் தங்கச்சங்கிலிகளை பறித்துச் சென்றனர்.

இதனையடுத்து இந்நிகழ்வு குறித்து வழக்குப்பதிவு செய்த பீர்க்கன்காரணை காவல் துறையினர், அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தனிப்படை அமைத்து, பெருங்களத்தூர் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நபர்களை மடக்கிப் பிடித்து விசாரித்த போது, அவர்கள் புனித தோமையர் மலை சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

கத்திமுனையில் நகை கொள்ளை - பிடிபட்ட நால்வர் சிறையிலடைப்பு

இதையடுத்து பெருங்களத்தூரைச் சேர்ந்த நவீன் குமார் (29), கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த கார்த்திக் (25), சந்தோஷ்குமார் (26), ஜெயராமன் (22) ஆகிய நான்கு நபர்களை கைது செய்த சிறப்புப்படை காவலர்கள், அவர்களிடமிருந்து ஆறரை சவரன் தங்க நகை, 63 கிராம் கவரிங் நகை மற்றும் இரண்டு செல்ஃபோன்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நால்வரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: தங்கக்கட்டி விற்பனை - நூதன முறையில் ரூ. 40 லட்சம் கொள்ளை!

தாம்பரத்தையடுத்த பீர்க்கன்காரணை பகுதியில் நான்கு நாட்களுக்கு முன்பு, வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து சீனிவாசன் நகரைச் சேர்ந்த சுசித்ரா (46), மூவேந்தர் நகரைச் சேர்ந்த உஷா (29) ஆகியோரிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கத்தி முனையில் தங்கச்சங்கிலிகளை பறித்துச் சென்றனர்.

இதனையடுத்து இந்நிகழ்வு குறித்து வழக்குப்பதிவு செய்த பீர்க்கன்காரணை காவல் துறையினர், அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தனிப்படை அமைத்து, பெருங்களத்தூர் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நபர்களை மடக்கிப் பிடித்து விசாரித்த போது, அவர்கள் புனித தோமையர் மலை சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

கத்திமுனையில் நகை கொள்ளை - பிடிபட்ட நால்வர் சிறையிலடைப்பு

இதையடுத்து பெருங்களத்தூரைச் சேர்ந்த நவீன் குமார் (29), கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த கார்த்திக் (25), சந்தோஷ்குமார் (26), ஜெயராமன் (22) ஆகிய நான்கு நபர்களை கைது செய்த சிறப்புப்படை காவலர்கள், அவர்களிடமிருந்து ஆறரை சவரன் தங்க நகை, 63 கிராம் கவரிங் நகை மற்றும் இரண்டு செல்ஃபோன்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நால்வரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: தங்கக்கட்டி விற்பனை - நூதன முறையில் ரூ. 40 லட்சம் கொள்ளை!

Intro:பீர்கன்காரனை பகுதியில் நான்கு நாட்களுக்கு முன்பு அடுத்து அடுத்து வீட்டில் தனியாக இருந்த பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கொள்ளையடித்த நாங்கு நபர்களை சி.சி.டி காட்சிகளை வைத்து கைது சிறையில் அடைத்த சிறப்பு படை போலிசார் Body:பீர்கன்காரனை பகுதியில் நான்கு நாட்களுக்கு முன்பு அடுத்து அடுத்து வீட்டில் தனியாக இருந்த பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கொள்ளையடித்த நாங்கு நபர்களை சி.சி.டி காட்சிகளை வைத்து கைது சிறையில் அடைத்த சிறப்பு படை போலிசார்

சென்னை தாம்பரம் அடுத்த பீர்கன்காரனை பகுதியில் நான்கு நாட்களுக்கு முன்பு அத்துமீறி நுழைந்து சீனிவாசன் நகரை சேர்ந்த சுசித்ரா (46) மற்றும் மூவேந்தர் நகரை சேர்ந்த உஷா(29) ஆகியோரிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கத்தி முனையில் கொள்ளையடித்து சென்றனர்.

இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த பீர்கன்காரனை போலிசார் சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் உதவி ஆணையர் சகாதேவன் தலைமையில் தனிபடை அமைக்கபட்டு பெருங்களத்தூர் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர் அப்போது சந்தேகத்திற்கிடமாக இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களை மடக்கி பிடித்து விசாரித்த போது புனித தோமையர் மலை சரக்கித்திக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து பெருங்களத்தூரை சேர்ந்த நவீன் குமார் (29), கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த கார்த்திக் (25),சந்தோஷ்குமார் (26),ஜெயராமன் (22) ஆகிய நான்கு நபர்களை கைது செய்த சிற்ப்புபடை போலிசார் அவர்களிடமிருந்து 6.5 சவரன் தங்கை நகை,63 கிராம் எடையுள்ள கவரிங் நகை மற்றும் இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.